Friday, October 10, 2014

இறையே ... உன் இல்லத்து முசல்லாவை முத்தமிடும் இந்த முல்லாவுக்கு...

 
யாரிடம்
பேசினாலும்
எத்தனை பேர்
தைரியம் சொன்னாலும்
கிடைக்காத
அந்த
அமைதியும்
நம்பிக்கையும்
ஆறுதலும்
இறைவா....
உன் காலடியில்
விழுந்து கிடக்கும்
அந்த
சில நொடிகளிலேயே
உள்ளத்தில்
ஒளியாக ஊடுருவி
பேரின்பம் தருகிறதே....

என் தலை தாழும்
நேரத்தில்
உன் அருள்தானே
எழுகிறது
என் விழி நீரும்
விழும்போது
மனச்சுமைதானே
குறைகிறது !

இறையே ...
உன் இல்லத்து
முசல்லாவை
முத்தமிடும்
இந்த
முல்லாவுக்கு
உன்
இரக்கம் மட்டும்தான்
கதியே !
 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails