Tuesday, January 31, 2012

A.R. புர்கானுடீன் ஜோஹன்ச்பர்க் படங்கள்( Burhanudeen's album)

A.R. புர்கானுடீன்.B,E.,  படங்கள்
 "He who does not travel does not know the value of men." -- Moorish proverb
"Love is the only flower that grows and blossoms Without the aid of the seasons." - Kahlil Gibran quotes

"A journey of a thousand miles must begin with a single step." -- Lao Tzu

"Travel and change of place impart new vigor to the mind." -- Seneca

"A wise traveler never despises his own country." -- Carlo Goldoni
You cannot change the circumstances, theseasons , or the wind, but you can change yourself. That is something you have charge of." Jim Rohn

துபாய் அருட்காட்சியத்தில் உள்ள மெழுகு சிலையுடன்   A.R. புர்கானுடீன்

என்ன படிக்கலாம்! எப்படி படிக்கலாம்!.


உனக்குள் சுரங்கம்
"வாழ்வின் லட்சியம்" மனிதவளம் மேம்படுகிறது

S.A.மன்சூர் அலி அவர்களுடன் கலந்துரையாடல்
M.அஷ்ரப் அலி, J.P.M. ஜவஹர் அலி

நீடூர் மன்சூர் அலி M.A., B.Ed., அவர்கள் சென்னை வண்டலூர் கிரஸன்ட் மேல் நிலைப்பள்ளியில் இஸ்லாமிய பாடவியல் (Islamic Studies) ஆசிரியராகவும், மாணவர் நல ஆலோசகராகவும், மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியவர்.

மன்சூர் அலி அவர்கள் தி கார்டன் அகாடமி (The Garden Academy)Please visit :http://www.thegardenacademy.in/) எனும் மனித வள மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் கல்வி நிறுவனங்களின் அழைப்புகளை ஏற்று, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மனித வள மேம்பாட்டுப் (Human Resource Development) பயிற்சி அளித்து வருகிறார்.

S.E.A. முஹம்மது அலி ஜின்னா
Jazakkallahu Hairan
நன்றி : http://niduronline.com/

Monday, January 30, 2012

இலாபம் பெருகும் பங்கு வணிகம்

இங்கிலாந்து நாட்டவரான சகோதரர் இத்ரிஸ் தவ்ஃபிக் கிருஸ்துவ (ரோமன் கத்தோலிக்கர்) பாதிரியாராக இருந்து, சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர். அவர் தற்சமயம் சிங்கப்பூரில் தொடர் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். முதல்நாள் சொற்பொழிவின் கேள்வி-பதில் நேரத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் சிறு கட்டுரை வடிவில்....


இரண்டே வார்த்தைகளில் தஃவா! இலாபம் பெருகும் பங்கு வணிகம்!!


இரண்டே வார்த்தைகளில் தஃவா செய்ய முடியுமா?


முடியும் என்கிறார் சகோதரர் இத்ரிஸ் தவ்ஃபிக். அவருடைய மனமாற்றத்திற்குக் காரணமாக இருந்தது ஒரு சிறுவனின் வார்த்தைகள்.


"ஒரு சிறுவனின் மூலமாகத்தான் எனக்கு இஸ்லாம் அறிமுகமானது.  கெய்ரோ நகர வீதி ஒன்றில் ஷூ பாலிஷ் செய்பவன் அவன்.  விடுமுறைக்காக எகிப்து வந்திருந்த நான், ஒருநாள் வீதியில் அவனைச் சந்தித்தபோது, வெள்ளைக்காரனாகிய என்னைப் பார்த்து முகமலர்ச்சியுடன், 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்றான் அவன்.  'உங்கள் மீது சாந்தி நிலவட்டும்' என்ற இந்த வார்த்தைகள் அவனுடைய உள்ளத்திலிருந்து வந்தது என்பதை நான் உணர்ந்தேன்"


"முதன் முதலாக எகிப்திற்குச் சென்றிருந்த நான், சில அரபிச் சொற்களை கற்று வைத்திருந்தேன்.  அடுத்த நாள் அந்தச் சிறுவன் இருக்கும் வீதியில் சென்றபோது, 'எப்படி இருக்கிறாய் நண்பனே?' என்று அரபியில் கேட்டேன்.  அவன் அதே முகமலர்ச்சியுடன் 'அல்ஹம்து லில்லாஹ்' என்றான்.  எல்லாப் புகழும் இறைவனுக்கே!"

நபித் தோழர்களின் சிறப்புகள்

3656. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைவனைத் தவிர வேறு) ஒருவரை நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூ பக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், அவர் (மார்க்கத்தில்) என் சகோதரரும், (இன்ப - துன்பம் யாவற்றிலும்) என் தோழரும் ஆவார்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :4 Book :62

3657. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உற்ற நண்பராக எவரையேனும் ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அவரையே (அபூ பக்ர் அவர்களையே) ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமே சிறந்ததாகும்.
இதை அய்யூப்(ரஹ்) (இக்ரிமா - ரஹ் - அவர்களிடமிருந்தும், அவர்கள் இப்னு அப்பாஸ் - ரலி - அவர்களிடமிருந்தும்) அறிவித்தார்கள்.
இதே ஹதீஸ் வேறொர் அறிவிப்பாளர் தொடர் வழியாக அய்யூப்(ரஹ்) அவர்களிடமிருந்தே அறிவிக்கப்படுகிறது.
Volume :4 Book :62
 -------------------------------------------------------------

அபூ பக்ர் சித்தீக் (ரலி) – உண்மையாளராகிறார்.

உமர் (ரலி) – நீதிக்கு ஒரு உமர் என்று பெயர் எடுக்கிறார்.

உத்மான் (ரலி) – வெட்க உணர்வை முழுமைப் படுத்தியவர் எனப் பெயர் பெறுகிறார்.

அலீ (ரலி) – வீரத்துக்கு முன்னுதாரணமாய்த் திகழ்கிறார்.

வணிகத் திறமையில் அப்துர் ரஹ்மான் பின் அஃவ்ப் (ரலி) முன்னிலையில் நிற்கிறார்.

இனிய குரலுக்குச் சொந்தக் காரராக பிலால் (ரலி) – இடம் பெற்றுக் கொள்கிறார்.

பறவைகளைக் கொஞ்சி வளர்க்க நுஃகைர் (ரலி) என்ற ஒரு நபித் தோழர் முன் வருகிறார்.

உடல் வலிமையை வெளிப் படுத்திக் காட்டுவதில் சில நபித் தோழர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

இந்த ஒரு பாடத்தை இன்று உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது

மேலும் படிக்க Article 5 – ஒவ்வொரு மனிதனும் ஒரு தனிப்பிறவியே!

 by நீடூர் SA மன்சூர் அலி M.A., B.Ed.,

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல்-குர்ஆன் 21: 107)

Thursday, January 26, 2012

M.O.H. பாரூக் மரைகாயர் இறைவனடி சேர்ந்தார்

  M.O.H. பாரூக் மரைகாயர்இறைவனடி சேர்ந்தார் ( இன்னாளிள்ளஹி வா இன்ன இலஹி ராஜிஊன்.)

 இன்று இரவு  உடல் நலம் பாதிப்பில் சென்னை  மருத்துவ மனையில் மருத்துவ பலனின்றி சுமார் 9-30  மணி அளவில் உயிர் பிரிந்தது.  லயோலா கல்லுரியில் படித்தவர் .இவர் எங்கள் உறவினரும் நண்பருமாவார் . அவரைப் பிரிந்து வருந்தும் அனைவருக்கும் மற்றும் அவரது குடும்பத்தார்க்கும் அல்லாஹ் அமைதியை தந்தருள்வானாக. ஆமின்
காரைக்காலைச் சேர்ந்த பாரூக் மரைக்காயர், அம்மாநில முதல்வராகவும், சபாநாயகராகவும், மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இனை அமைச்சராகவும், சவுதி அரேபியாவின் தூதராகவும், ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும் இருந்துள்ளார்.

EX CHIEF MINISTER OF PONDICHERRY, CURRENT GOVERNOR OF KERALA EXPIRED

அஸ் - ஸலாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு

அஸ்ஸலாமு அலைக்கும் (warah)

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் பிப்ரவரி 11 ம் தேதி அஸ் - ஸலாம் அறக்கட்டளை சார்பில் கல்வி விழிப்புணர்வு மாநாடு 
அஸ் - ஸலாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ளது. (அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) தாங்கள் அவசியம் கலந்துகொள்வதோடு தங்களூர் ஜமாஅத் நிர்வாகிகள் , கல்வியாளர்கள் மற்றும் சமுதாய ஆர்வலர்களையும் அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மிக்க அன்புடன்.
எ.எம். ஷாஜஹான்


Wednesday, January 25, 2012

மரணத்தைத் தடுக்க மார்க்கம் உண்டா?”

பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதி உலகம் தோன்றிய நாளிலிருந்து இவ்வுலகில் பிறந்த அனைவரும் இறந்து போனார்கள். இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் அனைவரும் இறக்கத்தான் போகிறார்கள். உலகம் அழியும் வரை இனி பிறக்கப் போகிறவர்களும் இறப்பது நிச்சயம். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒருவருக்கும் ஒருபோதும் சந்தேகமே இல்லை.
ஏக இறைவனை ஏற்றுக் கொண்டோரும், ஏராளமான தெய்வங்கள் இருப்பதாக நம்பிக் கொண்டிருப்போரும், இறைவனையே ஏற்க மறுத்தோரும் ‘மண்ணில் பிறந்த அனைவருக்கும் மரணம் நிச்சயம்” என்பதில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. கண் முன்னே காண்பதை நம்புவதற்கு அறிவும் தேவையில்லை, ஆராய்ச்சியும் தேவையில்லை.
‘மரணத்தைத் தடுக்க ஏதேனும் மார்க்கம் உண்டா?” என்று ஆராய்ச்சி செய்தவர்களும் கூட ஒரு நாள் மரணித்துப் போனார்கள். குறைந்த பட்சம் தங்களுக்கு ஏற்பட்ட மரணத்தைத் தள்ளிப் போடக் கூட அவர்களால் இயலாமற்போனது. நாம் அனைவரும் ஒரு நாள் இறப்பது உறுதி. இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் எப்போது இறப்போம்? எப்படி இறப்போம்? எந்த இடத்தில் இறப்போம்? அந்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.
…தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (திருக்குர்ஆன் 31:34)
நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (திருக்குர்ஆன் 4:78)

Monday, January 23, 2012

நமது அன்றாட உணவும் காய்கறிகளின் தன்மையும்

நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் ஆகியவைகள் உள்ளன. கார்போஹைட்ரேட் இயங்கும் சக்தியை தருகிறது. புரோட்டீன் உடலை வளர்க்கிறது. கொழுப்பு உடல் மாற்றத்தை தருகிறது. ஒரு மனிதன் தன் எடையை தக்க வைத்துக்கொள்ள குறைந்தது 30-35 கலோரி உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். எடை கூட இன்னும் நிறைய உணவு உட்கொள்ளவேண்டும். ஒரு மனிதன் தினமும் அவனுடைய உடல் எடையில் கிலோவிற்கு 30 மி.லி. தண்ணீர் பருகவேண்டும். அதே அளவு சிறுநீர் வெளியேர வேண்டும். இனிப்பு, உப்பு, துவர்ப்பு உள்ள பொருட்கள் மனிதனின் எடையை கூட்டும். கசப்பு, காரம், புளிப்பு ஆகிய பொருட்கள் மனிதனின் எடையை குறைக்கும்.
வாதம் உள்ளவர்கள் இனிப்பு, உப்பு, புளிப்பு ஆகிய பொருட்களை உண்ணலாம். பித்தம் உள்ளவர்கள் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய உணவுகளை உண்ணலாம். கபம் உள்ளவர்கள் கசப்பு, துவர்ப்பு, காரம் ஆகிய உணவுகளை உண்ணலாம். கசப்பு, புளிப்பு, காரம்; உடைய பொருள்கள் வாயுவை உண்டாக்கும். பயிறு வகைகளை 2 ஆக உடைத்தாலோ அல்லது பிரித்தாலோ இரைப்பையில் வாயு உண்டாகும். ஆகவே பயிறு வகைகளை தண்ணீரில் சில மணி நேரம் ஊர வைத்து சமைத்தல் வாயு உண்டாகாது.

Friday, January 20, 2012

மாவீரன் திப்பு சுல்தான்-இந்து முஸ்லிம் ஒற்றுமையின் பன்முக ஆளுமை - உலகின் முதல் ராக்கெட்டை ஏவிய விடுதலைப் போரின் விடிவெள்ளி- .

காந்திஜி ‘யங் இந்தியா’ 23 ஜனவரி 1930 தேதியிட்ட இதழில் பக்கம் 31-ல் இப்படி எழுதுகிறார்;

‘மைசூரின் பதேஹ்அலி திப்பு சுல்தானைப் பற்றி வெளிநாட்டு வரலாற்றாளர்கள் மதவெறியர் என்றும் இந்து குடிமக்களை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார் என்றும் எழுதுகிறார்கள்.

ஆனால் அவர் அப்படிப் பட்டவரல்ல. அதற்கு நேர்மாற்றமாக அவர் இந்துக்களுடன் நல்லிணக்கத்தை கடைப்பிடித்திருந்தார். சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியாருக்கு திப்பு எழுதிய 30-க்கும் மேற்பட்ட கடிதங்கள் மைசூர் அரசின் தொல்பொருள் ஆய்வு நிலையத்தில் இருக்கிறது.

அவை கன்னட மொழியில் எழுதப் பட்டவை. அவற்றில் ஒரு கடிதத்தில் திப்பு சங்கராச்சாரியாரின் கடிதம் தன்னிடம் கிடைக்கப்பெற்றதை தெரியப் படுத்தி, அவரை தனக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், மற்றும் உலக அமைதிக்காகவும் ஒரு யாகம் நடத்தச் சொல்லி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், நன்மக்கள் இருக்கும் இடத்தில்தான் மழை பெய்யும் என்பதைச் சொல்லி சிருங்கேரியிலிருந்த சங்கராச்சாரியாரை மைசூருக்கே திரும்ப வந்துவிடும்படியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அவரது இந்தக் கடிதம் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.’

மேலும் ‘திப்பு சுல்தான் இந்து முஸ்லிம் ஒற்றுமையின் உருவாக்கம்‘ எனவும் காந்தி ‘யங் இந்தியா’வில் எழுதினார்.

விக்கிரக ஆராதனையாளர்களை தரைமட்டமாக்கி அழித்த, எட்டாயிரம் ஆண்கள், பெண்கள் ஆகியோரை சிறைப்படுத்திய, காபிர்களில் ஆண்கள் சிறுவர்கள் என பேதமில்லாமல் அனைவர் கழுத்துக்களுக்கும் தலையை சுமக்கும் பாரம் இல்லாமலாக்கிய ஒருவரைப் பற்றி காந்தி ஏன் இப்படி எதிர்மறையான கருத்தைச் சொல்ல வேண்டும்?

சாரதா கோவிலை மறுநிர்மாணம் செய்வதற்காக சிருங்கேரி மடத்திலிருந்து சங்கராச்சாரியார் திப்பு சுல்தானுக்கு கடிதம் எழுதினார். திப்பு சங்கராச்சாரியார் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரங்களாக அவர் எழுதிய கடிதங்கள் இன்னும் இருக்கின்றன.

டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தனது ‘Present Cresis of Faiths’ என்ற நூலில் குறிப்பிட்டார், ‘திப்பு பல சந்தர்ப்பங்களில் சிருங்கேரி சங்கராச்சாரியாரிடம் நாட்டு நலனுக்காக பூசைகள் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

குறிப்பாக, ஒருமுறை சங்கராச்சாரியாரின் வழிகாட்டுதல்படி சஹஸ்ர சண்டி ஜபம் நடத்தப்பட்டபோது திப்பு மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தார்.

’ கோழிக்கோட்டில் உள்ள இந்துக்கள் அனைவரையும் இஸ்லாத்திற்கு கொண்டு வந்தது போதாமல் கொச்சியில் உள்ளவர்களையும் இஸ்லாமை தழுவச் செய்வது தன்னுடைய ஜிகாத் என்று அறிவித்த ஒருவருக்கு இந்துக்களின் ஆன்மீகத் தலைவரான சங்கராச்சாரியார் ஏன் கடிதம் எழுதினார்?

இஸ்லாமிய மத வெறியரான ஒருவர் நாட்டு நலனுக்காக இந்துமத முறைப்படி யாகங்கள் செய்யும்படி ஏன் சங்கராச்சாரியாரிடம் கேட்டுக் கொண்டார்?

‘இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியதால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்’ என்று வரலாற்று புத்தகத்தில் எழுதிய ஹரி பிரசாத் சாஸ்திரி அதற்கு ஆதாரமாக மைசூர் கெசட்டை காட்டினார்.

ஆனால் மைசூர் கெசட்டை ஆய்வு செய்து அதன் புதிய பதிப்பை எடிட் செய்த பேராசிரியர் ஸ்ரிகந்தையா, ‘3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூர் கெசட்டில் எங்குமே குறிப்பிடப் படவில்லை.

மைசூர் வரலாற்றை ஆய்வு செய்து வரும் ஒரு மாணவன் என்ற முறையில் நான் அடித்துச் சொல்வேன், இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை‘ என்கிறார். மைசூர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஸ்ரிகந்தையாவின் கண்ணில் படாத ஒரு சம்பவம் கல்கத்தா பல்கலைக் கழக சம்ஸ்கிருத துறைத் தலைவரான ஹரி பிரசாத் சாஸ்திரி கண்ணில் எப்படி பட்டது?

இந்திய வரலாறு எந்த அளவிற்கு திரிக்கப்பட்டு சாயமேற்றப்பட்டு உருமாறிக் கிடக்கிறது என்பதற்கு இவை மிகச்சிறிய உதாரணங்கள். வரலாற்றுத் திரிபுகளுக்கு மத்தியில் உண்மையைத் தேடுவது வைக்கோல் போருக்குள் ஊசியை தேடுவதை விட சிரமமானதாகியிருக்கிறது.

ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் பெரும் சவாலாகவும் இருந்தவர் திப்பு சுல்தான். ‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73) என்ற நூலில் குறிப்பிடுகிறார் ஜவஹர்லால் நேரு.

முதலாம் மற்றும் இரண்டாம் மைசூர் போர்களில் கடும் தோல்வியைச் சந்தித்த ஆங்கிலேயர், திப்புவை நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாது என்பதை புரிந்துக்கொண்டு அவர்களின் வழக்கமான ‘ஆயுதமான’ பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தினர். அன்று அவர்கள் விதைத்த விதை இன்றும் விஷ விருட்சமாக வளர்ந்து நின்று இந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.
*************
‘பாண்டிய மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.’-அ.பொன்னம்பலம், அப்பரும் சம்பந்தரும், சென்னை, 1983, Page 28

திப்புசுல்தான் பற்றிய ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை தனது கட்டுரையில் குறிப்பிட்ட பாரதி, மேற்கண்ட கொடுங்கோலனாகிய பாண்டிய மன்னனைப் பற்றியும் தனது கட்டுரைகளில் பிரஸ்தாபித்திருந்தாரென்றால் அவர் பொதுவாகவே அனைத்து மன்னர்கள் மேலும் ஆத்திரம் கொண்டவர் என்றும் அவரது எழுத்தில் நேர்மையும் யதார்த்தமும் இருக்கிறது என ஒப்புக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்கப் போவதில்லை.
***************

திப்பு சுல்தானுக்கு மிர்சதக் செய்த துரோகம் வரலாற்றில் குறிக்கப் பட்ட அளவிற்கு பூர்ணய்யாவின் துரோகம் குறிக்கப் படவில்லை. ஆனால் அவருக்கு இவர் சளைத்தவர் அல்ல. இவர்கள் இருவருமே ஆங்கிலேயருடன் இரகசியத் தொடர்பு வைத்திருந்து,

திப்புவின் மரணத்திற்கும் அவரது சாம்ராஜ்யம் வீழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். திப்பு இறந்தச் செய்தி கேட்ட தருணத்திலேயே, பிரிட்டிஷார் பூர்ணய்யாவை சரணடையச் சொன்னபோது ‘காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை எங்கள் இனத்தை பாதுகாத்து வரும் உங்களிடம் சரணடைய எனக்கென்ன தயக்கம்?‘ என்று ஜெனரல் ஹாரிஸிடம் சொல்லிச் சரணடைந்தவர் பூர்ணய்யா.

முதலில் ஹைதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானிடமும் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து கணப் பொழுதில் தன் நிலையை மாற்றிக் கொண்டவரை துரோகி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

‘திப்புவுக்கு எதிரான முதல் மூன்று போர்களில் ஆங்கியேரின் துப்பாக்கி சாதிக்காததை நான்காவது போரில் அவர்களின் பொன்னும் பொருளும் சாதித்தது. திப்புவின் அமைச்சர்கள் அவருக்கு துரோகம் இழைத்தனர்.

சரணடைய மறுத்த திப்பு வீரத்துடன் போரிட்டு மடிந்தார்’ என்று History of the Freedom Movement in India, (revised edn., Delhi, 1965, I, pp.226-27) என்ற நூலில் நூலாசிரியர் தாராசந்த் எழுதுகிறார். ‘திப்பு சுல்தானுக்கு துரோகம் இழைத்த பூர்ணய்யா ஒரு இந்து என்பதற்காக தான் வெட்கப்படுவதாக’ காந்தி ஒரு கட்டுரையில் எழுதியதும் இங்கு குறிப்பிடத் தக்கது. நன்றி: திண்ணை
ஆதாரச் சுட்டிகள்:Dr. K. Hussain - Prof Sheik Ali - http://www.tipusultan.org/index.htm About Dewan Purniah - http://www.kamat.com/jyotsna/blog/purnaiah.htm Dr. K.L. Kamat - http://www.kamat.com/kalranga/itihas/tippu.htm விடுதலை - http://viduthalai.com/20080106/news10.html கோபா வலைப்பதிவு - http://blackboards.blogspot.com/2007/01/blog-post_16.html சமண/பௌத்த மதங்களை அழித்த சைவம் - http://www.yarl.com/forum3/index.php?showtopic=16188&mode=threaded
நன்றி : http://ibnubasheer.blogsome.com/2008/02/15/p74/

Wednesday, January 18, 2012

பகைமை மறந்து பாசம் காட்டி வாழ்வோம்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியாரான ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் இப்னு மாலிக் இப்னி துஃபைல் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறினார்;
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா (தம் வீடு ஒன்றை) 'விற்றது தொடர்பாக' அல்லது 'நன்கொடையாக வழங்கியது தொடர்பாக' (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு (அதிருப்தியடைந்து) 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும். அல்லது தான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்' என்று கூறினார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, அவரா இப்படிக் கூறினார்?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம்' என்றனர். அப்போது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, 'இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும் பேசமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன்' என்று கூறிவிட்டார்கள்.

(எதிர்க்குரல்) புதிய அறிவியல் பொற்காலம்?



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..


அறிவியல் ஆர்வலர்களுக்கு இந்த பதிவு  புதிய அறிவியல் பொற்காலம்?

எவ்விதத்திலாவது உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்குமானால் அந்த புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...

பிரிட்டன் அரசுக்கு அறிவியல் ஆலோசனை வழங்கும் பாரம்பரியமிக்க நிறுவனமான "The Royal Society", இஸ்லாமிய உலகில் தற்போது நடைபெறும் அறிவியல் முன்னேற்றங்கள், கண்டுபிடிப்புகள்மற்றும் சவால்கள் குறித்த ஆய்வறிக்கையை, "புதிய பொற்காலம்? (A new golden age?)" என்ற தலைப்பில் வெளியிட்டது. இஸ்லாமிய அறிவியல் பொற்காலம் மறுபடியும் தற்போது திரும்புகின்றதா என்ற கேள்வி கேட்டு, அதற்கு படிப்பவர் புருவங்கள் உயருமாறு பதிலளிக்கின்றது இந்த அறிக்கை. 

தொடர்ந்து படிக்க.... http://www.ethirkkural.com/2012/01/blog-post.html

குறிப்பு: சகோதர சகோதரிகளின் பதிவுகள் பிடித்திருந்தால், அடுத்தவருக்கு பயனளிக்கும் என்று நீங்கள் கருதினால் தமிழ்மணம், இன்ட்லி, தமிழ்10 போன்ற திரட்டிகளில் வோட் அளித்து மேலும் பல முஸ்லிமல்லாதவர்களை அந்த பதிவுகள் சென்றடைய உதவுங்கள். இன்ஷா அல்லாஹ்.

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Monday, January 16, 2012

கல்கி - ஹிந்துக்களின் வேதாகமத்தில்....

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.

இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டிஎன்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

Friday, January 13, 2012

ஆழ்ந்த பார்வை, ஆச்சர்யமூட்டும் தகவல்கள்...

அஸ்ஸலாமு அலைக்கும்,
 
கிருத்துவர்களின் வேதமான பைபிள் இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம். பழைய மற்றும் புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படும் இவற்றில், மூஸா (அலை) மற்றும் அவருக்கு முந்தைய நபிமார்களின் வரலாற்றை பேசுவது பழைய ஏற்பாடு. ஈசா (அலை) அவர்களின் வரலாற்றை பேசுவது புதிய ஏற்பாடு. 

புதிய ஏற்பாட்டில் உள்ள நான்கு பகுதிகளான mathew mark luke john என்ற இவற்றை எழுதியவர்கள் யார் என்று தெரியாது. அதேபோல, இவையெல்லாம் ஈசா (அலை) அவர்களது காலத்திற்கு பல ஆண்டுகளுக்கு பின்னரே தொகுக்கப்பட்டன. 

புதிய ஏற்பாட்டில் தற்போதைய நிலவரப்படி இந்த நான்கு பகுதிகள் தான் இருக்கின்றன என்றாலும், இது போல பல பகுதிகள் பல பேரால் ஒன்றாம் மற்றும் இரண்டாம் நூற்றண்டுகளில் எழுதப்பட்டுள்ளன. இந்த பகுதிகளை உற்றுநோக்கினால் பல ஆச்சர்ய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், இவற்றில் பல ஈசா (அலை) அவர்கள் குறித்த இஸ்லாமிய கருத்துக்களுடன் பரிபூரணமாக உடன்படுகின்றன.    

அதிலும் குறிப்பாக, முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களிடயே தற்போது உள்ள பெரிய கருத்து வேறுபாடு, ஈசா (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பாட்டார்களா என்பதே. ஈசா (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்படவில்லை என்றும், கொல்லப்படவில்லை என்றும் குர்ஆன் கூறுகின்றது. ஆனால் கிருத்துவமோ, ஈசா (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்ததாக கூறுகின்றது.  

ஈசா (அலை) அவர்களது காலத்திற்கு பின்பு எழுதப்பட்ட நாம் மேலே கண்ட (தற்போது பைபிளில் இல்லாத) ஆரம்ப கால கிருத்துவ புத்தகங்கள் குர்ஆனுடன் முழுமையாக உடன்படுகின்றன. அதாவது, ஈசா (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்படவில்லை என்றே அவையும் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல், ஈசா (அலை) அவர்களின் தாயாரான மர்யம் (இவர்கள் மீது அமைதி நிலவுவதாக) அவர்களது இளமை பருவ வரலாறும் குர்ஆனுடன் பூரணமாக ஒத்துப்போகின்றன.

ஓய்வு நேரத்தில், அமைதியான சூழ்நிலையில் இதனை படித்துப்பாருங்கள். 

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
---------------------------------------------------------------------------------------------------

முயற்சி செய்யுங்கள் நீங்களும் தொழில் முனைவர்கலாகளாம்!



Wednesday, January 11, 2012

O.M.அப்துல் காதர் பாகவி அவர்கள் பேச்சு - நீடூர் அ.மு.சயீத் நூல் வெளியீட்டு விழாவில்


O.M.அப்துல் காதர் பாகவி அவர்கள் பேச்சு - நீடூர் அ.மு.சயீத் நூல் வெளியீட்டு விழாவில்
S.E.A. முஹம்மது அலி ஜின்னா
Jazakkallahu Hairan
நன்றி
http://niduronline.com/?p=470

Tuesday, January 10, 2012

எதிர்க்குரல் பதிவுகளின் பட்டியல்

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 
எதிர்க்குரல் தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளின் தலைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. தலைப்புகளின் மேல் சுட்டுவதின் மூலம் பதிவுகளை படிக்கலாம். 

சில இஸ்லாமிய தளங்கள்

  அஸ்ஸலாமு அலைக்கும்,

இணைய திரட்டி

  1. உம்மத்
  2. வழிக்காட்டி
  3. எதிர்க்குரல்
  4. சத்திய மார்க்கம் 
  5. இணையத்தில் ஒரு நூலகம் 
  6. இதுதான் இஸ்லாம்
  7. இனிய மார்க்கம்  
  8. ஆன்லைன் PJ
  9. எளியமார்க்கம் 
  10. மக்கா மஸ்ஜித்
  11. இஸ்லாம் கல்வி
  12. தாருல் அதர்
  13. சுவனத்தென்றல்
  14. அந்நஜாத்
  15. இஸ்லாமிய இணையப் பேரவை
  16. A1ரியலிஷம்
  17. தமிழ் முஸ்லிம் பதிவுகள்
  18. PEACE TRAIN
  19. தமிழ் முஸ்லிம் மீடியா
  20. ஏகத்துவம்
  21. தமிழ் முஸ்லிம் தாரகை
  22. வாஞ்ஜீர்
  23. பெண் விடுதலை
  24. தமிழ் தோழி 
  25. சத்தியத்தை சொல்லுவோம் அசத்தியம் அழியும் வரை
  26. இஸ்லாம்குரல்
  27. சீதனம் வேண்டாம் 
  28. இறுதித்தூது 
  29. கிறிஸ்தவம் பார்வை
  30. மதுக்கூர் போஸ்ட்
  31. தமிழ் முஸ்லிம் தளம் 
  32. சன்மார்க்கம்
  33. நல்லடியார்
  34. வஹ்ஹாபி 
  35. எதிரொலி 
  36. அபு முஹை
  37. கேள்விகளும் பதில்களும் 
  38. சிந்தனைத் துளிகள் 
  39. சுவனப்பிரியன்
  40. சிந்தனைச் சிதறல்கள் 
  41. இஸ்லாம் பார்வை
  42. இஸ்லாமிய தாவா

மெளனத்தின் வெளிப்பாடு..


உள்ளத்தின் ஆழத்தில்
ஓராயிரம் சொற்கள்
ஒளிந்து கிடக்கின்றன
ஒன்றுமறியாத உதடு
ஊமைக்குருவியாகி
மெளனித்துக்கிடந்தும்
முணுமுணுத்துவிடுகிறது

அர்த்த ஜாமத்தில்
அனைத்துமே
அடங்கிக் கிடக்கும்போது
அலறத்துடிக்கிறது மெளனம்
ஆனபோதும்
அர்த்தங்களற்ற செயல்களாகி
அமைதி காத்துகிடக்கிறது
ஆழ்மனதின் அர்த்தமறிந்து

பலநேர மெளனம்
பலனைத் தருமென்றும்
சிலநேர மெளனம்
சிக்கலைத் தருமென்றும்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

Monday, January 9, 2012

பாக்.கொடியேற்றிய கயவர்களை கண்டுபிடித்த Blogger..! | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

 அஸ்ஸலாமு அலைக்கும்,
இஸ்மாயில்' என்று கையில் பச்சை குத்தி காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே காலத்தில் இருந்தே... இப்படி முஸ்லிம்கள் மீது அபாண்ட பழிபோட்டு அப்பாவி மக்களிடம் ஹிந்துத்வா மதவெறியூட்டி... கொலைக்களம் காணத்துடிக்கும் ஈவிரக்கமற்ற இந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு கண்டனப்பதிவு போடுவதை விட, பீஜப்பூரில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியது யாரென்ற உண்மையை மூன்றே நாளில் கண்டுபிடித்தோரை பாராட்டி பதிவுபோடுவதே இப்போது மிக முக்கியம்..!
.
பாக்.கொடியேற்றிய கயவர்களை கண்டுபிடித்த Blogger..!

டிஜிட்டல் குர்ஆன் ஆன்லைன் பார்த்து படித்து(ஓதி ) பலனடயுங்கள்


நாம் குர்ஆனுடன் தொடர்புடையவர்களாக இருப்பதால் இந்த டிஜிட்டல் குர்ஆன் ஆன்லைன் மிகவும் உதவும். இங்கே இணைப்பு இருக்கிறது. இங்கு  க்ளிக் செய்து பின்பு அந்த  வலைத்தளத்தில் "என்டர்"  பகுதியில்  "Enter"  செய்யவும். பின்னர் நீங்கள் கிட்டத்தட்ட ஒரு  கிளிக் மூலம் வேண்டிய பக்கங்களை மாற்ற முடியும்! அது உண்மையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .
 இந்த சிறு தூண்டுதலின் வழியாக குர்ஆனுடன் தொடர்பு ஏற்படும்.

இதனை பயன் படுத்தி அல்லாஹ்வின்  அருள் அடைவோம்.

            அரபு எண்கள்




இரண்டு யூதர்கள்!


அவர்கள் சாமுவேல் மற்றும் பெஞ்சமின். நெடுந்தொலைவு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இரு யூதர்கள். ஒரு பாலைவனத்தைக் கடந்து செல்லும்போது ஏற்பட்ட கடும் மணற்புயலால் தம் திசையைத் தொலைத்து விட்டனர்.
எங்கு அலைந்து தேடியும் செல்ல வேண்டிய வழி புலப்பட வில்லை. கையில் கொண்டு வந்திருந்த உணவும் நீரும் தீர்ந்து விட்டதால் பசியின் பிடியில் சிக்கித் தவித்தனர்.
கிட்டத்தட்ட சுய நினைவை இழக்கும் தருவாயில், விடிகாலை நேரத்தில் ஒரு குடியிருப்புப் பகுதி கண்ணில் பட்டது கண்டு மகிழ்ச்சியடைந்தனர் இருவரும். தொழுகைக்கான பாங்கு சப்தம் அந்த இடத்திலிருந்து கேட்க, நெருங்கிச் சென்று பார்த்தபோது அது ஒரு பள்ளிவாசல் என்பதைக் கண்டனர்.
ஏதோ உணர்ந்தவனாக சாமுவேல் கூறினான். “பெஞ்சமின்.. இதோ பார். இது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்பது நிச்சயம். நாம் முஸ்லிம்கள் என்று நடித்தால் மட்டுமே உணவு கிடைக்கும். எனவே, என் பெயரை முஹம்மத் என்று சொல்லப்போகிறேன்.”

