Wednesday, June 30, 2010

புகாரி என்றால் என்ன?

புகாரி என்றால் என்ன?
என் பெயர் புகாரி. என் தந்தை எனக்கு அன்போடு வைத்த பெயர். புகாரி என்று ஏன் பெயர் வைத்தார் என்று எனக்குத் தெரியாது. சொல்லும்போது அதன் உச்சரிப்பு அவரை ஈர்த்திருக்கலாம். அதன் பொருளில் மயங்கி வைத்திருக்கலாம். அல்லது எங்கோ ஒரு நண்பர் வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும் சிறுவனின் பெயர் புகாரி என்று கேட்டு, அன்றே தன் பிள்ளைக்கும் அதே பெயரைச் சூட்டவேண்டும் என்று ஆசைப் பட்டிருக்கலாம். ஆனால் எது உண்மை என்று நான் கேட்டுத் தெரிந்துகொள்ள என் தகப்பனார் உயிரோடு இல்லை. என் ஒன்பதாவது வயதிலேயே நான் போகிறேன் என்று ஒருவார்த்தை என்னிடம் கூறாமலேயே போய்விட்டார். அவருக்கு ரொம்பப் பிடித்தது அதனால் புகாரி என்று பெயர் வைத்தார் என்று என் அம்மா ஒற்றை வரியில் தன் விளக்கத்தை முடித்துக்கொண்டார்.

நான் என் பெயருக்கான பொருள் தேடி அலைந்தேன். ரஷ்யாவில் புகாரா என்ற இடத்திலிருந்து முகமது என்ற ஓர் இமாம் அரபு நாடு வந்து நபிகளின் வரலாறு அறிந்து 'ஹதீஸ்' என்னும் குறிப்புகள் தொகுத்தார். நபிகள் வாழ்வில் நடந்ததாகவும் நபிகள் கூறியதாகவும் இவர் தொகுத்த அந்தக் குறிப்புகள், ஆதாரப்பூர்வமானவை என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. அவரை இமாம் முகமது புகாரி என்று அழைப்பார்கள். அதாவது புகாரி என்பது புகாராவிலிருந்து வந்தவர் என்று பொருள் கொண்டது. அது அவருக்குக் குடும்பப் பெயர் ஆனது.

நான் புகாரி குடும்பத்தைச் சேர்ந்தவனா என்றால் சத்தியமாய் இல்லை.

ஆக, நான் புகாராவிலிருந்து வந்தவனும் அல்ல; புகாரி குடும்பத்தைச் சேர்ந்தவனும் அல்ல. ஒரு குடும்பப் பெயர் எனக்கு முதல் பெயராய் அமைந்திருக்கிறது. எனவே பொருளை நாமே உருவாக்க வேண்டியதுதான் என்று முடிவுசெய்தேன்.

தமிழகராதியில் புகார் என்ற சொல்லுக்கு அற்புதமான பொருள்கள் இருப்பதைக் கண்டேன்.

ஆற்றுமுகம்
காவிரிப்பூம்பட்டினம்
பனிப்படலம்
மந்தாரம்
மழைபெய்யும் மேகம்
கபிலமரம்
கபிலநிறம்
முறையீடு

இவற்றுக்கு எனக்கு மேலும் விளக்கம் தேவைப்பட்டது. என் பெயருக்கான பொருளாக மிகச் சரியாக எதைக்கொள்ளலாம் என்ற என் அலசலில், சொல்லறிஞர் ஒருவரின் உதவி தேவைப்பட்டது. சொல்லறிஞர் என்றதுமே எனக்கு திரு. இராம.கி அவர்களின் நினைவே வரும். என் கேள்வியை அவரிடமே விட்டேன். வழக்கம்போல் அவர் பதிலும் அற்புதமாய் வந்து இறங்கியது. அவருக்கு என் நன்றி. இதோ அவரின் விளக்கம்:

(இந்த விளக்கத்தின் இறுதியில் என் கவிதை ஒன்று என் பெயர் குறித்து இருக்கிறது)

அன்பிற்குரிய புகாரி,

ஆறு என்பது ஓடி வரும் போது அதன் கரைகளில் ஊர்களுக்கு அருகில் இருப்பது ஆற்றுத் துறை.

துறுதல் = நெருங்குதல், அணுகி வருதல்; நாம் வாழும் இடத்திற்கு அருகில் வருகிறது.

அதே ஆறு கடலை அடையும் போது அது கடலுக்குள் நுழைகிறது; அதாவது புகுகிறது; புகல்கிறது; புகருகிறது. புகரும் இடம் புகார். அப்படிப் பார்த்தால் எல்லா ஆறும் புகும் இடம் புகார்தான். (அதனால் தான் புகல் என்ற சொல் port என்ற ஆங்கிலச் சொல்லிற்கு முற்றிலும் இணையானது.) இருப்பினும் சிறப்பாகக் காவிரி புகும் இடத்திற்குப் புகார் என்று சொன்னார்கள். ஆறு கடலில் புகும் போது ஆற்றுப் பக்கம் ஒரு முகமும் கடலின் பக்கம் ஒரு முகமும், கடலிலிற்கும் ஆற்றிற்கும் அருகில் சற்று உள்வாங்கினால் போல் ஏற்படும் கழியில் (backwaters) இன்னொரு வகை முகமும் ஏற்படும்.

ஆற்றில் ஏற்படும் முகம் (இங்கே முகம் என்பது ஆங்கிலத்தில் சொல்லும் face என்னும் பொருள் தான்) ஆற்றுமுகம்; கடலைப் பார்த்தாற்போல் ஏற்படும் முகம் (ஆங்கிலத்தில் sea face என்பார்கள்.) கடல்முகம்; இதைக் கடற்புறம் என்றும் சொல்வது உண்டு. கழியைப் பார்த்தாற்போல் ஏற்படும் முகம் கழிமுகம்.

மேலே உள்ள மூன்றுமே புகாரில் உண்டு; (இந்தக் காலப் புகாரிலும் உண்டு; சற்று சீரழிவுடன். ஆனால் எர்ணாகுளம், கொச்சி போனால் இந்த மூன்றையும் பெரியாற்றின் முகப்பில் காணலாம்.)

காவிரி புகும் பட்டினம் காவிரிப் பூம்பட்டினம் ஆனது; அதற்கும் பூவுக்கும் முடிச்சுப் போடுவது கவிநயம் கருதியே ஒழிய உண்மை அல்ல.

இது போன்ற சொல்லாட்சிகள் இங்கிலாந்து, இரோப்பா போன்ற இடங்களில் ஆற்றின் மேல் உள்ள ஊர், கடலின் மேல் உள்ள ஊர் என்ற பெயர்களால் உண்டு. இங்கு சவுதியில் கூட Yanbu Al bahar (Yanbu on the sea) என்ற ஆட்சி உண்டு.

It is a city through which Kaveri enters the sea. இதுதான் காவிரிப் புகும் பட்டினத்தின் பொருள். நம் வேறாகப் புரிந்து கொண்டு குழம்பிக் கொள்கிறோம்.

இனி அடுத்த மூன்று பொருட்பாடுகள் மேகம், மழை, நீர் பற்றிய தொடர்பு கொண்டவை. இதை அறிய ப.அருளியின் "யா" என்ற பொத்தகத்தைப் படிக்கவேண்டும்.

புய் என்பது துளைக் கருத்து மூலவேர்
புய்+அல்>புயல் = துளைவளியாக ஒழுகுதலையுடைய முகில்

மிகப் பலவாகிய பொத்தல்கள் உடைய ஒரு நீர் நிரம்பிய கலத்தினின்று நீர் வெளிப்பட்டு ஒழுகுதலைப் போலவே மழைநீர்ச் சொரிதலைக் கண்டு அப்படிப் பெயர் ஏற்பட்டது. நாளடைவில் புயல் என்பது முகில், மழை, காற்றோடு அடிக்கும் மழை என்று பொருள் நீட்டம் பெற்றது.

இதே போல நிலத்தின் மேல் நிரம்பிக் கிடக்கும் நெடுநீர்ப் பரப்பில் இருந்து முகந்து கொண்டதால் முகில்

முகு>முகுவு>முகவு>முகவை = நீர் முகக்கும் கருவி முகு+இல்>முகில் = நீரை முகக்கும் மேகம். பின் அது மழையையும் குறித்தது.

முகில் கரிய தோற்றம் கொண்டதால் மை, மழை, மங்குல், மப்பு, மந்து, மஞ்சு, மாரி, மால், மாசு, மேகம், கார், ஆயம் எனப் பல சொற்களைப் பெற்றது.

மய்>மை = கரிய முகில்
மய்>மய்+ஐ>மயை>மழை = கரிய முகில்
மய்>மய்ம்>மம்>மம்பு>மப்பு = கரிய முகில்
மம்+கு>மங்கு>மங்குல் = கரிய முகில்
மய்>மய்ம்>மய்ம்+து>மய்ந்து>மந்து = கரிய முகில்
மய்>மய்ம்>மய்ம்+து>மய்ந்து>மய்ஞ்சு>மஞ்சு = கரிய முகில்
மய்>மாய்>மாய்கு>மாய்கம்>மேகம் = கரிய முகில்

நான் சொல்லிக் கொண்டே போகலாம். விரிவு அஞ்சி நிறுத்திக் கொள்கிறேன்.

மப்பும் மந்தாரமும் என்று சொல்வது இரட்டைக் கிளவி. மந்து+ஆரம் = மந்தாரம் = மேகக் கூட்டம்; மேகம் நிறைந்து நிற்பது; அடைந்து நிற்பது ஆறு கடலை அடைவதைப் போல; அதன் வழியாக நீர் கொட்டுகிறதல்லவா?

மேகப் படலம் பனிப் படலம் போல;

இனி அடுத்த பொருட்பாடு கபில நிறம்.

புகர்தல் என்பது துளையிடுதல் என்று சொன்னேன் அல்லவா? அதனால் புகர்வது புள்ளியிடுவது ஆகும். புகர் என்றால் புள்ளி என்றும் பெயர். புகரப் புகர கருத்தது இன்னும் கருக்கும்; சிவந்தது இன்னும் சிவக்கும்.

எனவே புகர் என்பதற்கு இருண்டது என்ற பொருளும் வந்தது. dark என்ற பொருளில். புகார் என நீண்டு brown நிறத்தைக் குறிக்கும். ஆங்கிலத்திலும் brown என்ற சொல்லின் பிறப்பு இந்தக் கருத்தில் தான். brown என்பது தமிழில் இரண்டு விதமாக உணரப் படும். ஒன்று கருமை கலந்த பொன்மை; இன்னொன்று கருமை கலந்த செம்மை..

கபில நிறம் என்பது இது தான்; brown நிறம். கிருஷ்ணன் என்றால் கருப்பன் என்பது போல் கபிலன் என்றால் புகர் நிறத்தான். புலவர் கபிலர் என்றால் என்னமோ, ஏதோ என்று எண்ணிக் கொள்கிறோம். அது அவருடைய நிறக் குறிப்பு. அந்தக் காலப் பெயர்கள் பல இப்படி நிறம் சார்ந்து இருக்கின்றன. கருப்பன், செவத்தான், பொன்னன், வெள்ளையன், நீலன், பச்சையப்பன் போல இது ஒன்று கபிலன்.

இந்தப் புகரிலேயே கொஞ்சம் செம்மை கூடிவிட்டால் அது குரால் எனப் படும் (reddish brown).

தமிழில் இருக்கின்ற நிறப் பெயர்கள் இன்னும் பலருக்குத் தெரிவதில்லை.

பெருங்கூச்சல், முறையீடு இரண்டும் வேற்று மொழிச் சொல்லால் கொண்ட பொருட்பாடுகள். இந்த மூலம் பாரசீகமோ, என்னவோ எனக்குத் தெரியாது.

அன்புடன்,
இராம.கி.


ஆக, நான்
கபில நிறத்தவனோ

கூட்டம் கூடி
கருணைக் கும்மியடித்து
மண்ணுக்குத் தேன் பொழியும்
மேக மனத்தவனோ

எண்ணக் குஞ்சுகள்
சின்னச் சிறகினை
விண்ணில் விரிக்க
மெல்லக் கிழிக்கும்
பனிப்படலமோ

ஓடித் திரிந்த
காவிரிப் பெண்ணின்
காதல் புகலிடமோ

ஆற்றலைத் தாகமும்
கடலலை மோகமும்
ஆரத்தழுவ
ஆசையாய் விரிந்துகிடக்கும்
இன்ப மடியோ

கற்பனை நீர் முத்துக்கள்
கணக்கற்று இறைய இறைய
கவிதை இழைகள்
காற்றினில் நிறைய நிறைய
கருத்துகள் எடுத்து வீச
புறப்பட்ட புயலோ

நானறியேன் நானறியேன்
ஆனால்...

புகாரி என்றெவரும்
அன்போடு அழைக்கும்போது
பூரித்துப் போகிறேன்
இந்த
அன்புடன் புகாரி

அதுவொன்றே
போதும் எனக்கு! 

http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_3834.html

ஹதீஸிலிருந்து..துவா -Hadeeth Duas in Tamil

Hadeeth Duas in Tamil    
ஹதீஸிலிருந்து..

1. யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்விலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் நலனையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். யாஅல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைப்பாயாக! யாஅல்லாஹ்! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலது புறமிருந்தும் இடது புறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக! எனக்கு கீழ்புறத்திலிருந்து நான் எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை உன் வல்லமையைக் கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.(அபூதாவூத்)

2. யாஅல்லாஹ்! எனது உடலில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! எனது செவிப்புலனில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! எனது பார்வையில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. (அபூதாவூத்)

3. யா அல்லாஹ்! இறைநிராகரிப்பை விட்டும் வறுமையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். யா அல்லாஹ்! மண்ணறையின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. (அபூதாவூத்)

4. யா அல்லாஹ்! நீயே என் இரட்சகன்! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன்னுடைய அடிமை. நான் என்னால் முடிந்த அளவிற்கு உனது உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியின் மீது நிலைத்திருக்கின்றேன். நான் செய்த சகல தீமையைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நீ எனக்களித்த அருட்கொடைகளைக் கொண்டு உன்பக்கமே நான் மீளுகின்றேன். இன்னும் என்னுடைய பாவங்களை (மனமாற) ஒப்புக் கொள்கின்றேன். எனவே, என்னை நீ மன்னித்தருள்வாயாக! உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. (புகாரி)

5. யா அல்லாஹ்! கவலை, துயரம், இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடனின் சுமை மற்றும் மனிதனின் ஆதிக்கம் அனைத்தை விட்டும் நிச்சயம் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (புகாரி)

6. யா அல்லாஹ்! இந்த பகலின் ஆரம்பத்தைச் சீர்திருத்தம் உள்ளதாகவும் அதன் நடுவை வெற்றியுள்ளதாகவும் அதன் கடைசியை லாபம் உள்ளதாகவும் ஆக்கியருள்வாயாக! அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே! உலக நலவையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். (முஸன்னஃப் இப்னு அபீஷைபா)

7. விதியை பொருந்திக் கொள்ளும் தன்மையையும் மரணத்திற்குப் பின் குளிர்ந்த (சொர்க்க) வாழ்வையும், வழிகெடுக்கும் குழப்பத்திலும் தீய விளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டுவிடாது உன்னைச் சந்திப்பதின் ஆசையையும் உன் திருமுகத்தைப் பார்ப்பதில் அடையும் பேரின்பத்தையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். நான் யாருக்கும் அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது யாராவது எனக்கு அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது நான் அத்துமீறுவதிலிருந்தும் அல்லது யாராவது என்மீது அத்துமீறுவதிலிருந்தும் அல்லது மன்னிக்கப்படாத தவறு மற்றும் பாவத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (தப்ரானி)

8. யா அல்லாஹ்! கஞ்சத்தனத்திலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன், இன்னும் கோழைத்தனத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன், இன்னும் தள்ளாத முதுமை வரை உயிர் வாழ்வதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். உலகத்தின் குழப்பத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன், கப்ருடைய வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். (புகாரி)

9. யா அல்லாஹ்! நல் அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் உன்னைத் தவிர வேறு யாரும் நேர்வழி காட்டமுடியாதே, அத்தகைய நல் அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் எனக்கு நீ நேர்வழி காட்டுவாயாக! கெட்ட அமல்கள் மற்றும் கெட்ட குணங்களிலிருந்து உன்னைத்தவிர (வேறு) யாரும் என்னை பாதுகாக்க முடியாதே, அத்தகைய கெட்ட செயல்கள்; மற்றும் கெட்ட குணங்களிலிருந்தும் என்னை (தடுத்து) பாதுகாப்பாயாக! (திர்மிதி)

10. யா அல்லாஹ்! என் மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக! என் வீட்டை எனக்கு நீ விஸ்தீரணப்படுத்துவாயாக! என் உணவில் நீ அருள்புரிவாயாக!. (மஜ்மஃ ஸவாயித்)

11. யா அல்லாஹ்! என் உள்ளத்தில் இறையச்சத்தை ஏற்படுத்துவாயாக! இன்னும் அதனைத் தூய்மைப் படுத்துவாயாக! நீயே அதனைத் தூய்மைப் படுத்துபவர்களில் மிகச் சிறந்தவன்! அதனுடைய பொறுப்பாளனும் தலைவனும் நீயே! யா அல்லாஹ்! பிரயோஜனம் இல்லாத அறிவு, பயப்படாத உள்ளம், திருப்தியடையாத மனம் மற்றும் ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.(முஸ்லிம்)

12. யா அல்லாஹ்! நான் செய்த மற்றும் செய்யாத கெட்ட செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (முஸ்லிம்)

13. யா அல்லாஹ்! உன் அருட்கொடைகள் (என்னைவிட்டு) நீங்குவதை விட்டும், நீ (எனக்கு) அளித்த ஆரோக்கியத்தன்மை (என்னை விட்டு) மாறுவதை விட்டும், உனது திடீர் தண்டனையை விட்டும், உன்னுடைய (சகலவிதமான) கோபங்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (முஸ்லிம்)

14. யா அல்லாஹ்! (ஏதேனும்) இடிந்து விழுவதிலிருந்தும், உயரத்திலிருந்து கீழே விழுவதிலிருந்தும், முதுமையிலிருந்தும், நீரில் மூழ்குவதிலிருந்தும், எரிந்து இறப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். மரண நேரத்தில் ஷைத்தான் என்னைத் தீண்டுவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். உன் பாதையிலே புறமுதுகு காட்டி கொல்லப்படுவதை விட்டும் (விஷஜந்துக்களால்) கொட்டப்பட்டு இறப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். (அஹ்மத்)

15. யா அல்லாஹ்! உள்ளத்தில் முத்திரையிடப்படும் அளவிற்கு பேராசை ஏற்படுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.(ஷரஹுஸ்ஸுன்னா)
.
16. யா அல்லாஹ்! கெட்ட ஆசைகள், கெட்ட செயல்கள் இன்னும் வெறுக்கத்தக்க குணங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.(திர்மிதி)

17. யா அல்லாஹ்! என்னுடைய மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் எனது அரண். எனது உலகை எனக்குச் சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் நான் வாழுமிடம். எனது மறுமையைச் சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் நான் திரும்பிச் செல்லுமிடம். எனது வாழ்க்கையில் அதிக நன்மைகள் புரிவதற்கு வாய்ப்பளிப்பாயாக! அனைத்து கெடுதிகளை விட்டும் விடுபட்டதாக எனது மரணத்தை ஆக்கியருள்வாயாக! (முஸ்லிம்)

18. யா அல்லாஹ்! (சகல நல்ல) காரியங்களில் நிலைத்திருப்பதையும், நேர்வழியில் உறுதியையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். இன்னும் உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திடவும் உன்னை அழகிய முறையில் வணங்கிடவும் நான் உன்னிடம் கேட்கின்றேன். தூய்மையான உள்ளத்தையும் உண்மை உரைக்கும் நாவையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். உனக்குத் தெரிந்த நலவுகளை (எல்லாம்) கேட்கின்றேன். உனக்குத் தெரிந்த எல்லா கெடுதிகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். உனக்குத் தெரிந்த (எல்லாப்) பாவங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (நஸாயி)
.
19. யா அல்லாஹ்! எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! என் ஆத்மாவின் கெடுதிகளிலிருந்து என்னைக் காத்தருள்வாயாக! (திர்மிதி)
.
20. யா அல்லாஹ்! நற்காரியங்களைச் செய்யவும், வெறுக்கத்தக்க காரியங்களை விட்டுவிடவும், ஏழைகளை நேசிக்கும் தன்மையையும் தந்து, என் பாவங்களை மன்னித்து, எனக்கு அருள்புரியும்படி நான் உன்னிடம் கேட்கின்றேன். ஒரு கூட்டத்தை நீ குழப்பத்தில் ஆழ்த்த விரும்பினால், குழப்பத்தில் ஆழ்த்தப்படாத நிலையிலேயே என்னை உன்னளவில் மரணிக்கச் செய்து விடுவாயாக! (யா அல்லாஹ்!) உன்னுடைய நேசத்தையும் உன்னை நேசிப்பவர்களின் நேசத்தையும் உன் நேசத்தின் பக்கம் சமீபமாக்கி வைக்கக்கூடிய அமலின்மீது நேசத்தைபும் நான் உன்னிடம் கேட்கின்றேன். (திர்மிதி)
 .
21. யா அல்லாஹ்! சிறந்த வேண்டுகோளையும் சிறந்த பிரார்த்தனையையும் சிறந்த வெற்றியையும் சிறந்த அமலையும் சிறந்த நன்மையையும் சிறந்த உயிர்வாழ்வையும் சிறந்த மரணத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். (யா அல்லாஹ்!) என்னை நீ உறுதிப்படுத்துவாயாக! என்னுடைய தராசை (நன்மையால்) அதிக எடையுள்ளதாக ஆக்கியருள்வாயாக! என்னுடைய ஈமானை (நம்பிக்கையை) உறுதிப்படுத்துவாயாக! என் அந்தஸ்தை உயர்த்துவாயாக! என்னுடைய தொழுகையை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தை மன்னித்தருள்வாயாக! (யா அல்லாஹ்!)சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.(தப்ரானி)

22. யா அல்லாஹ்! நன்மைகளின் ஆரம்பங்களையும் முடிவுகளையும் இன்னும் எல்லா நன்மைகளையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். நன்மைகளின் ஆரம்பம், முடிவு, அதன் வெளிப்படை, அந்தரங்கம் மற்றும் சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.(தப்ரானி)

23. யா அல்லாஹ்! நீ என்னுடைய ஞாபகத்தை உயர்த்துவதையும் என் பாவத்தை மன்னிப்பதையும் என் காரியத்தை சீர்படுத்துவதையும் என் உள்ளத்தை தூய்மைப்படுத்துவதையும் என் அபத்தை (கற்பை) பத்தினித்தனமாக்குவதையும் என்னுடைய உள்ளத்தை இலங்கச் செய்வதையும் என்னுடைய பாவங்களை மன்னிப்பதையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன்.(யா அல்லாஹ்!) இன்னும் சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். (ஹாகிம்)

24. யா அல்லாஹ்! என் ஆத்மாவிலும் என் கேள்விப்புலனிலும் என் பார்வையிலும்; என் உயிரிலும் என் உடலமைப்பிலும் என் குணத்திலும் என் குடும்பத்திலும் என் உயிர்வாழ்விலும் என்னுடைய மரணத்திலும் என்னுடைய அமல்களிலும் நீ அருள்புரியும்படி நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். ஆகவே, என்னுடைய நற்காரியங்களை நீ ஏற்றுக் கொள்வாயாக! (யா அல்லாஹ்!)சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். (ஹாகிம்)
.
25. யா அல்லாஹ்! கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும், விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும் தீய முடிவுகளை விட்டும் விரோதிகளின் கேலி கிண்டல்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். (புகாரி)

26. உள்ளங்களை புரட்டக்கூடிய அல்லாஹ்வே! உன் மார்க்கத்தின் மீது என் உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக! (திர்மிதி)

27. உள்ளங்களை திருப்பக்கூடிய அல்லாஹ்வே! உனக்கு வழிபடுவதின் மீது என் உள்ளத்தை திருப்பி விடுவாயாக!. (முஸ்லிம்)

28. யா அல்லாஹ்! (உன் அருட்கொடைகளை) எங்களுக்கு அதிகப்படுத்துவாயாக! எங்களுக்குக் குறைத்துவிடாதே! எங்களை கண்ணியப்படுத்துவாயாக! எங்களை இழிவு படுத்திவிடாதே! (உனது அருட்கொடைகளை) எங்களுக்குத் தந்தருள்வாயாக! (உன் அருளைப்பெறாத) துற்பாக்கியவான்களாக எங்களை ஆக்கிவிடாதே! (உன் அருளைப்பெற) எங்களை தேர்ந்தெடுப்பாயாக! பிறரை எங்களைவிட தேர்ந்தெடுக்காதே! எங்களை பொருந்திக் கொள்வாயாக! இன்னும் எங்களைத் தொட்டும் (அமல்களை) பொருந்திக் கொள்வாயாக! (திர்மிதி)

29. யா அல்லாஹ்! எங்களின் எல்லாக் காரியங்களின் முடிவையும் நன்மையாக ஆக்கி வைப்பாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் எங்களைப் பாதுகாத்தருள்வாயாக! (அஹ்மத்)
.
30. யா அல்லாஹ்! உனக்கு மாறு செய்வதை விட்டும் எங்களைத் தடுக்கக்கூடிய (உன்னைப்பற்றிய) அச்சத்தையும், உன்னுடைய சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் வழிபாட்டையும், உலகச் சோதனைகளை எளிதாகக் கருதச் செய்யும் (மன) உறுதியையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக! (யா அல்லாஹ்!) எங்களுடைய செவிப்புலன்களையும், பார்வைகளையும் (உடல்) சக்தியையும் நீ எங்களை உயிர்வாழ வைக்கும் காலமெல்லாம் (குறைவின்றி) இயங்கச் செய்வாயாக! அதனையே எங்கள் வாரிசுகளுக்கும் (சந்ததிகளுக்கும்) ஆக்கியருள்வாயாக! எங்களுக்கு அநீதம் செய்தவர்களைப் பழி வாங்குவாயாக! எங்கள்மீது விரோதம் கொண்டவர்களுக்குப் பாதகமாக எங்களுக்கு நீ உதவி செய்வாயாக! எங்களுடைய மார்க்கத்தில் எங்களுக்கு சோதனையை ஏற்படுத்திவிடாதே! இவ்வுலகையே எங்கள் நோக்கமாகவும் எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்கிவிடாதே! (எங்களின் பாவங்களினால்) எங்கள்மீது இரக்கம் காட்டாதவனை எங்களுக்கு பொறுப்பாளியாக ஆக்கிவிடாதே! (திர்மிதி)
.
31. யா அல்லாஹ்! உனது அருளைப் பெற்றுத்தரும் செயல்களையும், உனது மன்னிப்பில் உறுதி கொள்ளும் நிலையையும் அனைத்து நல்லறங்களின் பிரதிபலன்களையும் அனைத்து பாவங்களைவிட்டும் பாதுகாப்பையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். (தப்ரானி)

32. யா அல்லாஹ்! என்னுடைய பாவத்தை, நீ மன்னிக்காமல் விட்டுவிடாதே! கவலையைப் போக்காமல் விட்டுவிடாதே! கடனை அடைக்காமல் விட்டுவிடாதே! அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே! உலக மற்றும் மறுமையின் தேவைகளில் எத்தேவைகளையும் உன் அருளைக் கொண்டு எங்களுக்கு நிறைவேற்றாமல் விட்டுவிடாதே! (தப்ரானி)

33. யா அல்லாஹ்! தீர்ப்பு நேரத்தில் (நாளில்) வெற்றியையும் ஷுஹதாக்களின் அந்தஸ்தையும் நற்பாக்கியம் உள்ளவர்களின் வாழ்க்கையையும் நபிமார்களுடன் இருப்பதையும் எதிரிகளுக்கு எதிராக உதவி கிடைப்பதையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். (ஸஹீஹ் இப்னு குஸைமா)

34. யா அல்லாஹ்! ஈமானில் உறுதியையும் நல்லொழுக்கத்தில் உறுதியையும் வெற்றியைப் பின் தொடரும் லாபத்தையும் உன்னிடமிருந்து அருளையும் ஆரோக்கியத்தையும் பிழை பொறுப்பையும் திருப்பொருத்தத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். (ஹாகிம்)
.
35. யா அல்லாஹ்! ஆரோக்கியத்தையும் பத்தினித் தனத்தையும் அமானிதத்தை பேணுதலையும் நல்லொழுக்கத்தையும் விதியை ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். (ஷுஅபுல் ஈமான் லில்பைஹகி)

36. யா அல்லாஹ்! என் நிலையினை நீ பார்க்கின்றாய். என் பேச்சை நீ கேட்கின்றாய். என் அந்தரங்கத்தையும் பகிரங்கத்தையும் (ஒன்று போல்) நீ அறிகிறாய். என் காரியத்தில் எதுவும் உன்னிடம் மறைந்ததாக இல்லை! நான் ஒன்றுமில்லாத ஏழை! இரட்சிப்புத் தேடுபவன்! அபயம் தேடுபவன்! இரக்கத்தன்மையுள்ள, இழகிய உள்ளமுள்ள, செய்த பாவங்களை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொள்பவன், மிஸ்கீனின் (ஏழையின்) வேண்டுகோளாக உன்னிடம் வேண்டுகின்றேன். பணிந்த நிலையில் மண்டியிடும் பாவியின் மன்றாடுதலாக மன்றாடுகின்றேன். (யா அல்லாஹ்!) பிடரியைப் பணியவைத்து, மேனியைப் பணிவாய் வைத்து, மூக்கையும் (முகத்தையும்) மண்ணில் வைத்து குருடரான பயந்தவனின் பிரார்த்தனையாக, நான் உன்னிடம் பிரார்த்திக்கின்றேன். (தப்ரானி)
.
37. யா அல்லாஹ்! எனக்கு நானே அதிக அளவு அநீதி இழைத்து விட்டேன். பாவங்களை மன்னிப்பவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. எனவே, உனது பிரத்யேக மன்னிப்பில் என்னை மன்னித்தருள்வாயாக! மேலும் என் மீது அருள் பொழிவாயாக! நிச்சயமாக நீயே அதிகம் மன்னிப்பு வழங்குபவன். கருணை பொழிபவன். (புகாரி, முஸ்லிம்)
.
38. யா அல்லாஹ்! நான் முன்னர் செய்தவற்றையும் பின்னர் செய்தவற்றையும் இரகசியமாய் செய்தவற்றையும் பகிரங்கமாக செய்தவற்றையும் எல்லை கடந்து அதிகப்படியாகச் செய்தவற்றையும் மேலும் எந்தப் பிழைகளை நீ என்னை விட அதிகம் அறிந்துள்ளாயோ அந்தப்பிழைகளையும் நீ மன்னிப்பாயாக! முன்னதாக அல்லது தாமதமாக ஏற்பட்ட அனைத்துப் பொருட்களையும் உருவாக்கியவன் நீயே! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. (முஸ்லிம்)

39. யா அல்லாஹ்! உன்னை நினைவு கூர்வதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எனக்கு நீ உதவி செய்தருள்வாயாக! (அபூதாவூத், நஸாயி)

40. யா அல்லாஹ்! கஞ்சத்தனத்தை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன், மேலும் கோழைத்தனத்தை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன், மேலும் அதிமுதிர்ந்த வயது வரையில் எனது வாழ்வு நீடிக்கச் செய்யப்படுவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன், மேலும் உலகத்தின் குழப்பத்தை விட்டும் மண்ணறையின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (புகாரி)
.
41. யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்கின்றேன், மேலும் நரகத்திலிருந்து உன்னிடம் பாதுகாவலும் தேடுகின்றேன். (அபூதாவூத்)

42. யா அல்லாஹ்! உன்னுடைய மறைவான அறிவைக் கொண்டும் படைப்பினங்கள் மீதுள்ள உனது ஆற்றலைக் கொண்டும் (நான் கேட்கின்றேன்) நான் (இவ்வுலகில்) வாழ்வது எனக்கு நலவாக இருந்தால் என்னை உயிர் வாழ வைப்பாயாக! நான் மரணிப்பது எனக்கு நலவாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! யா அல்லாஹ்! மறைவான நிலையிலும் வெளிப்படையான நிலையிலும் உனக்கு அஞ்சி வாழ்வதை கேட்கின்றேன். சந்தோச நிலையிலும் கோபப்படும் போதும் சத்தியத்தை மொழியும் பாக்கியத்தை நான் உன்னிடம் கேட்கின்றேன். செல்வ நிலையிலும் வறுமையிலும் நடுநிலை பேணுவதை கேட்கின்றேன். முடிவில்லாத அருட்பாக்கியத்தை நான் உன்னிடம் கேட்கின்றேன், மேலும் உனது தீர்ப்பின் மீது திருப்தி கொள்ளும் (மனோ) நிலையை நான் உன்னிடம் கேட்கின்றேன், மேலும் மரணத்தின் பின் இதமான வாழ்க்கையையும் நான் உன்னிடம் கேட்கின்றேன், மேலும் உனது திருமுகத்தை காணும் இன்பத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன், இன்னும் வழிகெடுக்கும் குழப்பத்திலும் தீய விளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டுவிடாது உன்னைச் சந்திப்பதில் ஆர்வத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன், யா அல்லாஹ்! ஈமான் எனும் இறைவிசுவாசத்தின் அழகைக்கொண்டு எங்களை அழகு படுத்துவாயாக! மேலும் நேர்வழி பெற்றவர்களாகவும் நேர்வழி காட்டுபவர்களாகவும் எங்களை ஆக்கியருள்வாயாக! (அஹ்மத்,நஸாயி)

43. யா அல்லாஹ்! நிச்;சயமாக நீ ஏகன், தனித்தவன், தேவையற்றவன், யாரையும் பெறாதவன்,எவராலும் பெறப்படாதவன், உனக்கு நிகராக எவரும் எதுவும் இல்லை என்ற (உன் திருநாமம் மற்றும் உன் பண்புகளைக்) கொண்டு நான் உன்னிடம் கேட்கின்றேன், நீ என் பாவத்தை மன்னித்தருள்வாயாக! நிச்சயமாக நீ, மிக பிழை பொறுப்பவனும் கருணை பொழிபவனுமாய் இருக்கின்றாய். (அபூதாவூத்)

44. யா அல்லாஹ்! நிச்சயமாக புகழ் அனைத்தும் உனக்கே உரித்தானது, வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீ தனித்தவன், உனக்கு யாதொரு இணை துணை இல்லை, மிக கொடையாளன், வானங்களையும் பூமியையும் முன்மாதிரி இன்றி படைத்தவனே! மகத்தவமும் கண்ணியமும் உடயவனே! நித்திய ஜீவனே! (இத்தனை உனது பெயர் மற்றும் தன்மைகளை) கொண்டு நிச்சயம் நான் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்கின்றேன், இன்னும் நரகத்திலிருந்து பாதுகாப்பும் தேடுகின்றேன். (அபூதாவூத், திர்மிதி, பராஉ இப்னு ஆஸிப் -ரலி-)

Source:Rizwana Hassan, Malaysia
http://www.jsyedali.com/islamic_articles/tamil_hadeeth_duas.php

விந்துக்குள் விந்தை

 
இறைவனுடைய படைப்பில் எல்லாமே அதிஅற்புதமும் விந்தைகளும் நிறைந்தது, அதில் விந்து ஒரு விந்தையானது, இதைத்தான் இறைவன் கூறுகிறான் உன் பிறப்பை பற்றி நீ சிந்தித்தால் என்னைப் பற்றி அறிந்துக் கொள்வாய் என்று கூறுகிறான். இதில் ஆழமான அர்த்தம் உள்ளது.

மனிதன் செழுத்தும் ஒரு சொட்டு விந்தில் பல்லாயிரக் கணக்கான உயிரணுக்கள் பெண்ணின் யோனியில் விடப்படுகிறது அங்கிருந்து ஃபிலொப்pயன் டியுப் வழியாக கரு முட்டையை சென்றடைகிறது. இந்த ஃபிலொபியன் டியுபிற்கும் விந்தணு கரு முட்டையை சென்றடைதற்கும் உள்ள தூரம் ஒரு மனிதன் 5 மைல் நீளம் ஆற்றை நீந்திக் கடப்பதற்கு சமமானது. ஒரு கூட்டமாக செல்லும் விந்தணுக்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டது கருமுட்டையை துளைத்து சென்று அடைந்ததும் மற்ற விந்தணுக்கள் வாழ்த்துச் சொல்லி திரும்பி விடுகிறது.

எதிர் நீச்சலும், மற்றவரை முந்தி செல்ல வேண்டிய நிர்பந்தமும் மனித உயிரணுக்கு அப்பொழுதே தொடங்கி விடுகிறது. உள்ளே செல்லும் நுண் உயிரியான அது தான் 6 அடி உயரமுள்ள மனிதனாக பரிணமிக்கிறது. என்னே இறைவனின் வல்லமை.

விந்தணு ஃபிலோபியன் டியுப் வழியாக கரு முட்டை நோக்கி செல்லும் போது.
ஒரே சமயத்தில் இரண்டு விந்தணுக்கள் கரு முட்டையை துளைத்து உள்ளேரும் போது.
Genetical material உயிரணுவின் தலையில் Store செய்யப்பட்டிருக்கிறது.
8 நாட்கள் ஆன Embryo, Mucous membrane என்ற tissue ஆல் போர்த்தப் படுகிறது.
22 நாட்கள் ஆன embryo யில் முதலில் உருவாவது மனித மூளை
24 நாட்களில் இதயம் உண்டாகி துடிக்கத் தொடங்குகிறது.
9 வாரங்களில் V வடிவ இரத்தக் குழாய் கள் உண்டாகி எலும்புகளும் உண்டாகின்றன.
10 வாரங்களில் 3 செ.மி நீளம் வளர்கிறது.
20 வாரங்களில் குழந்தை 20 செ.மி நீளம் வளர்கிறது.
36 வாரங்களில் குழந்தை முழு உருவம் பெறுகிறது
இரட்டை குழந்தை இருக்கும் விதம்


Source : http://rajakamal.blogspot.com/2009/10/blog-post_14.html

நட்பு................

முனைவர் கல்பனாசேக்கிழார்

நட்பு என்பதற்கு அன்பு,ஒத்த கருத்து,நலன்,அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகாரதியும், நட்பு,தோழமை என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும்.வயது,மொழி,இனம்,நாடு என எந்த எல்லைகளும் இன்றி,புரிந்து கொள்ளுதலையும்,அனுசரித்தலையிம் அடிப்படையாகக் கொண்டது நட்பு.நண்பர்கள் ஒருவருக்கொருவர் அனுசரித்துத் தங்களின் தனிப்பட்டு விருப்பு வெறுப்புக்களை மறந்து கொள்ளவார்கள்.நண்பர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்து,இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவார்கள் என விக்கீப்பீடியாவும் பொருள் கூறுகின்றன.
க்ரியா உறவினர் அல்லாத ஏற்படும் உறவு நட்பு எனக் கூறுகின்றது. விக்கிபீடியாவோ பொதுவாக இருவரிடம் தோன்றும் உறவு என்று கூறுகின்றது.
நட்பினை ஆணுக்கும் ஆணுக்கும் ஏற்படும் நட்பு பெண்ணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் நட்பு ,பெண்ணுக்கும் ஆணுக்கும் ஏற்படும் நட்பு என்று வகைப்படுத்துகின்றனர்.சங்க இலக்கியத்தில் பார்க்கும் போது ‘பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’ என்னும் அடி ஆண்பெண் நட்பைக் கூறுவதைக் காணலாம்.இங்கு காதலை நட்பாக கூறப்பட்டுள்ளதையும் அறியலாம்.
நட்பின் பெருமையை உணர்ந்த திருவள்ளுவரும் நட்பு ,நட்பாராய்தல்,பழமை,தீ நட்பு,கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களில் நட்பினைப் பற்றி பேசுகின்றார். ஆய்து ஆய்து தெளிந்து நட்பு கொண்ட பிறகு, அந் நட்பினை எவ்வாறு பேணவேண்டும் என்பதைப் பற்றியும் பேசுகின்றார்.
நட்பு என்ற சொல்லுக்கு வேர் சொல் ‘நள்’ என்பதாகும்.’நள்’ என்றால் செறிந்த என்பது பொருளாகும். கருமையால் செறிந்த இரவினை நள்ளிரவு என்று கூறுவதைப் போல அன்பினால்,கருத்தினால் செறிந்தவர்களை நண்பர்கள் என்று கூறலாம்.
நண்பர்கள் இல்லாத வாழ்க்கை நரம்பற்ற வீணைக்குச் சமம்,நண்பர்கள் இல்லாத வாழ்க்கை சாட்சி இல்லாத மரணத்துக்குச் சமம். (ஊருக்கு நல்லது சொல்வேன் ,தமிழருவி மணியன்)நரம்பில்லாத வீணை இனிய இசையை கேட்கமுடியாது,அது போலவே நண்பர்கள் இல்லாத வாழ்வு அவ்வளவு இனிமையுடையதாக இருப்பதில்லை.
நல்ல நட்பு ஒருமனிதனுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தையே உண்டு பண்ணும்,தீய நட்பு அவன் வாழ்க்கையே அழித்துவிடும்.கண்டவுடன் தோன்றும் நட்பும்,காதலும் நீடிப்பது இல்லை.நட்பை ஆய்ந்து ஆய்து கொள்ளவேண்டும் என்பர் வள்ளுவர்.
நிலத்தினும் பெரிதாய் ,வானினும் உயர்ந்த்தாய்,கடலினும் ஆழமாதாய்,தாமரைத் தண்தாதூதி மீமிசைத் சாந்தின் தொடுத்த தீந்தேனாய் நட்பு இருந்தாலும் அங்கு சுயநலம் என்பது தலைகாட்டாமல் அன்பில் கனிந்த நட்பாக இருக்க வேண்டும்.ஒருவருக்காக ஒருவரை இழக்க துணியவேண்டும்,புரிதல் வேண்டும் ஒன்றாய் உண்டு ,களித்து,ஊர் சுற்றுவதல்ல நட்பு.அகத்து ஒன்றாய் பிறருடைய கருத்தை மதிக்க கூடியவராய் இருக்கவேண்டும் . நண்பனுக்குத் துன்பம் நேர்கையில் ,அவனை விட்டு நீங்காது அத்துன்பத்தைப் போக்கி,அவனைத் தேற்றி நல்லவழியில் செலுத்தி,தன்னால் உதவி செய்யமுடியவில்லை என்றாலும்,
அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்
அல்லல் உழப்பதாம் நட்பு (787)

நட்டாருக்கு அழிவுவந்தவிடத்து,அவர் துன்பத்தை நீக்கி,நல்ல நெறியின்கண் செலுத்தித் தாங்கி,தன்னால் செயலற்றவிடத்து அவரோடு ஒக்கத் தானும் துன்பம் உழப்பது நட்பு எனுற விளக்கம் தருவர் மணக்குடவர்.
நல்ல நட்பு உன் உள்ளத்தையும் உடலையும் வளர்க்கும்.நட்பைத் தேடுவதில் நிதானமாகச் செயல்படவேண்டும்.கிடைத்த நட்பை பொக்கிஷம் போல் பாதுகாத்துக்கொள்.சாக்கரட்டீஸ்.
வள்ளுவரும் நட்பை ஆய்ந்தாய்ந்து கொள்ளவேண்டும் என்கின்றார். அப்படி கொள்ளத நட்பு சாகும் காலம் வரை துன்பத்தைத் தரக்கூடியதாகவே இருக்கும். ஆகையின் நண்பராக தேர்ந்துகொள்ளுவதற்கும் பல முறை சிந்தித்து நட்பு கொள்ளவேண்டும்.
Source :http://www.sekalpana.com/2010/01/blog-post_24.html

நட்புச் சதுரங்கம்!


"நண்பர்களோடு இருக்கையில் உன்னிடம் மறைவாக குறுவாள் இருக்கவேண்டியது அவசியம்" ஒரு ஐரோப்பிய சிந்தனையாளரின் கருத்து இது.

வாழ்க்கையில் நம்மால் விடையளிக்க முடியாத புதிர்கள் ஏராளம். அவற்றில் முக்கியமானது நட்பு. எது உண்மையான நட்பு? எது போலி நட்பு? என்று கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தும் இன்னமும் என்னால் அடையாளம் காண இயலவில்லை. ஓரிரு முறை பழகியிருந்தாலும் எந்த பிரதிபலனும் பாராமல் ஆபத்துக் காலத்தில் உதவிய நண்பர்களையும் கண்டிருக்கிறேன். முகத்துக்கு நேரே உயிருக்கு உயிராக பழகி, முதுகுக்கு பின்னால் குத்திய நண்பர்களையும் கண்டிருக்கிறேன்.

ரத்த பந்த உறவுகள் மீது நாம் கொள்ளும் பாசத்துக்கும், அறிமுகமான பாவத்துக்கு நட்புக்கள் நம் மீது காட்டும் பாசத்துக்குமான வேறுபாடுகளை உணரமுடிகிறது. முந்தையது கட்டாயத்தின் பேரில், மரபுரீதியாக, வேறுவழியில்லாமல் வந்து தொலைப்பது. பிந்தையது எந்த புள்ளியிலும் வரையறுக்க இயலாதது.

என்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த நண்பர் ஒருவர் எப்போதும் நிர்வாகத்தை குறை சொல்லிக்கொண்டே இருப்பார். முதலாளியைப் பற்றிய மோசமான விமர்சனங்களே அவர் அலுவலக நண்பர்கள் மத்தியில் பேசும்போது அதிகமாக இடம்பெறும். ஆயினும் வருடா வருடம் சம்பள உயர்வின் போது மட்டும் அவர் எங்கள் எல்லாரையும் விட லீடிங்கில் இருப்பார்.

அந்த ரகசியம் சில ஆண்டுகள் கழித்து நான் நிறுவனத்தை விட்டு வெளியே வந்தபின்னர் தான் தெரிந்தது. எங்களிடையே நிர்வாகத்தையும், முதலாளியையும் குறைசொல்வது போல பேசி.. நாங்கள் தெரியாத்தனமாக ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளை விட்டால் அதை முதலாளியிடம் சொல்லி இரட்டை வேடம் போட்டிருக்கிறார். இன்றும் அவர் என்னிடம் நல்ல நண்பராகத்தான் இருக்கிறார். ஆயினும் எங்கள் நட்பை அவர் தன் சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டார் என்ற உறுத்தல் எனக்கு இருக்கிறது.

விளம்பரத்துறைக்கு வந்த என்னுடைய ஆரம்ப நாட்களில் மிகக்குறைந்த சம்பளத்துக்கு அதிகவேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்நிறுவனத்தின் டெல்லி கிளை நிர்வாகி ஒரு முறை சென்னை வந்திருந்தார். ஒத்தவயதினராக இருந்ததால் என்னுடன் மிக சுலபமாக பழகினார். இருவரும் நட்பாக இருந்த காலத்தில் அவருக்கு தனிப்பட்ட முறையில் சில உதவிகளை (ரொம்ப ரொம்ப அல்பமான உதவிகள்) செய்து தந்தேன். அவர் டெல்லி திரும்பியவுடன் அவருடன் இருந்த என்னுடைய நட்பு எப்போதாவது சாட்டிங்கில் "ஹலோ" சொல்லும் அளவிலேயே இருந்தது.

அந்த ஆண்டு சம்பள உயர்வின் போது, சென்னை கிளை நிர்வாகிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி நிர்வாக இயக்குனர் நான் எதிர்பாராத பெரிய அளவிலான சம்பள உயர்வையும், மற்ற சலுகைகளையும் வழங்கினார். நானே எதிர்பாராத ஆச்சரியம் அது. சில ஆண்டுகள் கழித்து ஒரு முறை நிர்வாக இயக்குநரே என்னிடம் தனிப்பட்ட முறையில் "உன் டெல்லி நண்பரின் பலத்த சிபாரிசு" தான் உன் உயர்வுக்கு காரணம் என்றார். நானே எதிர்பாராமல் ஒரு சிறுநட்பால் விளைந்த பலன் அது.

உயிர்கொடுத்த நட்புகளையும், முதுகில் குத்தும் நட்புகளையும் வாழ்வில் ஏராளமாக சந்தித்து வருகிறேன். ஆயினும் எந்த நட்பையுமே வரையறை செய்து என்னால் இன்றுவரை தேர்ந்தெடுக்க இயலவில்லை. Junk mails வருவதைப் போல ஏராளமான நண்பர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். சில நாட்களில் Not Spam என்ற கட்டளை கொடுத்து அவர்களுடன் நெருங்கிய நண்பன் ஆனதும் உண்டு. நெருங்கிய நட்பு என்று நினைத்தவர்களை Report Spam கொடுத்து விலக்கியதும் உண்டு.

ஆயினும் நான் புரிந்துகொண்ட ஒரே உண்மை. நம் மகிழ்ச்சியை கொண்டாட நம் நட்பு வட்டம் முழுவதுமே நம் அருகிலிருக்கும். துயரத்தைப் பகிர ஓரிரு நட்புகளே முன்வருவார்கள். உண்மையான நட்பு எது என்பதை அப்போது மட்டுமே உணரமுடியும். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். நண்பர்களிடம் அதி எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் நெருங்கிய நண்பனுக்குள்ளேயே கூட மோசமான எதிரி ஒளிந்துகொண்டிருக்கலாம். சுயநலவாதிகளுக்கு நட்பு முக்கியமல்ல. நட்பின் பொருள் அவர்களுக்கு தெரியாது.

வாழ்க உண்மையான நண்பர்கள்!!!

Tuesday, June 29, 2010

உலகில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்கள் : 2050 ஆண்டு

உலகில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்கள் : 2050 ஆண்டு!


உலகின் மக்கள் தொகையைப் பற்றி பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்னும் நாற்பது ஆண்டுகளில், இப்போது உலகில் நான்கில் ஒரு பங்காக இருக்கும் முஸ்லீம்கள் மூன்றில் ஒருவர் ஆவர் என சொல்கிறது:
http://indianmuslims.in/one-third-of -world-population-in-2050-will-be-muslim/

ஒரு நாட்டின் மக்கள் தொகை அதே அளவில் தொடர, பிறப்பு விகிதம் இரண்டு அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். அமெரிக்காவின் விகிதம் 2.1; வெளி நாட்டினர் குடிபெயர்தலினால் இந்த விகிதம்; ஐரோப்பியாவில், இருபது நாடுகளில் இது சுழி (பூஜ்யம்) அல்லது அதற்குக் கீழ் ("நெகடிவ்") ஆகும். ஜப்பானிலும் அங்ஙனமே உள்ளது. ரசியாவில் 28% மக்கள் தொகை குறையும் (46.8 million to 33.4 million).
ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் மட்டுமே மக்கள் தொகை பெருகும்.

இப்போது முஸ்லீம்கள் உலகில் 23% உள்ளனர்; ( 1.57 billion out of 6.80 billion); அவர்களில் அறுபது சதவீதம் ஆசியா(இந்தோனேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்) மற்றும் இருபது சதவீதம் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிகா) அவர்கள் 2050-ல் உலகில் மூன்றில் ஒருவர் (33%) ஆவர். ஐரோப்பியாவில் முஸ்லீம்கள் தற்போது ஐந்து சதவீதம் உள்ளனர்; அவர்கள் இருபது சதவீதமாவர்.

(ஐயோவா, அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவர்: திரு அனீஸ் அன்சாரி எழுதியது. )

http://vignaani.blogspot.com/2010/05/2050.html

சிக்கன் - 65

By:புதைனாசிக்கன் - 65
சிக்கன் - 65 எவ்வாறு தயாரிப்பது


சிக்கன் - 65

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 250 கிராம்

இஞ்சி - 25 கிராம்

பூண்டு -4 பல்

மிளகுத்தூள் -1 1/2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் -1/2 தேக்கரண்டி

நல்லெண்ணெய்- தேவையான அளவு.

மிளகாய்த்தூள் -1 1/2 தேக்கரண்டி

மசாலா பொடி -2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

(மசாலா பொடி தயாரிக்க: மிளகு -4 தேக்கரண்டி, தனியா -4 தேக்கரண்டி, சீரகம் -3 தேக்கரண்டி, பட்டை 10 கிராம் , ஏலக்காய்-2 எண்ணம், கிராம்பு -4 எண்ணம் வறுத்து அல்லது காய வைத்துப் பொடி செய்து கொண்டு தேவையான பொழுது உபயோகிக்கலாம்).

செய்முறை:

1. சிக்கனை சிறு, சிறு துண்டுகளாக்கி வெட்டிக் கொள்ளவும்.
2. இஞ்சி பூண்டு சேர்த்து விழுது போல் அரைக்கவும்.
3. மிளகுத்தூள், மிளகாய்த்தூள்,மசாலா பொடி,உப்பு என அனைத்தையும் இஞ்சிப் பூண்டு விழுதுடன் கலந்து கொள்ளவும்
4. இந்தக் கலவையை சிக்கனில் நன்றாகப் பிரட்டி பிசிறி இரண்டு மணி நேரம் வரை அப்படியே ஊற வைக்கவும்.
5. வாணலியில் எண்ணை ஊற்றி ஊறிய சிக்கன் துண்டுகளைப் போட்டு பொறித்தெடுக்கவும்.


தோழி
புதைனா

http://labbaikudikadu.com/pages/food_recipes_detail.aspx?id=42F8A7F7-B0B1-4238-8194-663F6B6ABA06

Monday, June 28, 2010

143 missed calls ("143 மிஸ்டு கால்ஸ் ")




miscal1



நானும் நீயும் ஒரே ரிங்டோன்
வைத்து இருப்பது அறியாமல்
யாருடைய மொபைலிலோ அழைப்பு
வந்தபோது நான் இருவருமே அவரவர்
மொபைலை எடுத்துப் பார்த்துவிட்டு
நீ என்னையும்
நான் உன்னையும்
பார்த்து வழிந்தோமே ?
அந்த முதல் சந்திப்பு உனக்கு
ஞாபகம் இருக்கிறதா ?



miscal2


தோழிக்கு சொல்வதுபோல்
உன் மொபைல் எண்ணை
உரக்கச்சொல்லியது எனக்காகத்
தானே என நான் பிறிதொருநாள்
கேட்டபோது நீ அவசரமாக முறைத்து
மறுத்துவிட்டு
அப்படி போவதற்குள்
ஆமாம் என் மெசேஜ் அனுப்பினாயே
ஞாபகம் இருக்கிறதா?


miscal3


முதன் முதலில் நான்
உன்னை மொபைலில் அழைத்தபோது
யாரென்றே தெரியாதது போல
ஆயிரம் கேள்வி கேட்டு
வெறுப்பேற்றினாயே
ஞாபகம் இருக்கிறதா ?


miscal4


அண்ணன் பக்கத்தில்
இருந்ததால் தான் அப்படி
பேசவேண்டி இருந்தது மன்னிச்சுகுங்க
என நீ அனுப்பிக்கொண்டே
இருந்த மெசேஜ்
என் இன்பாக்ஸையே
நிரப்பிவிட்டது உனக்கு
தெரியுமா ?


miscal5


ஏண்டா வாய் அசையுது
ஆனா ஒரு சத்தமும் கேட்கமாட்டீங்குதேடா
குசுகுசுன்னு அப்படி
என்னதான் ரகசியம் பேசுறியோ ?
என கேட்கும் அம்மாவிடம்
சொல்லி விடட்டுமா
அந்த ரகசியத்தை என நான்
உன்னிடம் கேட்டபோது
தைரியம் இருந்தா பண்ணிட்டு சொல்லுடா
என குறும்பாக நீ சொன்னது
ஞாபகம் இருக்கிறதா ?


miscal6


அவசரத்தில் நீ மொபைலை வைத்து
இருந்த இடத்தைப் பார்த்துவிட்டு
ஒரேயொருநாள் நான் உன்
மொபைலாக இருக்கிறேனே
என நான் கேட்டபோது
நீ கொட்டிய வெட்கத்தை
என் மனதினில் இன்னமும்
சேமித்து வைத்திருக்கிறேன்
தெரியுமா ?


miscal7


ஏன் இன்னும் இந்த பழைய
மொபைலையே வைத்துக்கொண்டு
மாரடிக்கிறே என கேலிபேசும்
நண்பர்களிடம் இதுதான்
நீ முதன்முதலில் கொடுத்த
முத்தம் சுமந்த மொபைல்
என கூறமுடியுமா ?


miscal8


இப்போவெல்லாம் நம்ம தம்பி
நைட்டு ரொம்ப நேரம் படிச்சுட்டு
லேட்டாதான் தூங்குறான் என
அப்பாவிடம் உற்சாகமாக
சொல்லிக்கொண்டிருக்கும்
அம்மாவுக்கு தெரியுமா
நான் படித்துக்கொண்டிருப்பது மாதிரி
நடித்துக்கொண்டிருப்பதே
நாம் அனுப்பிக்கொள்ளும்
மெசேஜ்களுக்குத்தான் என்று ?



miscal9


என் தோழியிடமிருந்து வந்திருந்த
ஒரு மெசேஜை நீ படித்துவிட்டு
என்னிடம் சண்டையிட்டு போன
அன்று முழுவதும் நான் உனக்கு
விளக்கம் சொல்லி சொல்லி
தேய்ந்தே போனது என்
மொபைலின் கீபேட் மட்டும் அல்ல
என் விரல்களும்தான்
என உனக்குத்தெரியுமா ?


miscal10


நண்பர்களுடன் இருக்கும்போது
நீ கேட்ட ‘உம்மா’ வை நான் தரவில்லை
என கோபமாக நீ மொபைலை அணைத்துவிட்டு
சென்றுவிட்டாய் என்பதற்காக அடுத்த நாள்
முழுவதும் மொபைலில்
நான் முத்தம் கொடுத்துக்கொண்டே
இருக்க தாங்க முடியாமல்
‘போதுண்டா பேசித்தொலைக்கிறேன்
நிறுத்து ப்ளீஸ்!’ என நீ கெஞ்சலாக
கேட்ட கொஞ்சலை
உனக்கு ஞாபகம் இருக்கிறதா ?



miscal11


இந்த மொபைலை பார்க்கிறபோ
எல்லாம் உனக்கு என்ன தோணுது
என நீ கேட்டதற்கு நான் சொன்ன
பதிலுக்குப்பிறகு முறைத்துக் கொண்டே
மறைத்துக்கொண்டாயே
ஞாபகம் இருக்கிறதா ?

Sunday, June 27, 2010

நம்ம ஊரு செய்தி - ஜூன் 2010

நம்ம ஊரு செய்தி - ஜூன் 2010                                                                

ஏகத்துவமும் போலி ஒற்றுமையும்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
இன்று முஸ்லிம்கள் உலகளவில் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்ற சமூகமாக, வல்லரசுகளின் கிள்ளுக்கீரையாக ஆகி சகலவிதமான அடக்குமுறைகளுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள் என்றால் அதன் காரணங்களுள் மிகமுக்கியமான ஒன்றாக முஸ்லிம்களிடையே காணப்படும் ஒற்றுமையின்மையைக் கூறலாம்.
‘ஒன்று பட்டுபட்டால் உண்டு வாழ்வு’ மற்றும் ஒற்றுமையுடன் இருந்த நான்கு மாடுகள் (அ) எருமைகள் சிங்கத்தை விரட்டிய கதைகளை எல்லாம் பள்ளிப்பருவத்திலே நீதிக்கதைகளில் படித்திருக்கிறோம்.
இஸ்லாமிய மார்க்கத்திலோ, திருமறையும் நபிமொழிகளும் நமக்கு முஸ்லிம்களுக்குள் பிரிவினைக் கூடாது என்றும், கட்டுப்கோப்பாக ஒரே கூட்டமைப்பாக வாழவேண்டும் என்று வலியுறுத்தும் போது நம்மில் பலர் சுயஇலாபத்திற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும், தலைமைப்பதவிக்காகவும் இன்னும் பிற காரணங்களுக்காகவும் தனித்தனி குழுக்களாக, இயக்கங்களாக, அகீதா அடிப்படையிலான பிரிவுகளாக பிரிந்து அதன் மூலம் பலகீனப்பட்டவர்களாக ஆகி எதிரிகளின் தாக்குதல்களுக்கு இலகுவாக ஆட்பட்டுவிடுகிறார்கள்.
“நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்” (49:10) என்று முஸ்லிம் சகோதரர்களுக்கிடையில் சமாதானத்தை வலியுறுத்துகின்ற மார்க்கத்திலே இறந்த சகோதரனின் மாமிசத்தை உண்பது போல ஒருவரை ஒருவர் புறம்பேசி பகைமைத்தீயை மென்மேலும் வளர்த்து வருவது வேதனையளிக்கக்கூடியதாகவே இருக்கிறது.
தங்களை ஏகத்துவவாதிகள் என்று கூறிக்கொண்டே சுயஇலாபங்களுக்காகப் பிரிந்துசென்று தனித்தனி குழுக்களாக செயல்படுபவர்கள் ‘நீங்கள் பிரிந்துவிடாதீர்கள்’ என்ற இறைவனின் கடுமையான எச்சரிக்கையை மீறிய குற்றத்திற்குள்ளாவார்கள்.
ஒருவர் ஏக இறைவனை மட்டுமே வணக்கத்திற்குரியவராக ஏற்றுக்கொண்டு அவனது திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களுக்கேற்ப தம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்வாரானால் அவர் நம்முடைய மார்க்கச் சகோதரராவார். எக்காரணத்தைக் கொண்டும் அவரின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் நாம் நடந்துக்கொள்ளக்கூடாது. அவர் தனிப்பட்ட முறையில் செய்கின்ற தவறுகள் அவருக்கும் அல்லாஹ்வுக்கும் உரியது! அவர் அதற்கு அல்லாஹ்விடம் பதில் கூற கடமைப்பட்டுள்ளார்.
ஆணால் ஒருவர் மார்க்கம் அனுமதிக்காக செயல்களை தாம் செய்வதோடல்லாமல்லாமல் அதை சரிகண்டு பிற மக்களையும் அதை செய்வதற்கு தூண்டினால், ஏக இறைவனை மட்டுமே வணக்கத்திற்கு தகுதியானவன் என்று ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு முஸ்லிம் அதை பார்த்துக் கொண்டு சம்மா இருக்க இயலாது. அவரால் இயலுமாயின் அவர் தம் கையால் தடுக்க வேண்டும். அதற்கு சக்தி பெற இயலவில்லையாயின் அவர் தம் நாவால் தடுக்க வேண்டும். அதுவும் இயலவில்லையாயின் குறைந்தபட்சம் அந்த தீமையை வெறுத்து ஒதுங்கிவிடவேண்டும். இதுவே ஈமானின் குறைந்த பட்சமாகும் என நாம் அறிந்திருக்கின்றோம்.
இந்த வகையில், மார்க்கத்திற்கு முரணான அனைத்து தீமைகளையும் அதிலும் குறிப்பாக பாவங்களிலேயே மிகப்பெரும் பாவமாகிய, அநீதிகளிலேயே இறைவனுக்கு இழைக்கப்டும் மாபெரும் அநீதியாகி ‘ஷிர்க்’ இணைவைப்பை ஒவ்வொரு முஸ்லிமும் முழுமூச்சாக எதிர்ப்பதற்கு முன்வரவேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் மேற்கூறப்பட்ட ஹதீஸின் பிரகாரம் கையால், நாவால் தடுக்க வேண்டும் அல்லது மனதால் அவற்றை வெறுத்து ஒதுங்கவேண்டும்.
இவ்வாறு நாம் செய்ய முற்படுகின்றபோது குடும்பங்களுக்கிடையே, உறவினர்களுக்கிடையே, நண்பர்களுக்கிடையே, ஊர் ஜமாஅத்தார்களுக்கிடையே பிரிவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலர் நாம் கூறுவதை ஏற்காமல், நாம் கூறுவதையும் சட்டைசெய்யாமல் அவர்தம் வேலையைச் செய்வர். சிலர் நாம் கூறுவதை வன்மையாக எதிர்ப்பார்கள். இன்னும் சிலரோ நம்மை வன்மையாக எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல் தாக்குவதற்கும் முற்படுவார்கள். ஆனால், நாம் இவற்றையெல்லாம் பொறுமையுடன் சகித்துக்கொண்டவர்களாக, எக்காலத்திலும் நிதானம் இழக்காமல் இறைவன் மேல் பொறுப்பு சாட்டியவர்களாக நமது பணியினைத் தொடர்ந்து செய்யவேண்டும். சிலர் இந்த ஏகத்துவப் பிரச்சாரத்தின் போது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று வன்மையாக செயல்படுவார்கள். இது இஸ்லாம் கூறும் வழிமுறையல்ல!
அல்லாஹ் கூறுகின்றான்:
‘(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.” (அந்நஹ்ல் 16: 125).
நாம் ஒருவிஷயத்தை மறந்துவிடக்கூடாது. நாமும் அவர்களைப் போல ஒருகாலத்தில் அந்த மாபெரும் பாவங்களிலே உழன்றுகொண்டிருந்தவர்கள் தான் என்பதை நினைவில் இறுத்திக்கொண்டு எந்த அளவிற்கு கண்ணியத்தைப் பேணவேண்டுமொ அந்த அளவிற்கு பேணி நிதானத்துடன் அவர்களை சத்தியத்தின் பால் அழைக்கவேண்டும். நேர்வழிகாட்டும் பொறுப்பு இறைவனிடமே உள்ளது என்பதையும் நமது பொறுப்பு எடுத்துச்சொல்வதே என்பதையும் ஒருகணமும் நாம் மறந்துவிடலாகாது.
இவ்வாறு ஏகத்துவத்தை பிறருக்கு எத்திவைக்கின்ற சமயத்திலே சிலர் தம்மை நடுநிலைவாதிகள் என்று என்று கூறிக்கொண்டு, தாம் சமாதானத்தை விரும்புவதாக கூறிக்கொண்டு ‘நீங்கள் உங்கள் கொள்கைகளைப் பின்பற்றுங்கள்; அவர்கள் அவர்கள் கொள்கைளைப் பின்பற்றட்டும். நாமெல்லாம் சமாதானமாய் வாழலாமே! நமக்கு இன்றைய சூழலில் பொது எதிரிகள் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள்! அவர்கள் நம்மை அழிப்பதற்கு கங்ஙகனம் கட்டிக்கொண்டு செயல்பட்டுவருகிறார்கள்! நாம் ஒன்றுபட்டாலே தவிர அவர்களை எதிர்கொள்வது கடினம் என்று கூறி, ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை இடுவார்கள்.
அல்லாஹ்வையும், மறுமையும் உறுதியுடன் நம்பும் ஒருவர் இத்தகைய நடுநிலைவாதிகளின் சொற்களுக்கு மயங்கி அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் வழிகாட்டுதல்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதை விட்டுவிடுவாராயின் அவரும் நஷ்டமடைந்தோரில் ஒருவராவார்.
அல்லாஹ் கூறுகின்றான்:
‘காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).” (அல் அஸ்ர் 103: 1-3).
இதுபோல் இன்னும் பல வசனங்களும் நபிமொழிகளும் அழைப்புப்பணியைச் செய்வதன் அவசியத்தை நமக்கு நன்கு உணர்த்துகின்றது. பார்க்கவும்: 9:71, 41:33, 3:110, 3L:104, 5:78-79
பொதுஎதிரிகளைச் சந்திக்கின்றபோதும் பொதுவான பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றபோதும் ஒன்றுபட்டு இயங்குவதில் எவ்வித தவறுமில்லை! மாறாக அது வரவேற்கக்கூடியதாகவே இருக்கின்றது. ஆனால், அதை காரணமாக வைத்து நமது ஏகத்துவப் பிரச்சாரத்தை நிறுத்துவது என்பது எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றே!
ஷிர்க் மற்றும் பித்அத் புரிபவர்களின் செயல்களை சுட்டிக்காட்டப்படும் போது எதிர்ப்புகள் வருவது இயல்பே! நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் அருளப்பட்டு ஏறத்தாழ முதல் பத்தாண்டுகள் இணைவைப்புக்கு எதிராகவே பிரச்சாரம் செய்தார்கள் என்பதையும் நாம் நினைவில் வைக்கவேண்டும். மக்கத்துக்காஃபிர்கள் தமது மக்களிடைய பிரிவினைகளை ஏற்படுத்துகிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் மீது குற்றம் சுமத்தவே செய்தார்கள். பிரிவினைகள் ஏற்படுமே என்று நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தை எள்முனையளவும் நிறுத்தவில்லை என்பதையும் நாம் நினைவில் கூறவேண்டும்.
நாங்கள் சமாதானப்புறாக்கள் என்று கூறிக்கொண்டு சிலர் குர்ஆன் வசனங்களையும் ஹதீதுகளில் சிலவற்றையும் கூட தமக்கு ஆதாரமாக கூறி, ஏகத்துவப் பிரச்சாரத்தை கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டும் என்று கூறமுற்படுவர்! (உதாரணம் ஹாரூன் (அலை) அவர்கள் பற்றிய வசனம்). மார்க்கத்தில் போதிய தெளிவில்லாத சிலர் அவர்கள் கூறுவதும் சரிதானே என்று இந்த போலி ஒற்றுமை வாதத்தில் மயங்கியவர்களாக இறைவன் நமக்கிட்ட கட்டளையை நிறைவேற்றுவதை விட்டும் தவிர்ந்துக் கொண்டால் நாம் தான் நஷ்டவாளியாக நேரிடும்.
நடுநிலைவாதிகள் என்றும் சமுதாய ஒற்றுமைக் காப்போம் என்றும் கூறிக்கொண்டு ஷிர்க் பித்அத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போடும் இவர்கள் இந்த ஒற்றுமையின் மூலம் எந்த வெற்றியை நாடப்போகின்றார்கள்? இறைவனுக்கு இணைவைப்பவர்களின் அனைத்து நல்லறங்களும் மறுமையில் பயனளிக்காது போய்விடும் நிலையில் இவர்கள் இம்மையில் வெற்றிபெற்று என்ன பிரயோசனம்? அழியா மறுமை வாழ்விற்கு பதிலாக அழியும் இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுக் கொண்டவர்களின் வாய்ஜாலங்களுக்கு மயங்கி ஏகத்துவப்பிரச்சாரத்தை நிறுத்தியவர்கள் இறைவனை பயந்துக்கொள்ளட்டும்.
இன்னும் சிலரோ நமது சமூகத்தவர்கள் ஏழைகளாகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களின் ஏழ்மையைப் போக்கி அவர்களுக்கு படிப்பறிவை ஊட்டினால் அவர்கள் தாமாகவே சீர்திருந்திவிடுவார்கள் என்றும் காரணம் கூறுவர். இதுவும் அர்த்தமற்ற வாதமாகும். நபி (ஸல்) அவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்தை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டவர்கள் அனைவரும் செல்வந்தர்களாகவா இருந்தார்கள்? மாற்றுத்துணிக்கு கூட வழியில்லாமல் தானே பல சஹாபாக்கள் வறுமையில் உழன்றனர். ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டதற்குப் பிறகே அவர்கள் சிறந்த கல்விமான்களாகத் திகழ்ந்தார்கள் என்பதை நாம் படிக்கவில்லையா?
‘உங்களை இரவும் பகலைப் போன்ற வெள்ளை வெளேர் என்கின்ற தெளிந்த நிலையில் விட்டுச் செல்கின்றேன். தெளிவான இம்மார்க்கத்திலிருந்து எனக்குப் பின்னர் அழிந்து நாசமாகுபவனைத் தவிர வேறு எவனும் வழி கெட மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (இப்னு மாஜா)
எனவே ஷிர்க் மற்றும் பித்அத்துக்களைத் தவிர்ந்த ஏகத்துவ கொள்கையை உடைய அகீதாவே மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த அகீதாவை கண்டுகொள்ளாமல் இதிலே வளைந்துக் கொடுத்துக் கொண்டு அல்லது சமரசம் செய்துக்கொண்டு, நாம் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கவேண்டும் எனவும், நமக்கெதிராக செயல்படுபவர்களை நாம் எதிர்கொள்ள வேண்டும் எனவும் கூறி அகீதா வேறுபாடுகளை மறந்து நாம் ஒன்றுபட வேண்டும் எனக்கூறப்படுவதெல்லாம் போலி ஒற்றுமை என்பதை நாம் உணரவேண்டும்.
ஏனென்றால், இறைவனுக்கு இணை கற்பிப்பவர்கள் ஒரு காலத்திலும் ஏக இறைவனை ஏற்றுக் கொண்டிருப்பவர்களுடன் ஒற்றுமையாக இருக்க இயலாது. ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் தமது கொள்கையில் சமரசம் செய்துகொண்டு இணைவைப்பவர்களிடம் எவ்வித ஏகத்துவப் பிரச்சாரத்தையும் செய்யாது இருந்தால் மட்டுமே அவர்கள் இவர்களோடு ஒன்றுபட வாய்ப்பு உள்ளது. இல்லையேல் இது ஒருகாலும் சாத்தியமாகாது.
“நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்” (5:82)
எனவே சகோதர, சகோதரிகளே! நிரந்தர மறுமையின் வெற்றிக்கு வழிவகுக்கின்ற ஏகத்துவப் பிரச்சாரத்தை, நிரந்தர நரகத்திற்கு வழிவகுக்கின்ற இணைவைப்பிலே உழன்றுக் கொண்டிருக்கின்ற நமது பெற்றோர், சகோதர, சகோதரிகள், உறவினர், ஊர் ஜமாத்அத்தார்களிடம் செய்து அவர்களை அம்மாபெரும் பாவத்திலிருந்து மீட்டெடுக்க முயற்சிப்போமாக! இவ்வாறு செய்யும் வேளையில் சமுதாய ஒற்றுமை என்ற போலி ஒற்றுமை பேசும் போலிகளையும் இனம்கண்டு அவர்களை ஒதுக்கிவிட்டு நமது முயற்சியில் தொடர்ந்து செயல்பட அல்லாஹ் அருள்புரிவானாகவும்.
Source : http://suvanathendral.com/portal/?p=1245

Saturday, June 26, 2010

ஒஸாமா பின்லேடனின் பேரப்பிள்ளை எனது வயிற்றில் வளர்கிறது

ஒஸாமா பின்லேடனின் பேரப்பிள்ளை எனது வயிற்றில் வளர்கிறது

அல்கொய்தா தலைவர் ஒஸாமா பின்லேடனின் பேரப்பிள்ளையை தான் வயிற்றில் சுமந்து கொண்டிருப்பதாக பிரித்தானிய பெண் ஒருவர் உரிமை கோரியுள்ளார்.

ஒஸாமா பின்லேடனின் நான்காவது பிள்ளையான ஓமர் பின்லேடனது (29 வயது) விந்தணுக்களையும் அவரது பிரித்தானிய மனைவியான ஜேன் பீலிக்ஸ் பிறவுணியினது (54 வயது) கரு முட்டைகளையும் பயன்படுத்தியே மேற்படி வாடகைத் தாயான லூஸி போல் லார்ட் (29 வயது) கருத்தரித்துள்ளார்.

கட்டாரில் தற்போது மனைவியுடன் வாழும் ஓமர், இணையத்தளம் மூலமே தமது குழந்தையைச் சுமப்பதற்கான வாடகைத் தாயாக லூஸி போல்லார்ட்டை நியமனம் செய்தார்.

இந்நிலையில் பிறிஸ்டலில் வசிக் கும் லூஸி போல்லார்ட்டுக்கு வாடகைத் தாயாக செயற்படுவதற்கு 30,000 ஸ்ரேலிங் பவுண் வழங்கப்பட்டுள்ளது.

பின்லேடனின் பேரப்பிள்ளையைச் சுமப்பது தொடர்பில் லூஸியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

படைவீரரான டாமியன் என்பவரைத் திருமணம் செய்து பிரிந்து வாழும் லூஸி, ஏற்கனவே லண்டன் ஜோடி ஒன்றுக்காக இரு தடவைகள் குழந்தையை வயிற்றில் சுமந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாரில் உலோகப் பொருள் வியாபாரியாக திகழும் ஓமருக்கு முன்னைய திருமணத்தின் மூலம் 6 வயது மகன் ஒருவன் உள்ளான்.

பின்லேடனின் முதல் மனைவியான நஜ்வாவின் மகனான ஓமர், 2007 ஆம் ஆண்டு எகிப்திய பிரமிட்டுக்கான சுற்றுலாவின் போது ஜேனைச் சந்தித்து காதல் கொண்டார். அவர்கள் இருவரும் சந்தித்து ஒரு மாதத்தில் திருமண பந்தத்தில் இணைந்தனர். இது ஜேனுக்கு ஆறாவது திருமணமாகும். அவருக்கு முன்னைய திருமணங்கள் மூலம் 3 பிள்ளைகள் உள்ளனர்.

தற்போது இஸ்லாமிய மதத்துக்கு மாறியுள்ள ஜேன், தனது பெயரை ஸானியா மொஹமட் அல் சபாஹ் பின்லேடன் என மாற்றி வைத்துள்ளார்.

தனது தந்தையான பின்லேடனை 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி தாக்குதலுக்கு பின் ஒரு தடவையும் சந்திக்கவில்லை என ஓமர் தெரிவித்தார்.


 http://mrishan.blogspot.com/2010/06/blog-post_25.html

செம்மொழி மாநாட்டின் தொடக்க நிகழ்வின் போது கலாம் எங்கு இருந்தார்?


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு துவக்க விழாவுக்கு இந்தியக் குடியரசு முன்னாள் தலைவரான அப்துல் கலாமை அழைக்காதது நடுநிலையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இருப்பினும் தமிழினத்தின் மிக மூத்த தலைவர் எடுக்கும் விழா என்பதால் தங்கள் அதிருப்தியை மூட்டை கட்டி வைத்து விட்டு செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சிகளை கண்டு களித்து வருகின்றனர்.

தங்கள் அதிருப்தியை தற்போது வெளிப்படுத்துவது நாகரீகமில்லை. மாநாடு முடிந்தபிறகு தங்கள்  குமுறலை வெளிப்படுத்தலாம் என  சிலர் காத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆனாலும் செம்மொழி மாநாட்டு துவக்க நிகழ்ச்சிகள்  கோலாகலமாக  நடைபெற்றன.

அப்போது கலாம் எங்கிருந்தார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. ஆமாம். கலாம் எங்கு தான் இருந்தார்?

அப்போது கலாம் மும்பையில் இருந்தார். புகழ் பெற்ற கார்டூனிஸ்ட்டான ஆர் கே  லட்சுமணன்  உடல் நலக்குறைவாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைச் சந்தித்து உடல் நலம் விசாரிப்பதற்காக கலாம் மும்பை சென்றிருந்தார்.

இதனை பார்க்கும்போது எனக்கு வரலாற்று சிறப்பு மிக்க மற்றொரு காட்சி என் நினைவுக்கு வருகிறது.

இந்தியா விடுதலை பெற்று நாடே கொண்டாட்டத்தில் திளைத்துகொண்டிருக்கிறது.  அப்போது விடுதலை போராட்ட களத்தின் தலைமை தளபதி யான காந்தியார் எங்கிருந்தார் தெரியுமா  மேற்கு வங்காளத்தில்  சவரி சவரா என்ற இடத்தில் நிகழ்ந்த வகுப்பு கலவரத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார் . ஒவ்வொரு சான்றோரின் வாழ்க்கையிலும் இத்தகைகைய சம்பவங்களே விரவிக்கிடக்கும்போலும்.

சிரிப்பும் சிந்தனையும்.

சிரிப்பும் சிந்தனையும்.:


Ø ஒருமுறை ஆங்கிலேயப் பத்திரிக்கையாளர் ஒருவர் காந்தியடிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருக்கும்போது …...

“உங்கள் மக்கள் உங்களை எப்படித் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர்?“
வேறு தலைவர்களே அவர்களுக்குக் கிடைக்கவில்லையா?

என்று கேட்டார்.

அதற்குக் காந்தியடிகள் சிரித்துக்கொண்டே,

“உங்களைச் சமாளிக்க நானே போதும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்“
என்று சொன்னார்.

----------- ------------- ---------------- -------------- -------------- ---------
Ø கவிஞர் செரிடனை இருவர் காணவந்தனர். அவர்கள் கவிஞரிடம், “எங்களுக்குள் சிறு விவாதம், அதற்று நீங்கள் தான் முடிவு சொல்லவேண்டும் என்றனர்.“

என்ன என்ற கேட்டார் கவிஞர்.

“நீங்கள் ஒரு முட்டாள் என்கிறேன் நான்,
நீங்கள் ஒரு மூடன் என்கிறார் என் நண்பர்“

நாங்கள் சொல்வதில் யார் சொல்வது மிகவும் சரியானது என்ற முடிவைத் தாங்கள் தான் சொல்லவேண்டும்.

கவிஞர் நண்பர்கள் இருவரையும் தம் கையால் பிடித்துக்கொண்டே..


“நான் இப்போது இருவருக்கும் இடையில் இருக்கிறேன்” என்று சொன்னார்.

----------------- ----------------------- ----------------- ---------------- -------


Ø பேராசிரியர் கல்கி ஒரு முறை “தமிழில் சிறுகதை“ என்னும் தலைப்பில் வானொலியில் பேசினார். அதில் அவர் “ ஒரு கதைபற்றிக் கூறும் போது, ஸ்ரீராமகிருஷ்ணர் மாதிரி கேட்பவர்களுக்குப் புரியுமாறு சொல்லவேண்டும் என்றார். சிறுகதை என்பது முதல் வரியைக் கூறும் போதே கேட்பவர் அடுத்தவரி என்ன? என்று கேட்கத் தூண்டுவதாக இருக்கவேண்டும்“ என்றார். உதாரணத்தையும் கூறினார்.

ஒருநாள் காஞ்சிபுரம் உபய வேதாந்த சுவாமிகள் தம் வேலையாளைக் கூப்பிட்டு , “குப்பா நீ ஸ்ரீபெரும்புதூருக்குப் போய், திருவெங்கடாச்சாரியார் ஐயங்கார் சுவாமிகள் திருக்கோவில் ஆராதனைக்கு திருத்துழாய் எடுக்கையில், திருக்கோயிலின் திருக்குளத்தில் திருப்பாசி வழுக்கி திருவடி தவறி விழுந்துவிட்டார் என்று கூறிவா“ என்றார்.

பின்னர், “குப்பா, சொல்வாயா. எங்கே ஒரு முறை கூறிக்காட்டு பார்க்கலாம் என்றார்.

அதற்குக் குப்பன், “ சாமி, கும்பகோணத்து ஆசாமி குட்டையில் விழுந்ததை, ஸ்ரீபெரும்புதூர் ஆசாமிக்குச் சொல்லவேண்டும் அவ்வளவுதானே? என்றான்.

ஒரு செய்தியைப் புரியும்படி சொல்வதில் பண்டிதனை விடப் பாமரன் தேர்ச்சியுடையவனாகவுள்ளான்.


-------------- --------------------- ------------------- ------------------------


Ø நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் ஒருநாள் படப்பிடிப்புக்காகக் காத்திருக்கும் போது ஈ ஒன்று அவரைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டே இருந்தது. அவரும் எவ்வளவு விரட்டியும ஈ அவரை விடுவதாக இல்லை.

ஈ அடிக்க ஒரு மட்டையை எடுத்துக்கொண்டு, அதை அடிக்கத் தயாரானார் சாப்ளின்.

ஈ அவரைச் சுற்றிக்கொண்டு அவரெதிரே அமர்ந்தது. அந்த ஈயை அடிக்காமல் சிறிது நேரம் உற்றுப்பார்த்த சாப்ளின் அதை அடிக்காமல் விரட்டிவிட்டார்.

அந்த ஈயை ஏன் அடிக்கவில்லை என்று கேட்ட நண்பரிடம் சாப்ளின்,

என்னைச் சுற்றி வந்த ஈ இது அல்ல, இது வேறு ஈ என்று சொன்னார்.

--------------- ------------------- ---------------- ------------ ------------------

Ø தோல்வியும் வெற்றியும் எப்படி ஏற்படுகிறது என்பதற்கு பெர்னாட்ஷா அளித்த விளக்கம்.

“ நான் இளைஞனாக இருந்தபோது பத்து செயல் செய்தால் ஒன்பது செயல்களில் தோற்றுப் போனேன். என்னுடைய தோல்வியை நான் விரும்பவில்லை. வெற்றிபெற என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்தேன். எனக்கொரு உண்மை பளிச்சென்று விளங்கியது. தொன்னூறு முறை முயன்றால் ஒன்பது முறை வெற்றிபெறலாம் என்பதை உணர்ந்தேன். முயற்சிகளை அதிகப்படுத்திக்கொண்டேன்.
------------------ ------------------ -------------------

Ø இத்தாலிய தினத்தாளின் ஆசிரியர் கில்மெஸ்ஸக் கெர்ரோ என்பருக்கு அவரது நண்பர் ஒருவரிடமிருந்து கட்டுரை வந்தது. கட்டுரை அவ்வளவு நன்றாக இல்லை.

அந்த நண்பா் “கட்டுரையில் காற்புள்ளி, அரைப்புள்ளி முதலிய குறிகளை மட்டும் தகுநத் இடங்களில் போட்டுக் கட்டுரையைப் பிரசுரிக்கவும்“

என்றுஎழுதியிருந்தார்.

தங்கள் விருப்பப்படியே செய்துள்ளேன். இனிமேல், காற்புள்ளி, அரைப்புள்ளி முதலிய குறிகளை மட்டும் தாங்கள் அனுப்பவும். கட்டுரையை நாங்கள் எழுதிக்கொள்ளுகிறோம் என்று பதிலனுப்பினார் ஆசிரியர்.

----- ----------- ----------- ----------- ------------ -------------- ---------
முனைவர்.இரா.குணசீலன், தமிழ் விரிவுரையாளர்
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்ககோடு

.நன்றிhttp://gunathamizh.blogspot.com/2010/06/blog-post_06.htmlசிரிப்பும் சிந்தனையும்.

Thursday, June 24, 2010

ஆட்டு இறைச்சி

உலகில் பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணும் மற்றொரு இறைச்சி இது. ஆட்டு இறைச்சியில் கொழுப்பு (Fat) சற்று அதிகம். ஆட்டின் அனைத்து பாகங்களுமே உணவாக உட்கொள்ளப்படுகின்றது. மருத்துவ ரீதியாக ஒவ்வொரு பாகமும் உடலுக்கு ஒவ்வொரு பலனைக் கொடுக்கின்றது.
ஆட்டிறைச்சி வாங்கும் போது மிகவும் பார்த்து வாங்குதல் அவசியம். இளம் ஆட்டின் கறி சுவையாக இருக்கும். மிருதுவாகவும் இருக்கும். கறியின் கொழுப்பு வெண்மை நிறமாக இருத்தல் வேண்டும். மஞ்சள் நிறமாக இருந்தால் சற்று முற்றின ஆடு என்று கொள்ளலாம். கறியின் நிறம் சற்று மங்கிய சிவப்பாய் இருக்க வேண்டும். முற்றின கறியாக இருந்தால், சிறிது வினிகர், எலுமிச்சை சாறு சேர்த்து வேக வைப்பதின் மூலம் சற்று மிருதுவாக்கலாம்.
                                                                

ஆட்டு இறைச்சி 100 கிராம் உண்பதில் அடங்கியுள்ள சத்துக்கள் 
சக்தி (Energy) 118 கலோரிகள்
ஈரப்பதம்/நீர் (Moisture)  74.2 கிராம் 
புரதம் (Protein)  21.4 கிராம்
கொழுப்பு (Fat)  3.6 கிராம் 
தாதுக்கள் (Minerals)  1.1 கிராம்
கால்சியம் (Calcium)  12 மி.கி 
பாஸ்பரஸ் (Phosporous)  193 மி.கி
போலிக் அமிலம் (Folic acid) 4.5 மை.கி
Source: National Institute of Nutrition - Hyderabad  
நன்றி :  http://www.tamilsaral.com/news%3Fid%3D2147.doஆட்டு இறைச்சி 

நாய்கள் குரைப்பதேன்?

உயிரியல் அடிப்படையில் நாய்களைத் தவிர பிற விலங்குகள்கூட குரைக்கின்றன என்கிறார் கேத்ரைன் லார்ட். இவர் மசாசூசட்ஸ் பல்கலைக்கழக பரிணாம உயிரியல் வல்லுநர். இதற்கான காரணங்களை ஆராய்வதற்கு நாம் 10,000 ஆண்டுகள் பின்னோக்கிப் போகவேண்டியுள்ளது. அண்மையில் இவர் Behavioural Processes என்னும் இதழுக்கு அளித்துள்ள கட்டுரையில் ‘மற்ற விலங்குகளைக் காட்டிலும் நாய் அதிகமாகக் குரைக்கிறது’ என்பது மட்டும்தான் வேறுபாடு என்கிறார். மேலும், நாய்குரைத்தலில் அடங்கிய ஒலிநுட்பக்கூறுகளையும் இந்தக்கட்டுரை விளக்கியுள்ளது.
‘குரைத்தல் என்பது நாய்க்கும் மனிதர்களுக்கும் இடையேயான ஒரு தகவல் பரிமாற்றம் அல்ல: நாயின் மனப்போராட்டத்தின் வெளிப்பாடுதான் குரைத்தல் என்பது’ என்கிறார் இந்த ஆய்வாளர். அதாவது குரைத்தல் என்பது “எனக்கு சிறுநீர் கழிக்கவேண்டும்” “நான் விளையாடப் போகவேண்டும்” என்று கூறுவதைப்போல் அல்ல என்பதுதான் இந்த ஆய்வின் சாரம். குரைத்தல் ஒரு கும்பலின் குரல் வெளிப்பாடு. அதை ஒரு கும்பல் நடத்தையாகக் கருதலாம். ஒரு கும்பல் அதனுடைய நடத்தையை குரல் மூலம் வெளிப்படுத்துகிறது என்பதுடன் குரைப்பதை ஒரு கூட்டுறவின் வெளிப்பாடாகவும் கொள்ளலாம். ஒரு அந்நியன் அத்துமீறி எதிர்ப்படும்போது ‘அங்கேயே நின்று தன்னுடைய குட்டிகளைக் காப்பாற்றுவதா’ அல்லது ‘தப்பித்து ஓடுவதா’ என்ற இரண்டு மனப்போராட்டங்களின் வெளிப்பாடு அது. தன்னுடைய இனத்தவர்கள் தனக்குத்துணையாக சேர்ந்துகொள்ளும்போது குரைத்தல் கும்பல் நடத்தையாகிப்போகிறது. இந்த ஓசை அத்துமீறி வருபவரை திரும்பி ஓட வைக்கிறது.
நாய்கள் மனிதர்களை அண்டிவாழும் பழக்கம் 8,000 முதல் 10,000 ஆண்டுகள் பழமையானது. மனிதர்கள் ஒதுக்கித்தள்ளும் உணவுப்பொருட்களுக்காகவே இவை ஆரம்பகாலத்தில் மனிதனை அண்டி வாழத்தொடங்கின. அக்காலத்தில் எதிரி எதிர்ப்படும் ஒவ்வொரு முறையும் ஒரு மைல்தூரம் தூரம் ஓடி ஒளிந்துகொள்ளும் இயல்புடன் நாய்கள் இருந்திருக்கவேண்டும். காலப்போக்கில் எதிராளியை எதிர்த்து நிற்கும் நாய்களுக்கு வெகுமதியாக மனிதர்களிடமிருந்து உணவு கிடைக்கத் தொடங்கியது. அந்த உணவை மற்ற நாய்களுடன் முந்திக்கொண்டு பெற்றுக்கொள்ளும் முயற்சியில் மனிதர்களை நாய்கள் அண்டி வாழத்தொடங்கின. அச்சத்தினால் ஒதுங்கிய நாய்கள் காலப்போக்கில் அழிந்தொழிந்தன. அச்சம் தவிர்த்த நாய்கள் மனிதர்களை அண்டி, உண்டு வாழ்கின்றன. வேலிக்கு மறுபுறம் நிற்கும் ஒரு மனிதனைப் பார்த்தவுடன், நாயின் மனதில் ஒரு வியப்பும், அச்சமும் ஏற்படுகிறது. மனிதனை நெருங்கவோ, மனிதனைவிட்டு விலகி ஓடவோ முடியாத மனவெழுச்சி தோன்றும்போது அது குரைத்தலாக வெளிப்படுகிறது.
இவரது கட்டுரையில் குரைத்தலை வகைப்படுத்தும் பல்வேறு அளவீட்டுக்கூறுகளை ஆராய்ந்துள்ளார். ஸ்தாயி (tonality) எனப்படும் குரல் தரவரிசை, இரைச்சல்(noise), சுருதி (pitch), ஒலியின் கேட்கும் அளவு (volume) ,வீச்சு (amplitude) எதிர்பாராஒலி (abrupt onset), ஒலித்துடிப்பின் கால அளவு (pulse duration) ஆகிய ஒலியின் அளவீட்டுக்கூறுகளை இவரது கட்டுரை ஆராய்ந்துள்ளது.
குரைத்தல் என்பது செய்திகளின் பரிமாற்றச்செயல் அல்ல. குறைந்த கால அளவிற்கு உரத்த குரலில் எழுப்பப்படும் ஒலி என்பதுதான் குரைத்தலின் இலக்கணமாகும். இது இரைச்சல், தொனி என்னும் இரண்டு கூறுகளை உள்ளடக்கியது. விலங்குகள் எழுப்பும் பிற ஓசைகளில் இருந்து குரைத்தல் தனித்துவம் வாய்ந்தது. இந்த இலக்கணத்தை விரிவுபடுத்துபோது நாய் இனம் மட்டுமன்றி பறவைகள், பாலூட்டிகள் இனத்தைச் சேர்ந்த குரங்குகள், எலிகள், மான்கள் இவையும் குரைப்பதாக கொள்ளலாம். சிக்கலான மனவெழுச்சிகளில் பிற விலங்குகளும் குரைக்கின்றன என்பதுதான் ஆய்வர்களின் முடிவு. ஆனால் செல்லப்பிராணிகளாக நாய்களை வளர்ப்பவர்கள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அவர்களுடைய செல்லப்பிராணிகள் உணவுகேட்டு குரைப்பதாக நம்மிடம் சொல்லுவார்கள். நாய்கள் அறிவுத்திறன் மிக்கவை. தூண்டல்-துலங்கல், காரண-காரிய விளைவுகளை அவைகள் நன்றாக கற்றுக்கொள்கின்றன. தன்னை வளர்ப்பவர் சரியான நேரத்திற்கு உணவு கொடுப்பார் என்று தெரிந்துகொண்டால் அவை குரைப்பதில்லை.
தகவல்: மு.குருமூர்த்தி
இன்னும் படிக்க:http://www.sciencedaily.com/releases/2009/07/090714210137.htm
'நன்றி: www.keetru.com'

காதல் கிறுக்கு!





என்னவென்பேன் பெண்ணவளின்
               வண்ணமதை
கொண்டுவிட்டேன் அவளிடம்
               காதல்போதை
நித்தமவளை நினைக்கின்றேன்
            நெஞ்சமுறுகி
சத்தமின்றி தவிக்கின்றேன்
            சிந்தை சிதறி

முத்துநகை வந்துவிட்டால்
                             போதுமென்பேன்
பித்தனாகி நானுமவள்
               காலடியில்
சொத்துசுகம் அத்தனையும்
                         வேண்டாமென்பேன்
முக்தியாகி நானுமவள்
              முந்தானையில்

பாரிஜாத முல்லையவள்
                                மணமணப்பில்
பாசாங்கு சோலையவள்
                                சிரி சிரிப்பில்
பைந்தமிழின் வார்த்தையிலே
                 வாயடைத்தேன்
பைங்கிளின் பேச்சினிலே
                          மூச்சடைத்தேன்.

அதிகாலையென்பது
                   எனக்கில்லை
அவளைக் காணுமுன்னே
                  அனுதினமும்
உறக்கமில்லை
         அவளைக் கண்டபின்னே

என் நெஞ்சமதை
           எடுத்துக்கொண்டால்
மொத்ததிலே
              அதிலவளின்
நினைவைமட்டும் வைத்து
              தைத்துவிட்டாள்
என் இதயத்திலே

 
பேதையவள் கண்களிலே
                போதை கொண்டேன்
பேரழகி அவளேயென்று
                 வியந்து நின்றேன்
பெண்ணவளின் கைப்பிடித்து

                   காலம்தோறும்-இப்
பிரபஞ்சம் முழுதும்

                 நானும் சுற்றவேண்டும்

 
இப்பிறவி முடிந்தபின்னும்
                    மீண்டும் தோன்றும்
அப்பிறப்புமும் வேண்டும்
                       அவள் எனதருகில்
இணைத்துவைத்து இறுக்கிவைத்த
                  இருமனமும்
இணைபிரிந்திடாது
                இருந்திடவேண்டும் சொர்கத்திலும்...


டிஸ்கி//  ராகத்தோடு படித்துப்பாருங்கள். 2. 3. நாட்களாய் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால். ஆங்காங்கே இதுபோல் முணுமுணுப்பதுபோல் கேட்கிறது.

 அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

http://niroodai.blogspot.com/2010/05/blog-post_30.htmlகாதல் கிறுக்கு!

 

Wednesday, June 23, 2010

மற்றவர்களின் சந்தோஷத்தில் தலையிடும் அதிகப்பிரசங்கிகளின் தீவிர சிந்தனைக்கு - III

பெரியார்

periyar_283உண்மைக் காதல் என்பது, ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகியபின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக் கூட சரியாய் தெரிந்து கொள்ளாமல் தூர இருந்து பார்ப்பதாலேயே ஏற்படும் காதல் நல்லதா? அல்லது சரீரத்தின் நிலை முதலியவைகள் தெரிந்து திருப்தி அடைந்த காதல் நல்லதா என்பவைகளை கவனிக்கும் போது - சரீர மாறுபாடாலும், பொருத்தமின்மையாலும் ஏன் எப்படிப்பட்ட உண்மைக் காதலும் மாற முடியாது என்பதற்கு என்ன விடை பகர முடியும்?
அல்லது உண்மையாகவே ஒருத்தன் ஒருத்தியுடன் காதல் கொண்டு விட்டால், ஒருத்தி தப்பாய் அதாவது வேறு ஒருவனிடம் காதல் கொண்டுவிட்டதாய் கருத நேர்ந்தால் - அது பொய்யாகவோ, மெய்யாகவோ இருந்தாலும் தன் மனதுக்கு சந்தேகப்படும்படி விட்டால், அப்போது கூட காதல் மாறாமல் இருந்தால்தான் உண்மைக் காதலா? அல்லது தன் மனம் சந்தேகப்பட்டால், அதிருப்தி அடைந்தால் நீங்கிவிடக் கூடிய காதல், குற்றமான காதலா என்பதற்கு என்ன மறுமொழி பகர முடியும்?
ஒரு ஜதை காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் துறவிகளாய் விட்டார்களானால், இந்த சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதும் வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமானால் அப்படிப்பட்ட காதல் பயன்படுமா? விரோதமில்லையானால், ஒருவர் ஞானியாகி துறவியாகிவிட்டதால் மற்றவரை விட்டுப் பிரிந்து கொள்ளுவது காதலுக்கு விரோதமாகுமா என்பதையும் கவனித்தால், காதலின் யோக்கியதை விளங்காமல் போகாது. பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படுவதும், ஒன்றினிடம் பலதினிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.
அதுபோலவே மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும், வெறுப்புக் கொள்வதும், பிரிவதும் இயற்கையேயாகும், பலவீனமாய் இருக்கும் போது ஏமாந்து விடுவதும், உறுதி ஏற்பட்ட பின்பு தவறுதலைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாதபோது கட்டுப்பட்டு விடுவதும், அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ளுவதும் இயற்கையேயல்லவா?
உதாரணமாக, ஒரு வாலிபன் ஏமாந்து ஒரு தாசியிடம் காதல் கொண்டு சொத்துகளையெல்லாம் கொடுத்து விடுவதைப் பார்க்கிறோம். அந்த வாலிபனுக்கு அந்த தாசியிடம் ஏற்பட்டது காதல் என்பதா? அல்லது காமம் என்பதா? அதே தாசி - சில சமயத்தில் தனக்கு தாசி தொழில் பிடிக்காமல் இந்த வாலிபனிடமே நிரந்தரமாயிருந்து காலத்தைக் கழிக்கலாம் என்று கருதி விடுவதைப் பார்க்கிறோம். ஆகவே, இந்த தாசி கொண்டது காதலா அல்லது வாழ்க்கைக்கு ஒரு சவுகரியமான வழியாய் இதை வாலிபன் அறியாமல் நேசத்தை வளர்த்துக் கொண்டே வந்தால், இது ஒத்தக் காதலாகி விடுமா? இப்படியெல்லாம் பார்த்தால் காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பதைவிட சிறிதுகூட சிறந்தது அல்லவென்பது விளங்கிவிடும்.
அதற்கு ஏதேதோ கற்பனைகளை கற்பித்து, ஆண் பெண்களுக்குள் புகுத்தி விட்டதால், ஆண் பெண்களும் தாங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக் கொள்ள வேண்டுமென்று கருதி, எப்படி பக்திமான் என்றால் இப்படி இப்படி எல்லாமிருப்பான் என்று சொல்லப்பட்டதால், அனேகர் தங்களை பக்திமான்கள் என்று பிறர் சொல்ல வேண்டுமென்று கருதி பூச்சுப் போடுவதும், பட்டை நாமம் போடுவதும், சதா கோயிலுக்குப் போவதும், பாட்டுகள் பாடி அழுவதும் வாயில் சிவ சிவ என்று சொல்லிக் கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்து, பக்திமான்களாகக் காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், உண்மையான காதலர்களானால், இப்படி இருப்பார்களே என்று சொல்லிவிட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்து விட்டால், அதுபோலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்கிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தையெல்லாம் போடுகிறார்கள்.
ஆகவே ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும், அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அக்ரிணைப்பொருள்கள் இடத்திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவது போல்தானே ஒழிய வேறில்லை யென்றும், அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையில் இருந்து, யோக்கியதையில் இருந்து, மனப்பான்மையில் இருந்து, தேவையில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும் அவ்வறிவும் நடவடிக்கையும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக்கூடிய தென்றும், அப்படி மாறும்போது அன்பும் நட்பும் மாற வேண்டியது தான் என்றும், மாறக் கூடியதுதான் என்றும் நாம் கருதுகின்றோம். ஆகவே இதிலிருந்து நாம் யாரிடமும் அன்பும், ஆசையும், நட்பும் பொருளாகக் கொண்ட காதல் கூடாதென்றோ, அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை.
-     குடிஅரசு – 18.01.193
 
 

LinkWithin

Related Posts with Thumbnails