Saturday, October 3, 2015

பெண்ணே ! பெண்ணே !...

கூடை மலர்கள் தூவித் ..தூவித் ...தூவி ...
உனக்கான பாதைகள் அலங்கரித்திருந்தாலும் ....
வார்த்தை முட்களைப் பரப்பித்தான் ...
அடியெடுத்து வைக்கிறாய் மகளே !....

பேசாத மொழிகளும் ,பார்க்காத விழிகளும் ..
உன்னை பாரினில் உயர்த்திவிட்டாலும் .....
அதிகப் பேச்சும் ,ஆணவத் திமிரும் ..
உன்னை அடக்கப் படுத்திவிடும் மகளே !....

மலர்வதும் ,உயர்வதும் ,மணப்பதும் ..
உன் லட்சியமாக இருக்கட்டுமே ...
பூப்பதும் ,காய்ப்பதும் ,கனிவதுமே ...
உன் இயல்பாய் இருக்கட்டும் கண்ணே !...

உன் சிந்தனை சிறகுகளை விரித்துப்பற ...
மௌடீக மொழிகளை மறந்துபற ...
காதலின் மயக்கம் தெளிந்துபற ...
மிதமிஞ்சின கற்பனை விட்டுபற ...

எஞ்சியிருக்கும் காலங்களோ சில ...
அஞ்சாமல் பேசும் பொய்களை இன்றோடு மற ...
வாழ்க்கையின் அர்த்தம் முழுதும் கொள் ...
வாழ்வை ...நன்றாய் வாழ்ந்து செல் !...

J Banu Haroon

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails