Friday, June 11, 2010

வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது!

குவைத்தில் வீட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த ஏஜென்ட் கைது செய்யப்பட்டார். குவைத்தில் நல்ல வேலை வாங்கித் தருவதாக கூறி முன்னூறு தீனாருக்கு குவைத் நாட்டவரிடம் விற்பனை செய்ததும் வெளி வந்ததுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த ராஜன் என்பவரை  குவைத்துக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சின்னான் என்ற ஏஜென்ட் ஏமாற்றியதோடு  ராஜனை விற்பனையும் செய்திருக்கிறார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த சிவகங்கை காவல்துறை கண்காணிப்பாளர் ராஜசேகரன் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக  தெரிவித்திருக்கிறார்.
Source: http://www.inneram.comவீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails