Saturday, June 26, 2010

சிரிப்பும் சிந்தனையும்.

சிரிப்பும் சிந்தனையும்.:


Ø ஒருமுறை ஆங்கிலேயப் பத்திரிக்கையாளர் ஒருவர் காந்தியடிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருக்கும்போது …...

“உங்கள் மக்கள் உங்களை எப்படித் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர்?“
வேறு தலைவர்களே அவர்களுக்குக் கிடைக்கவில்லையா?

என்று கேட்டார்.

அதற்குக் காந்தியடிகள் சிரித்துக்கொண்டே,

“உங்களைச் சமாளிக்க நானே போதும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்“
என்று சொன்னார்.

----------- ------------- ---------------- -------------- -------------- ---------
Ø கவிஞர் செரிடனை இருவர் காணவந்தனர். அவர்கள் கவிஞரிடம், “எங்களுக்குள் சிறு விவாதம், அதற்று நீங்கள் தான் முடிவு சொல்லவேண்டும் என்றனர்.“

என்ன என்ற கேட்டார் கவிஞர்.

“நீங்கள் ஒரு முட்டாள் என்கிறேன் நான்,
நீங்கள் ஒரு மூடன் என்கிறார் என் நண்பர்“

நாங்கள் சொல்வதில் யார் சொல்வது மிகவும் சரியானது என்ற முடிவைத் தாங்கள் தான் சொல்லவேண்டும்.

கவிஞர் நண்பர்கள் இருவரையும் தம் கையால் பிடித்துக்கொண்டே..


“நான் இப்போது இருவருக்கும் இடையில் இருக்கிறேன்” என்று சொன்னார்.

----------------- ----------------------- ----------------- ---------------- -------


Ø பேராசிரியர் கல்கி ஒரு முறை “தமிழில் சிறுகதை“ என்னும் தலைப்பில் வானொலியில் பேசினார். அதில் அவர் “ ஒரு கதைபற்றிக் கூறும் போது, ஸ்ரீராமகிருஷ்ணர் மாதிரி கேட்பவர்களுக்குப் புரியுமாறு சொல்லவேண்டும் என்றார். சிறுகதை என்பது முதல் வரியைக் கூறும் போதே கேட்பவர் அடுத்தவரி என்ன? என்று கேட்கத் தூண்டுவதாக இருக்கவேண்டும்“ என்றார். உதாரணத்தையும் கூறினார்.

ஒருநாள் காஞ்சிபுரம் உபய வேதாந்த சுவாமிகள் தம் வேலையாளைக் கூப்பிட்டு , “குப்பா நீ ஸ்ரீபெரும்புதூருக்குப் போய், திருவெங்கடாச்சாரியார் ஐயங்கார் சுவாமிகள் திருக்கோவில் ஆராதனைக்கு திருத்துழாய் எடுக்கையில், திருக்கோயிலின் திருக்குளத்தில் திருப்பாசி வழுக்கி திருவடி தவறி விழுந்துவிட்டார் என்று கூறிவா“ என்றார்.

பின்னர், “குப்பா, சொல்வாயா. எங்கே ஒரு முறை கூறிக்காட்டு பார்க்கலாம் என்றார்.

அதற்குக் குப்பன், “ சாமி, கும்பகோணத்து ஆசாமி குட்டையில் விழுந்ததை, ஸ்ரீபெரும்புதூர் ஆசாமிக்குச் சொல்லவேண்டும் அவ்வளவுதானே? என்றான்.

ஒரு செய்தியைப் புரியும்படி சொல்வதில் பண்டிதனை விடப் பாமரன் தேர்ச்சியுடையவனாகவுள்ளான்.


-------------- --------------------- ------------------- ------------------------


Ø நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் ஒருநாள் படப்பிடிப்புக்காகக் காத்திருக்கும் போது ஈ ஒன்று அவரைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டே இருந்தது. அவரும் எவ்வளவு விரட்டியும ஈ அவரை விடுவதாக இல்லை.

ஈ அடிக்க ஒரு மட்டையை எடுத்துக்கொண்டு, அதை அடிக்கத் தயாரானார் சாப்ளின்.

ஈ அவரைச் சுற்றிக்கொண்டு அவரெதிரே அமர்ந்தது. அந்த ஈயை அடிக்காமல் சிறிது நேரம் உற்றுப்பார்த்த சாப்ளின் அதை அடிக்காமல் விரட்டிவிட்டார்.

அந்த ஈயை ஏன் அடிக்கவில்லை என்று கேட்ட நண்பரிடம் சாப்ளின்,

என்னைச் சுற்றி வந்த ஈ இது அல்ல, இது வேறு ஈ என்று சொன்னார்.

--------------- ------------------- ---------------- ------------ ------------------

Ø தோல்வியும் வெற்றியும் எப்படி ஏற்படுகிறது என்பதற்கு பெர்னாட்ஷா அளித்த விளக்கம்.

“ நான் இளைஞனாக இருந்தபோது பத்து செயல் செய்தால் ஒன்பது செயல்களில் தோற்றுப் போனேன். என்னுடைய தோல்வியை நான் விரும்பவில்லை. வெற்றிபெற என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்தேன். எனக்கொரு உண்மை பளிச்சென்று விளங்கியது. தொன்னூறு முறை முயன்றால் ஒன்பது முறை வெற்றிபெறலாம் என்பதை உணர்ந்தேன். முயற்சிகளை அதிகப்படுத்திக்கொண்டேன்.
------------------ ------------------ -------------------

Ø இத்தாலிய தினத்தாளின் ஆசிரியர் கில்மெஸ்ஸக் கெர்ரோ என்பருக்கு அவரது நண்பர் ஒருவரிடமிருந்து கட்டுரை வந்தது. கட்டுரை அவ்வளவு நன்றாக இல்லை.

அந்த நண்பா் “கட்டுரையில் காற்புள்ளி, அரைப்புள்ளி முதலிய குறிகளை மட்டும் தகுநத் இடங்களில் போட்டுக் கட்டுரையைப் பிரசுரிக்கவும்“

என்றுஎழுதியிருந்தார்.

தங்கள் விருப்பப்படியே செய்துள்ளேன். இனிமேல், காற்புள்ளி, அரைப்புள்ளி முதலிய குறிகளை மட்டும் தாங்கள் அனுப்பவும். கட்டுரையை நாங்கள் எழுதிக்கொள்ளுகிறோம் என்று பதிலனுப்பினார் ஆசிரியர்.

----- ----------- ----------- ----------- ------------ -------------- ---------
முனைவர்.இரா.குணசீலன், தமிழ் விரிவுரையாளர்
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்ககோடு

.நன்றிhttp://gunathamizh.blogspot.com/2010/06/blog-post_06.htmlசிரிப்பும் சிந்தனையும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails