Tuesday, June 15, 2010

அழகிய கவிதை, படித்ததில் பிடித்தது.


அயல் நாடு வரத்துடிக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு பாடம்,அயல்நாட்டில் இருக்கும் அனைவருக்கும் இருக்கும் அனுபவம் (என்னையும் சேர்த்து).என்றும் அன்புடன் ,அக்பர் அலி ஹெச் ஆர் மேன்


தந்தை சொன்னார் அப்போதே ,
படித்து விடுடா - இல்லை என்றால்
வாழ்க்கை உன்னை படுத்தி விடும் !

என் தலை முறையினருக்கு எப்போதுமே
ஒரு நினைப்பு - பாஸ்போர்ட் கிடைத்துவிடும்
18 இல் - படிப்பு எதற்கு பிறகு !!!

சூழ்ச்சி காரர்களும் சூழ்ந்து கொண்டு
திரும்ப திரும்ப காதில் ஊதினார்கள் - பாய்
பசங்களுக்கு படிப்பு எதற்கு ? - ஆசிரியர் வடிவில் ...

பரிட்ச்சை எனக்கு
பரிட்ச்சையம் ஆனது - வினாத்தாளை பார்க்கும் போது
விமானத்தின் நினைப்புதான் எனக்கு !

பரிட்ச்சை முடிவும் வந்தது ,
பாஸாகி விடுவேன் என்று நினைத்தார்கள் எல்லோரும் - பின்
அழுது நனைத்தார்கள் அவர்கள் கண்ணை ...

என் தந்தை அழுது பார்த்தேன், முதன் முதலாய் !

என்னையே நான் தேற்றிக் கொண்டேன் நான் பயணம் போவதில்
எத்துனை கடுப்பு இவர்க்கு !!!

இறங்கிய நாளே இடி விழுந்தது எனக்கு !
புரிந்து விட்டது எனக்கு -
காரணம் கிடைத்து விட்டது !
தந்தையின் கண்ணிர் எதோ சொல்லதுடித்தது அன்று !!

அத்த்தனை அதட்டல்களையும்
அலச்சியம செய்தேனே !
கனிவே கிடையாது என்று
கற்பனையும் செய்தேனே !

உங்கள் எலும்புகளையும்
தோள்களையும் உருக்கிய பட்டறையா இந்த
பாலைவனம் !!

நாங்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காகவா
இத்தனை நாள்
தனியே அழுது உள்ளீர்கள்?

கனபொழுதில் கனமாகி போனது என் இதயம் !
கண்களில் கசியும் இந்த கண்ணிருடன்
மீண்டும் ஒரு முறை சொல்லிபார்தேன்
அத்தா என்று அடிமனதில் !!!!


- யாசர் அராபத் (நன்றி)

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails