Thursday, August 31, 2017

நபி இப்ராஹீம் ( அலை) அவர்கள்............

- தக்கலை கவுஸ் முஹம்மத்
நபி இப்ராஹீம் ( அலை) அவர்கள்............
@ இஸ்லாம் எனும் வார்த்தைக்கு நிதர்சன வாழ்வில் பொருள்தந்தவர்
@ இறையாணை என்றவுடன் சிலைத்தொழில் விற்பன்னருக்கு மகனாக பிறந்தும் தயங்காமல் தவ்ஹீதை தரணியிலே எடுத்துரைத்தவர்
@ இறையாணை என்றவுடன் தன் மனைவியையும் அருமை புதல்வனையும் பாலைவனத்தில் குடியமர்த்தியவர்
@ இறையாணை என்றவுடன் ஆதிஆலயமான கஃபாவை தன் புதல்வனுடன் சேர்ந்து புனர்நிமானம் செய்தவர்
@ தள்ளாடும் பருவத்திலும் தனக்கொரு பிள்ளைவேண்டுமெனும் ஆசை இறை அருளில் நிராசை கொள்ள செய்யவில்லை தொடர் பிராத்தனை பருவம் கடந்தாலும் பலன் செய்யும் என்பதை உரக்க உணர்த்தியவர்
@ ஆசை ஆசையாய் இறைஞ்சி பெற்ற அருமைப் புதல்வனை " தாரும்எனக்கு" என்று கேட்ட உடையவன் அல்லாஹ்விற்கு தயங்காது தரத்துணிந்தவர்
@ வாருங்கள் ஹஜ்ஜுக்கு எனும் அவரது அழைப்பை ஏற்று பாரெங்கும் உள்ள மக்கள் அலை கடலென அணிதிரள்வதை பார்க்க பல கோடி கண்கள் வேண்டும்

தியாகங்கள் செய்வோமே ....!

பார்வை தெளிந்து
பாதை திறந்து
நேர்வழி தெரியட்டுமே
தன்னலம் அகன்று
வறுமை ஒழிந்து
சுபிட்சம் பிறக்கட்டுமே
மனதில் நிறைந்து
செயலில் வடித்து
காரியங்கள் ஆகட்டுமே
உழைப்பில் மிளிர்ந்து
உன்னதம் அடைந்து
செல்வம் சேரட்டுமே

Wednesday, August 30, 2017

இஸ்லாம் என்பது அரேபிய கலாசாரமா?

சில இந்துத்வாவாதிகள் இஸ்லாமிய மார்க்கம் என்பது அரேபிய கலாசாரத்துக்காக உருவாக்கப்பட்டது என்ற வாதத்தை வைக்கின்றனர். ஆனால் இங்கு கொரிய முஸ்லிம்கள் ஹஜ் பயணம் முடிப்பதற்காக ஆயத்தமாவதை பார்க்கிறீர்கள். அரேபியர்களுக்கும் கொரியர்களுக்கும் எந்த வகையிலாவது ஒற்றுமை உண்டா? நிறம், குணம், சாப்பிடும் வழக்கம், உடை உடுத்தும் முறை என்று எதை எடுத்தாலும் மாற்றத்தைக் காணலாம்.

Monday, August 28, 2017

கல்லால் சில பேர் அடித்தார்கள்..

Saif Saif
கல்லால் சில
பேர் அடித்தார்கள்..
கடும் சொல்லால் பல
பேர் வதைத்தார்கள்.
எல்லா துயரத்தையும்
சகித்தார்..
நபி அல்லாஹ் ஒருவன்
என்றே உரைத்தார்.."
என்று நாகூர் அனிபா பாட கேட்டிருப்போம்..
அந்த நிகழ்வுகளின்
உண்மையை அறியும் போது நெஞ்சம் நம்மையறியாமல்
பதைபதைப்பதை ஏனோ
தடுக்க முடியவில்லை..
நபியின் சித்தப்பா அபூலஹப் நபிக்கு செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
நபியின் வீடு அபூலஹபின் வீட்டோடு இணைந்திருந்தது..
அவனும்,அவனது அண்டை வீட்டுக்காரர்களும்
நபிக்கு எப்போதும்
நோவினைக் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள்..
அதில் முக்கியமானவர்கள்..

Saturday, August 26, 2017

ஏற்படுத்தப்பட்ட இழப்புகள்

ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் 
எண்ணிலடங்காதது தான்
அதற்கான கூலியை 
ரப்புல் ஆலமீன் தரட்டுமாக !!
யா அல்லாஹ் ..
நீ ரஹ்மான் 
நீ ரஹீம்
உன் கருணை 
உன் கோபத்தை வென்றுவிடுவதாக
நீயே சொல்லியிருக்கிறாய்.