Thursday, January 5, 2012

முகத்திரை அணிந்த பெண்களை விசாரித்த ப்ரான்ஸ் போலீஸார் இஸ்லாத்துக்கு மத மாற்றம்

பாரீஸ் : ப்ரான்சிலிருந்து வெளி வரும் ‘லீ மாண்டே’ எனும் இதழுக்கு பேட்டியளித்த ப்ரான்ஸின் உள்துறை அமைச்சர் கடந்த ஏப்ரலில் முகத்திரை அணிவதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்ட பிறகு 237 முஸ்லீம் பெண்கள் முகத்திரை அணிந்தாலும் வெறும் 6 பெண்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் அவ்வாறு முகத்திரை அணிந்த முஸ்லீம் பெண்களை விசாரித்த ப்ரான்ஸின் பெண் காவல்துறையினரில் கால்வாசி பெண் காவலர்கள் இஸ்லாத்தை தழுவியது தமக்கு ஆச்சரியமளிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இத்தடையானது முஸ்லீம் பெண்களின் மத உரிமையை பறிப்பதாக எதிர்ப்பாளர்களும், ப்ரான்ஸின் மதசார்பின்மையை பாதுகாப்பதாகவும் இஸ்லாமிய தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிய கூடியது என்றும் இச்சட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.
Source : http://www.inneram.com/

Tuesday, January 3, 2012

ஒரு சொத்து விற்கு முன் மாற்று யோசனை தேவை!

  இஸ்லாமிய சட்டப்படி ஒரு பெண்ணுக்கு தன் சொந்த பணத்தை (சொத்தை) தான் வைத்துக்  கொள்ள உரிமை உண்டு . அவள் பொருளை அவளது கணவன் அவள் அனுமதி இல்லாமல் விற்கவோ எடுத்துக் கொள்ளவோ உரிமை கிடையாது மற்றும் அவள் எந்த உறவு முறைகளுக்கும் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.அது அந்த பெண்ணின் விருப்பத்தைப் பொருத்தது
    என் மனைவியிடம்  நகைகள் அவள் போட்டுக்  கொள்ளாமல் வீட்டு அலமாரியில்  முடங்கிக் கிடந்த காரணத்தினால் அதை விற்று ஒரு கட்டிடம்  வாங்கி வாடகைக்கு விட்டால் வருமானம் வருமே என்ற எண்ணத்தில்   ஆடிட்டர் யோசனை கேட்டேன். அவர் உடனே 'அந்த நகை உங்கள் சொத்தல்ல அது அந்த பெண்ணைச் சேர்ந்தது' என்றார். நான் 'வாங்கப் போகும் கட்டிடம்  மனைவியின் பெயரிலேயே இருந்து அதனால் கிடைக்கும் வருமானமும் மனைவிக்கே கிடைக்க வழி செய்வேன்' என உறுதி கொடுத்தேன்.பின்பு  ஆடிட்டர் ' நல்லது'   என்றார். 

Sunday, January 1, 2012

சீன மொழியில் பழமைவாய்ந்த குர்ஆன் கண்டுபிடிப்பு ..!



ts
மிகவும் புராதான பழமை வாய்ந்த சீனா மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆன் சீனாவில் கண்டுபிடிப்பு. இந்த குர்ஆன் கையால் எழுதப்பட்டு கடந்த 1912-ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த குர்ஆனை முஸ்லிம் கலாச்சார ஆராய்ச்சியாளர்களால் சீனாவின் வடமேற்கு பகுதியான கன்சு மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த 100 வருட புராதான குர்ஆன் ஆனது லன்ஸ்ஹௌ பல்கலைகழகத்தைச் சேர்ந்த முஸ்லிம் கலாச்சார ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குர்ஆனை ஷா ழோங் மற்றும் மாபுழு ஆகிய இரண்டு புகழ்பெற்ற இமாம்கள் மொழிபெயர்த்ததாக நம்பப்படுகிறது என்று பல்கலைகழகத்தின் தலைவர் டிங் சிரேன் கூறியுள்ளார். ஷா மற்றும் மா ஆகிய இமாம்கள் 1909 ஆம் ஆண்டு இந்த குர்ஆனை மொழிபெயர்க்க தொடங்கி கடந்த 1912-ஆம் ஆண்டு நிறைவு செய்துள்ளனர் என்று பல்கலைகழக ஆராய்ச்சியாளர் டிங் தெரிவித்துள்ளார்.

LinkWithin

Related Posts with Thumbnails