Sunday, December 27, 2015

நெய்யாக உருகாதோ நெஞ்சம்.....(4)



தவறான நம்பிக்கை
தந்தறியாத் தலைவரிவர்
கவர்வதுபோல் கவர்ந்திடவே
காசினியில் யாருமுண்டோ (காசினி- உலகம்)

தாம்ஆற்றும் பணியெதிலும்
தடுமாற்றம் ஏதுமிலார்
ஏமாற்றும் வேலைஇலார்;
இவரன்றோ தனித்தலைவர்!

இன்னாசெய் மக்கள்தமை
எதிர்த்தொழிக்க வாய்ப்பிருந்தும்
நன்னயத்தைச் செய்(து,)அவர்க்கும்
ஞானம்வரச் செய்வாரே!

உறவினர்தம் நம்பிக்கை
ஒன்றுபடா திருந்தாலும்
பரிவோடே அவருறவைப்
பாராட்டும் நாகரிகர்!

உடன்பிறந்தார் தமைவிடவும்
உவந்து,(உ)வந்து நேசிக்கும்
படைகளையே உருவாக்கிப்
பாரெங்கும் பரப்புபவர்! (20)

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
----------------------------------------------------------
2nd pic. Islamic University of Al-Madhinah

Yembal Thajammul Mohammad

 ஏம்பல் தஜம்முல் முகம்மது

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails