Sunday, December 6, 2015

மெய் சிலிர்க்கிறது

மெய் சிலிர்க்கிறது
உள்ளம் உருகி ஓடுகிறது

கருணை கண்டு
கருணை பொங்கி
கண்கள் கழன்று விழுகின்றன

எங்கும் நிறைந்து தமிழன்
சாதி மதம் பாராமல்
தன் உறவுகளுக்கு
உதவித்தள்ளுகிறான்
விடாப்பிடியாய்

மழை வெள்ளக் கேடுகளை
தூக்கிப் போட்டு மிதித்து
வெல்கிறான்

மிகப் பெரிய
நம்பிக்கையையல்லவா
இந்த மழை
நமக்குக் கொடுத்துவிட்டது

சென்னையில்
ஒட்டியும் ஒட்டாமல் வாழும்
ஒய்யார மக்களையும்
இப்படி
ஒட்ட வைக்கும் பசையையா
நீ பொழிந்தாய் மழையே
நீ வாழி

அன்புடன் புகாரி  

Anbudan Buhari

* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *
http://anbudanbuhari.blogspot.in/
-------------------------------------------------------------




















No comments:

LinkWithin

Related Posts with Thumbnails