Friday, August 25, 2017

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாறு - ஒரு வரலாற்றுப் பார்வை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாறு - ஒரு வரலாற்றுப் பார்வை

1142 ஆண்டுகள் இந்தியத் திருநாட்டை முஸ்லிம்கள் ஆட்சி செய்துள்ளனர். முகலாய சக்கரவர்த்திகளின் காலத்தில் இந்திய துணை கண்டமே அவர்களின் ஆட்சியில் இருந்துள்ளது.


ஆயினும் 592 ஆண்டுகள் முஸ்லிம் மன்னர்களுக்கு தலைநகராக இருந்த டெல்லி உட்பட இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருப்பது மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் அனைத்திலும் பின்தங்கியுள்ளனர்.

ஆக முஸ்லிம் மன்னர்கள் முஸ்லிம்களுக்காக ஆளவும் இல்லை; இஸ்லாத்தை பரப்புவது அவர்கள் நோக்கமும் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.


முஸ்லிம் லீக் உருவாக்கப்பட்டது ஏன்?
1600 டிசம்பர் 31


பேரரசர் அக்பர் ஆட்சி செய்து கொண்டிருந்த போதுதான் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலடி எடுத்து வைக்கிறது.
1799 மே 4 மைசூர் போரில் மாவீரன் திப்பு சுல்தானின் வீரமரணத்தை அடுத்து 1806 ஜுலை 10ல் வேலூரில் நடைபெற்ற சிப்பாய் புரட்சிதான் ஆங்கில ஏகாதி பத்தியத்தை விரட்டும் இந்திய சுதந்திர வேட்கைக்கு அடித்தளம் அமைத்தது.


1857 - இந்திய வரலாற்றில் திருப்புமுனை ஆண்டு! முகலாயப் பேரரசர் பஹதூர்ஷா தலைமையில் முதல் சுதந்திரப் போர் வெடித்தது.
அக்கிளர்ச்சி அடக்கப்பட்டு பஹதூர்ஷா கைது செய்யப்பட்டதும் இது இந்தியர்களின் உள்ளத்தில் தேசிய உணர்வை கொளுந்து விடச் செய்தது.
கிளர்ச்சி அடக்கப்பட்டதும் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கம் விக்டோரியா மகாராணியிடம் ஒப்படைக்கப்பட்டது.


1858 நவம்பர் 1 - அலகாபாத்தில், விக்டோரியா மகாராணியின் அறிக்கையை கவர்னர் ஜெனரல் கானிங் பிரபு சமர்ப்பித்தார்.

நல்லடியானாக வாழ்வது எப்படி

மனிதர்கள் இறைவனுக்கு அடிபணியவே படைக்கப்படடிருப்பதால், அவனை வணங்கி வழிபடுவது எப்படி என்பதை அவர்கள் அறிந்திருப்பது கடமையாகும். இதுவும் குர்ஆனில் அறிவிக்கப்பட்டுள்ளது. ( 22:67)

ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவர்கள் வணங்குவதற்கு உரிய வழியை நாம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். எனவே அந்த விவகாரத்தைப் பற்றி அவர்கள் உம்மிடம் தர்க்கிக்க வேண்டியதில்லை. (22:67)

Wednesday, August 23, 2017

உணவு தர்மம்...........உன் உயிர் காக்கும் தர்மம்.

இஸ்கந்தர் பராக் Iskandar Barak
தங்களால் இயன்றதை செய்யும் தர்மங்களில் இந்த உணவு தர்மமே கடவுளுக்கு பிடித்ததும் அவனுக்கு நெருக்கமானதுமென்கிறார் நபிகள் நாயகம்.
உங்கள் மனசில் சஞ்சலமா
உங்களுக்கு பொருளாதார நெருக்கடியா
உங்கள் உடமைகள் தவறிவிட்டதா

ஆதியந்த முமில்லாது ஆளும் இறையோனே!

ஆதியந்த முமில்லாது
ஆளும் இறையோனே!
நாளை மறுமையிலே
நாதியிலாது நான் தவிக்கும் வேளையிலே!
மேதினியில் உதவுதற்க்கு யாருமிலையே!
நின் கருணை என்மேலும் உலகுவாழ் உயினங்கள் அனைத்தின் மீதும்
பொழிய வைப்பாய் கருணாகரனே!!
செய்த பழி பாவங்கள் அனைத்திற்கும் கணக்கு கேட்டால் கைசேதமே!
கருணையின் திருவுருவே!
சத்தியமாய் நிரந்தரமாய் வாழும் சர்வேஸ்வரா!!
சாந்தமான பார்வையினை எம்மீதும் உலகோர் மீதும் செலுத்திடுவாய்
ரஹ்மானே! ரப்புல் ஆலமீனே!!

Sunday, August 20, 2017

ஏறத்தாழ ஐந்து லட்சம் முஸ்லிம்கள் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்கள்

இஸ்லாத்தை கேவலப்படுத்துவதாக நினைத்து தன்னை கேவலப்படுத்தி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்..!!!

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இன்று நான் அதிரடியாகச் செய்யப்போகும் செயலால் அவை முழுதும் தன்னைப் பாராட்டும்” என்று நினைத்துக் கொண்டார் பவ்லின் ஹான்சன் எனும் பெண் உறுப்பினர்.

இவர் தீவிர வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஆவார்.
பவ்லின் ஹான்சன் என்ன செய்தார் தெரியுமா?
முஸ்லிம் பெண்கள் அணிவது போன்ற புர்காவை அணிந்துகொண்டு நாடாளுமன்றம் வந்தார்.
தாம் பேச எழுந்தபோது புர்காவைக் கழற்றி வீசியபடி, “ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற மத உடைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது, தடை விதிக்க வேண்டும்” என்று வேகமாக வலியுறுத்தினார்.

Saturday, August 19, 2017

"என்னால்" "நான் தான்" என்ற பாரம் ஏற்ற ஏற்ற கணம் தாங்கமுடியாமல்

"என்னால்" "நான் தான்" என்ற
பாரம் ஏற்ற ஏற்ற கணம் தாங்கமுடியாமல்
தலை புஜம்
கால்கள் கரங்கள் சிரம்
அழுத்தமடைந்து
அச்சு முறிகிறது.
வெறுப்பும் பகையும்
அச்சமும் கவலையும் தோன்றி
எம்மை
மிக தீவிரமாக அச்சுருத்துகிறது.

ஹஜ் பயணிகளுக்கு அனுமதி: கத்தர் வரவேற்பு!

கத்தர் ஹஜ் பயணிகளுக்கு விமானம் மற்றும் தரை வழிகளை சவூதி அரேபியா திறந்து கொடுத்துள்ளதைக் கத்தர் வரவேற்றுள்ளது.
கத்தரிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கு விமானம் மற்றும் தரை வழிபோக்குவரத்து திறந்து கொடுக்கப்படும் என சவூதி அரேபியா அறிவித்தது.

Thursday, August 17, 2017

வெள்ளிக்கிழமை வணக்கத்துக்குரிய நாள்!

بسم الله الرحمن الرحيم  
الجمعة يوم عبادة
ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அவனது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

மனிதர்கள் தங்களின் திருநாட்கள் மீண்டும் மீண்டும் வருவதிலும், அதை கொண்டாடுவதிலும், அந்த நாட்களை நினைவு கூர்வதிலும் சந்தோஷமடைகின்றனர். அதே போன்று தான் இஸ்லாமிய சமூகத்துக்கு அல்லாஹ்வை வணங்கக்கூடிய திருநாளாக வெள்ளிக்கிழமைதினம் இருக்கின்றது.

காலங்களுக்கு பொய்......../ தமிழ் பிரியன் நசீர்

காலங்களுக்கு
பொய்........
வர்ணங்களை
காணிக்கையாகத்
தந்து.........்
எங்கள் கனவெனும்
ஓவியங்களை
வரைந்து ..........

Wednesday, August 16, 2017

இன்னா செய்தாரை..


Noor Mohamed

அண்ணல் நபிகளாரின் ஆருயிர்நண்பர்,நபிகளாரின் மறைவுக்குப்பிறகு சமுதாயத்திற்குத் தலைமையேற்ற முதல் கலீபா அமீருல் முஃமினீன் அபூபக்கர் ஸுத்தீக்(ரலி) அவர்கள் இயல்பிலேயே இரக்கசிந்தையும் ஈகைக் குணமும் அமையப்பெற்ற அருமையான மனிதர்.நபித்தோழர்களில் ஒருவர் மிகவும் ஏழ்மையில் இருந்த நிலையில் அவருக்கு வழமையாக உதவிசெய்து வந்தார்கள் ஸித்தீகுல் அக்பர் அவர்கள்!

Saturday, August 12, 2017

.இந்திய பிரிவினைக்கு யார் காரணம்? முஸ்லிம்களா? ஹிந்து தீவிரவாதிகளா? பகுதி 1

--கணியூர் இஸ்மாயீல் நாஜி
இந்து – முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்.
.
கி.பி. 8ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலைச்சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டாலும் இந்த 10-ஆம் நூற்றாண்டு காலக் கட்டத்தில் இந்து – முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய சரித்திரத்தின் ஒரு பகுதியிலும் கூட காண இயலாது. ஆனால் ஏகாதிபத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆட்சியை இங்கே நிலை நிறுத்த முயன்ற 19ஆம் நூற்றாண்டில் தான் நாம் முதன் முறையாக இந்து – முஸ்லிம் கலவரங்களைப் பற்றி அறிகிறோம்.
பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்களும் முஸ்லிம்களும்
இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாளுதல் மூலமே தங்களின் ஆட்சியை நிலைபெற வைக்க முடியுமெனத் திட்டமிட்டனர் வெள்ளையர். அதற்கு இரு வழியினைக் கடைப்பிடித்தனர்.

மனித உரிமை மதிக்கப் படும் நாடு (லண்டன்)

மனித உரிமை மதிக்க படும் நாடு (லண்டன்) 
மனித வருமை ஒழிக்கப் பட்ட நாடு. ..
உயிரின் மதிப்பை உணரப்பட்ட நாடு,
மத சுதந்திரத்தை காக்கப்படும் நாடு,
அனைவரும் சமம் என்ற சமத்துவ நாடு, மக்களின் நலம் பேணும் மருத்துவ நாடு

Thursday, August 10, 2017

விமான ஓட்டியாக இஸ்லாமியப் பெண்கள்

ஷரீஃபா, ஷரியானா, நதியா என்ற மூன்று இஸ்லாமிய பெண்மணிகள்.
புருனை ஏர்லைன்ஸ் 787 ஜெத்தாவில் பாதுகாப்பாக இறங்கியது. இதில் என்ன விசேஷம்? இந்த விமானத்தை இயக்கியது ஷரீஃபா, ஷரியானா, நதியா என்ற மூன்று இஸ்லாமிய பெண்மணிகள்.

இஸ்லாம் பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைத்துள்ளது என்று கூறுபவர்களுக்காக இந்த பதிவு!
http://suvanappiriyan.blogspot.com/2017/08/blog-post_34.html

Wednesday, August 9, 2017

முஸ்லீம்களின் ஊரில் தான் மாடுகள்...

முஸ்லீம்களின் ஊரில் தான் மாடுகள்...
பாதுகாப்புடன் வாழ்கிறது என்பதின் காட்சியை இன்று காலையில் கண்டேன்.!
இது இறச்சிக்காக வளர்கப்படும் மாடுகள் அல்ல.!
பாலுக்காக வளர்கப்படும் பசுக்கள்..!
இதன் உரிமையாளர் இந்துவாக கூட இருக்கலாம்.
மதம் மாடுகளுக்கு இல்லை.!
எந்த மாடாக இருந்தாலும் முஸ்லீம்களை
பொருத்தவரை .... மாடு மாடு தான்.!
மாடு மாதாவாக எங்களின் அறிவு ஏற்றுக் கொள்ளாது.!
உங்களுக்கு உங்கள் மார்க்கம்.!
எங்களுக்கு எங்கள் மார்க்கம்.!

Haja Maideen

முஸ்லிம் கல்வி மேம்பாட்டு குழுமம் -தமிழ்நாடு

Muslim Educational Promo council scholarship 2017-


From: Noorul Ameen <noorulameen72@gmail.com>
from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>

Tuesday, August 1, 2017

மக்களுக்கு தாக்குப் பிடிக்காது.

சுன்னத் ஜமாத்காரனுக்கு
வகாபியை பிடிக்காது
ஜமாத்தே முஸ்லிமீன் வகாபிக்கு
ஜாக் வகாபியை புடிக்காது.
ஜாக் வகாபிக்கு
ததஜ வகாபியை பிடிக்காது.
ததஜ வகாபிக்கு
இ.த.ஜ. வகாபியை பிடிக்காது.

"நான்" என எனைக்கருத

"நான்" என எனைக்கருத 
உட்புகும் ஆழிப்பேரலை
என் நிலைகளை தாக்கி
பேரழுத்தத்தை தருகிறது
"நான்" யென்பதன் 
நிஜத்தைப்புரிந்து
அதன் 

LinkWithin

Related Posts with Thumbnails