Wednesday, June 28, 2017

காஃபிர் என்பது இழிசொல்லல்ல

முஸ்லிம் அல்லாதோரை இஸ்லாம் காஃபிர் என்று இழிவுபடுத்துகிறது எனச் சிலர் குற்றஞ்சாட்டுவதுண்டு.
காஃபிர் என்பதன் பொருள் இறை நிராகரிப்பு என்றுதான் நான் இதுவரை நினைத்திருந்தேன். அதன் வேர்ச்சொல் எப்படியெல்லாம் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது என விளக்கி காஃபிர் என்பது இழிசொல்லல்ல என்கிறார் Abdurrahman Umari. அவரின் பதிவு இங்கே...
மறைப்பதும் மூடிவைப்பதும் மனித வாழ்க்கையில் அன்றாடம் தொடர்கின்ற நிகழ்வுகள்.
.
மனிதன் தன்னோடு தொடர்புடைய அனைத்தையும் மூடி வைக்கவே ஆசைப்படுகிறான். தனது வருமானத்தை மூடிவைக்கிறான், தன்னைப் பற்றிய உண்மைகளை மூடி வைக்கிறான். தனக்காக சமைக்கப்பட்ட உணவுகளையும் மூடி வைக்கிறான். தனது அழகையும் மூடி வைக்கிறான்.
.
ஏன், உங்கள் அழகையும் அலங்காரத்தையும் ஊர்உலகிற்குக் காட்டாமல் மறைத்தே வைக்கின்றீர்கள் என தொடர்ந்து முஸ்லிம் பெண்களைப் பார்த்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

Tuesday, June 27, 2017

பெருநாள் குத்பா செய்தி - இறை அச்சம் !

மனிதர்கள் அறிவியலில் படிப்படியாக முன்னேறினாலும் நல்லொழுக்க விஷயங்களில் முன்னைவிட இன்னும் இன்னும் மோசமாகவே இருக்கிறான்.. கருணை கொலை, சாதீய கொலை , பணத்திற்காக கொலை , நூதன கொள்ளைகள் ,திருட்டுகள்,பாலியல் அராஜகங்கள், பணம் பதவிக்காக, மதவெறிக்காக அரசியல் சதிகள் , ஓரின திருமணங்கள் , வக்கிரமான உடை நாகரீகங்கள் என ஒழுக்க செயல்கள் படு மோசமாகவே உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது ... இதனை வெறும் சட்டங்கள் போட்டு சரி செய்ய முடியவில்லை ... இங்குதான் இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களுக்கு வழி காட்டுகிறது ..

ரமளான் பிரிந்தது ....

ரமளான் பிரிந்தது ....
கடின இலக்குகளின் 
சவாலை வென்ற 
அகில முஸ்லீம்களுக்கு
ஷவ்வாலை பரிசளித்து 
ரமளான் பிரிந்தது ....
ஆசைகள் மிதக்கும் 
மனசெனும் நதிகளில் 
நீந்துகிற சலனங்கள் 
சிந்தனையோடு கலந்து 
பாவங்களை தூண்டுகிற 
விடயங்களை தடுத்து 
ஷைத்தான் வரைந்த 
தடயங்களை அழித்தது ...

மரணத்திற்கு பின்னால்!

மரணம் நிகழ்வதாலேயே பிறப்பும் கூட
உயிர் பெறுகிறது.பெருமை கொள்கிறது.
மரணம் இல்லை என்றால் பிறந்து என்ன பயனும் இல்லை.
சாவுக்குப் பின் ஒரு மனிதனை தொடர்வது எது?
முகமது நபி அவர்களிடம் இந்த கேள்வி எழுப்பப் பட்டது.
நபிகளார் பதில் உரைத்தார்கள்
1.கொடை (charity)
பிறருக்காக வாரி வழங்கிய தான தர்மம்
2.அறிவு (knowledge)
பிறரை நல்வழி படுத்த உதவிய
நல்லறிவு
3.வணக்க வழிபாடு (prayer)
இறந்தவனுக்காக அவன் குழந்தைகள் நிகழ்த்தும் நல் பிரார்த்தனை.


Vavar F Habibullah
ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்

டென்சன் ....!

'நான் டென்சன்ல இருக்கேன்' இப்படி சொல்லாதவர்களே இப்போதெல்லாம் இல்லை எனலாம்.
பள்ளிக்கு செல்லும் பாலகரில் தொடங்கி மகளிரும் பணிஓய்வு
பெற்றவர் வரையும் சொல்கிறார்கள் 'நான் டென்சன்ல இருக்கேன்' .
நமது பாட்டா பாட்டியோ தாய் தந்தையோ கூட இப்படி சொல்லிக் கேட்டதில்லை.
ஏன் இப்படி இப்போது?

ஒரு தெருவில் இருவர்... எனில் உலகம் முழுதும்???

நான் வசிக்கும் ஏரியாவில் ஒரே தெருவில் கடை வைத்திருக்கும் இருவர்... தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்...
ஏதேச்சையாய் பேசும் பொழுது ரமதானுக்கு ஊருக்கு எப்ப போறீங்கன்னு கேட்டேன்... ஒரே நேரத்தில் இருவரிடமும் கேட்க வில்லை.. வேறு வேறு நாட்களில் கேட்டேன்...
இந்த வருஷம் போகல பாய் என்றார்கள்.. ஏன் என்னாச்சு என்றேன்... ஊருக்கு போனா 5000,6000 ரூபாய் செலவு ஆகும், அதை அனுப்பி வச்சா வீட்ல பெருநாளுக்கு பயன்படும் அதான் போகவில்லை என்றார்கள்... நான் அப்டியே ஸ்டன் ஆகிட்டேன்...
அதன்பின் நான் யாரிடமும் ஊருக்கு போறீங்களான்னு கேட்கவே இல்லை.. இந்த கனமே போதும்.. இனி தாங்க முடியாதுன்னு கேட்கிறதை விட்டுட்டேன்...
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இதே போன்ற ஏராளமான சகோதரர்களைக் கொண்ட சமூகம் தான் இஸ்லாமிய சமூகம்... காலம் முழுதும் சம்பாதித்தாலும் ஒரு நல்ல நாட்கள், விஷேங்களுக்கு அவர்களால் போக முடியவில்லை... தங்களை வருத்திக் கொண்டு, தங்கள் ஆசைகளை அடக்கிக் கொண்டு தங்கள் குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக தங்கள் வாழ்வை அர்பணிக்கிறார்கள்...

ஈகை போய்விடுமா இன்றோடு..!

நோன்பை நோற்று பெருநாளையும் கொண்டாடிவிட்டோம்!
இதோடு நின்று போய்விடுமா நாம் கொண்ட ஈகை..?
இல்லை...! இனி அடுத்த வருடம் வரை நாம் உயிர் பெற்றிருந்து இப்பெருநாள் வரும்போது மட்டுமே மீண்டும் துளிர் விடுமா..?
அப்படி இன்றோடு அடங்கி அடுத்த முறை மட்டும் உயிர்த்தெழுவது மட்டுமே ஈகையல்ல!
இந்த உலகில் மனிதனும் அவன்தன் மனிதமும் உள்ள நாளெல்லாம் நின்று நெடுந்தூரம் பயணிப்பதுவே ஈகை!
பணமும் பொருளும் மட்டும் என்பதே ஈகையின் வரையறையோ அடையாளமோ அல்ல!

Monday, June 26, 2017

மல்லிகைப்பூச் சூடிய ஹூருலீன்களும் சதுப்பு நிலத்தில் புதைந்த பாதச்சுவடுகளும் #நிஷாமன்சூர்

ஈத்பெருநாள் சிறப்பு கவிதை....
மல்லிகைப்பூச் சூடிய ஹூருலீன்களும் சதுப்பு நிலத்தில் புதைந்த பாதச்சுவடுகளும்
#நிஷாமன்சூர்
சீத்தலைச் சாத்தனாரின் ஆணி நுனியில் கற்றுக்கொண்டோம்
எம் தாய்மொழியின் கூர் வன்மையை.
அரபுமொழியில் இறைமறையை ஓதும்போதும்
அதன் ஆழ அகலங்கள் குறித்து
எம் தமிழின் ஒளியில்தான் சிந்தித்துத் தெளிந்தோம்
உமர்கய்யாமின் கோப்பையில் ததும்பிக்கொண்டிருக்கும் ஞானத்தை மிடறுமிடறாய் அருந்தி
ஆசான் ரூமியின் நெற்றிக்காய்ப்பு பதிந்த தொழுகைப்பாயில் தந்திரம் விற்றுப் பேரின்பம் யாசித்துக் கொண்டிருக்கிருந்தபோதும்
எமது வேர்கள் யாதனின் யாதனின் நீங்கியான் நோதலில் ஆழப்புதைந்து புரிதலில் ஒளிர்ந்தன.

Sunday, June 25, 2017

எட்டயபுரத்தில் உமறுப்புலவர் மணிமண்டபம்

திருச்செந்தூர் செல்வதற்காக தூத்துக்குடி வழியாக சென்றோம்.  எட்டயபுரத்தில் பாரதியார் மணிமண்டபமும், பாரதியார் பிறந்த வீட்டையும் பார்த்தோம்.  அதை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

எட்டயபுரத்தில் ‘உமறுப்புலவர் மணிமண்டபம்” அருமையாக அரசினரால் கட்டப்பட்டு பராமரிக்கப் பட்டு வருகிறது.  பாரதியார் வீடு இருக்கும் தெருவின் அருகில் அமைந்திருக்கிறது.  வழி காட்டும் பலகை சாலையில் இருக்கிறது.அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொகுத்திருக்கிறேன்.

Friday, June 23, 2017

ஒரு மார்க்கம் என்பது யாதெனில்

ஒரு மார்க்கம் என்பது
யாதெனில்
வாழ்வைச் சீர் செய்யும்
அறநெறிச் சட்டங்கள்
அமல் படுத்தும் திட்டங்கள்

நியாயங்களுக்குப் பாதுகாப்பு
தர்மங்களுக்கு அரண்

Thursday, June 22, 2017

வந்ததே ரமழான் !

நிலாக் கீற்றின் உதய தரிசனத்தில்
வான விழிகள் கிறங்கிக் கிடக்க.-எம்.
"கல்பின்" கறை கழுவிடத்தான்
மாண்போடு வந்ததே புனித 'ரமழான்!

"திக்ர்" செய்தே  இறையோ னிறைஞ்சி...
"இறையில்லம் தனை நோக்கி சிரந்தாழ்த்தி..........
திருமறையின் நேசிப்பிலெம்
வாழ்வைப் பொருத்தி - நிதம்
இறையோ னன்பில் வீழ்ந்து கிடக்க...........
வந்ததே ரமழான்..................
தந்ததே மாண்பு பல!

Wednesday, June 21, 2017

நோன்பு கஞ்சியும் சஹர் உணவும் ....

Abdul Gafoor
இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

தணியாத வெயிலின் பணியாத தாக்குதலோடு நிறைவேறிய இருபத்தைந்தாம் நோன்பு திறக்கும் நிகழ்வு இறையருளால் நேற்று (20.06.2017) அல் மஸ்ஜிதுல் அஸ்ரப் பள்ளிவாசலில் குதூகலமாய் நிகழ்ந்தேறியது ...
நோன்பு திறந்ததும் இஞ்சி கலந்த மசாலா தானியங்களோடு காய்ச்சிய கஞ்சி நிரப்பிய கொட்ராவை கரங்களால் தூக்கி உதடுகளால் சர்ரென்று உறுஞ்சி அருந்துகையில் உற்சாகம் மிஞ்சி மணமும் சுவையும் நம்மோடு கொஞ்சி நமது வயிற்றுப் பகுதியின் சுவாச பாதைகளை ஆசுவாசப்படுத்துகிறது என்பது மறுக்க இயலாத உண்மை ....

லைலத்துல்கத்ர் ! / !Abu Haashima

லைலத்துல்கத்ர் !
 ரமளானைப் பற்றிய மினி தொடரின் இன்றைய அத்தியாயம் ...
#லைலத்துல்கத்ர் !
ரமளானின் மாபெரும் கொடையாக இறைவன் வழங்கி இருக்கும்
வியத்தகு பரிசு லைலத்துல் கத்ர் என்னும் இரவு !
இந்த இரவு எத்தனை சிறப்பு வாய்ந்தது என்பதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை .
ஏனென்றால் ...
" கடலை மையாகவும் உலகத்திலுள்ள மரங்களை எல்லாம் எழுதுகோலாகவும் ஆக்கி
அருள்மறை குர் ஆனுக்கு விளக்கம் எழுத முற்பட்டாலும் அதனை
எழுதி முடிக்க முடியாது ".
என்று இறைவன் கூறுகிறான்.
அப்படிப்பட்ட இறைவேதம் குர் ஆன் இந்த இரவில்தான் நபிகள் பெருமானார் ( ஸல் ) அவர்களுக்கு அருளப்பட்டது.

மதநல்லிணக்கம் & போற்றுதலுக்குரிய இந்த அன்பும்

Mohamed Ashik
:படங்களும் செய்தியும்  Rehannisha Ammaponnu


டாக்டர் சந்திரசேகரன் அவர்களின் எலும்பு முறிவு மருத்துவமனை. இடம் : கும்பகோணம்.

இங்கே, மருத்துவரை காணச்சென்றால்... பெயர் பதிந்த உடனேயே, "நீங்க நோன்பா?" என்று செவிலியர்களால் வினவப்பட்டு "ஆம்"எனில் டோக்கன் வரிசை காத்திருப்பு ஏதும் இல்லாமல் உடனடியாக (நெக்ஸ்ட் பேஷண்ட்டாக) மருத்துவரை சந்திக்க முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

நீண்ட நேரம் முன்னரே வந்து பெயர் பதிந்து டோக்கன் வரிசை எண் பெற்று காத்திருக்கும் பிற சமய சகோதரர்களின் கேள்விப்பார்வைக்கு விடையாக, கட்டி தொங்கவிட்டிருக்கும் இந்த அறிவிப்பை காட்டுகிறார்கள்.

Tuesday, June 20, 2017

ரமளானின் சிறப்புகளைப் பற்றிய மினி தொடரில் இதுவரை ...


ரமளானின் சிறப்புகளைப் பற்றிய மினி தொடரில் இதுவரை ...
நோன்பு முதல் பிறை பார்த்தல்
தராஹ்வீஹ் தொழுகை
ஹிஸ்பு ஓதுவது
ஸகர் உண்ணுவது
நோன்பு பிடிப்பது
நோன்பு திறப்பு இப்தார்
இஹ்திகாப்
ஆகியவற்றை எழுதி இருந்தேன் .
இன்று ...
இடம்பெறுவது
தவ்பா !
விடிந்தது முதல்
பொழுது அடைவது வரை
மனிதர்களைச் சூழ்ந்து நிற்பது
பாவங்களே !

Sunday, June 18, 2017

அப்ரஹா / Abu Haashima

அப்ரஹா
*********
#அபிசீனிய_சக்கரவர்த்தியின்
யெமன் நாட்டு ஆளுநராக இருந்தவன் #அப்ரஹா.
மக்காவிலிருந்த கஃபாவை தரிசிக்க மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வருவதை பொறுக்க முடியாத இவன்
தன் தலைநகர் சன்ஆவில்
#காலிஸ் எனும் பிரம்மாண்ட ஆலயம் ஒன்றை கட்டி எழுப்பினான்.
கஃபாவுக்குச் செல்லும் மக்களை
காலிசுக்கு திரும்ப வைப்பதே
தனது லட்சியம் என்றும் அறிவித்தான்.
ஒருநாள் நுபைல் என்பவன் காலிஸ் ஆலயத்தில் ஓரிரவைத் தான் கழிக்க விரும்புவதாகக்கூறி அனுமதிபெற்று
அங்கே மலஜலம் கழித்து விட்டு ஓடிவிட்டான்.

ஒரு மார்க்கம் என்பது யாதெனில்

ஒரு மார்க்கம் என்பது
யாதெனில்
வாழ்வைச் சீர் செய்யும்
அறநெறிச் சட்டங்கள்
அமல் படுத்தும் திட்டங்கள்

நியாயங்களுக்குப் பாதுகாப்பு
தர்மங்களுக்கு அரண்

“தமிழ்நாடு கலாச்சார பேரவை” நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

அமீரகவாழ் தமிழ் மக்களிடையே பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டுவரும் “தமிழ்நாடு கலாச்சார பேரவை” சார்பாக வருடந்தோறும் இஃப்தார் – நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வருட இஃப்தார் நிகழ்ச்சி ரமழான் பிறை 21, வெள்ளிக்கிழமை அன்று, துபை கிராண்ட் சென்ட்ரல் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

Saturday, June 17, 2017

ஒழுங்கும் கட்டுப்பாடும் இணையும் புள்ளியில்தான் கட்டுக்கோப்பானதொரு சமூகம் மலரும்

ஒழுங்கும் கட்டுப்பாடும் இணையும் புள்ளியில்தான் கட்டுக்கோப்பானதொரு சமூகம் மலரும்

[ இஸ்லாமிய தஃவா அமைப்புக்கள், முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் தமக்கிடையில் ஒரு புரிந்துணர்வுக்கு வர வேண்டும். இவ்விடயத்தில் கை கோர்த்து செயற்பட வேண்டும். கருத்து வேறுபாடுகள் நிலவுவதில் தவறில்லை. ஆனால், முரண்பாடுகளும் பிளவுகளும் வரக் கூடாது.

தத்தமது தளங்களில் இருந்து கட்டுக்கோப்பானதொரு சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். யாருடைய இயக்கம் பிரபல்யம் அடைய வேண்டும், சமூகத்தில் கூடுதல் அங்கீகாரம் யாருக்கு கிடைக்கிறது... போன்ற போட்டா போட்டிகள் இருக்கக் கூடாது.

Wednesday, June 14, 2017

விழிப்புணர்வு நேரமிது!

பொருளாதாரச் சீர்திருத்தம், தாராளமயம் என்கிற பெயரில் யாரும் எதை வேண்டுமானாலும் செய்து மக்கள் நலனையும், நாட்டு நலனையும் காற்றில் பறக்கவிட்டுக் கொள்ளையடித்துக் கொள்ளலாம் என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்தினருக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன், விலைபோகாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்கிற மனோநிலையும் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் அதைவிடப் பெரிய ஆபத்தாகத் தெரிகிறது.

Tuesday, June 13, 2017

இறைவைனிடம் கை ஏந்துவோம்!


புனிதமிகு ரமலான் மாதத்தின் முதல் பத்து நாட்களை நிறைவு செய்துவிட்டு அடுத்த பத்தில் இருக்கின்றோம்.  இறைவனின் அருட்கொடையின் பத்து என்று இறைத்தூதரால் வர்ணிக்கப்பட்ட முதல் பத்து நோன்புகளில் நாம் பசித்து, தாகித்திருந்ததற்கு இறைவன் அவனது அருட்கொடைகளை முழுமையாக நமக்குத் தந்தருள்வானாக என்ற பிரார்த்தனையுடன்...
ரமலான் மாதமே பாவங்களுக்கான பரிகாரமாகவே அமைகின்றது. ஆனாலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானின் இரண்டாவது பத்தினை பாவ மன்னிப்பிற்கான பத்தாக அறிவித்து இந்தப் பத்து நாட்களில் அதிகம் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டு மீள வலியுறுத்தியுள்ளார்கள்.

Monday, June 12, 2017

கேரளத்தில் இஸ்லாமிய மக்கள் நெருக்கமாக வசிக்கும் மாவட்டங்களில் மலப்புரமும் ஒன்று

கேரளத்தில் இஸ்லாமிய மக்கள் நெருக்கமாக வசிக்கும் மாவட்டங்களில் மலப்புரமும் ஒன்று
அங்கே உள்ள சின்னஞ்சிறு கிராமம் புன்னதாலா . பல மசூதிகளுக்கு மத்தியில் அங்கே சிறிய இந்து கோயில் ஒன்றும் இருக்கும்.. புன்னதலாவில் வசிக்கும் இந்து மக்களுக்கு, இதுதான் ஒரே வழிபாட்டுத்தலம். 100 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலில், நரசிம்ம அவதாரத்தில் அருள்பாலிக்கிறார் விஷ்ணு
ஆனால் ஒரு கட்டத்தில் கோவில் கூரை இடிந்து சுவர்கள் விழுந்து தகர்ந்து போனது அந்தக்.கோவிலைசீரமைத்துக் கட்டவேண்டும் என்பது இந்து மக்களின் நீண்டநாள் ஆசையாகஇருந்தது
பல்வேறுவகையில் முயற்சித்தும் முடியாமல் போனதால், சீரமைப்புப் பணியை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டனர்

Thursday, June 8, 2017

நெஞ்சுநிறை மாண்புக் கஞ்சி

பிச்சைக்காரரின்
நெளிந்த பாத்திரத்தில் ஊற்றப்படுவதே
பணக்காரரின்
வெள்ளிப் பாத்திரத்தை நிறைக்கும்
அமுதமாகிறது

அது எது?

உடல்நலமில்லா முதியவரின்
நடுங்கும் கரங்களின்முன்
வைக்கப்படுவதே
ஆரோக்கியமான இளைஞனின்
துடிப்பான விரல்கள்
தாவியெடுக்கும்
அருசுவையாகிறது

அது எது?

Thursday, June 1, 2017

இறைச்சிக்காக மாடு விற்பது தொடர்பான வழக்கில் தடையாணை: ஒரே நாளில் பிரபலமான செல்வகோமதி

இறைச்சிக்காக மாடு விற்பது தொடர்பான வழக்கில் தடையாணை: ஒரே நாளில் பிரபலமான செல்வகோமதி: ஒருவர் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்வது அவரின் தனிப்பட்ட உரிமை. அதை கட்டாயப் படுத்தக்கூடாது

மத்திய அரசின் மாடுகள் விற்பனை தொடர்பான உத்தரவுக்கு தடை யாணை பெற்றதன் மூலம் ஒரே நாளில் நாடும் முழுவதும் பேசப் படும் நபராகியுள்ளார் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.செல்வ கோமதி.

LinkWithin

Related Posts with Thumbnails