Wednesday, June 9, 2010

இலங்கை பேருவளையில் இஸ்லாமிய கண்காட்சி

இலங்கை: பேருவளையில் உள்ள் ஜாமியா நளீமிய என்ற கல்வி நிறுவனம் ஒரு இஸ்லாமிய கண்காட்சிக்கு ஏற்ப்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சி முஸ்லீம்களின இறைவேதமாகிய குர்ஆனை சார்ந்ததாக அமையவுள்ளது.

குர்ஆனின் அற்ப்புத தன்மைகளை இந்நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்த மாபெரும் கண்காட்சிக்கு எற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.
குர்ஆனும் அதன் கலைகளும், குர்ஆனின் அறிவியல் அற்புதங்கள், அறிவியல் கலைகளுக்கும் மனித நாகரீகத்திற்கும் முஸ்லிம்களது பங்களிப்பு இது போன்ற இன்னும் பல தலைப்புக்களின் கீழ் இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.
Source : http://www.inneram.com/201006098745/islamic-programe-srilanka-pearuvalai

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails