Wednesday, December 4, 2013

அமானித பொருளாய் காத்து இருப்பேன்

15 நாளில் புறப்படும் உனக்கு திருமணம் எதற்கு
இருந்தும் உடன்பட்டேன் திருமணத்திற்கு

எப்படியோ என் கரம் பிடித்து விட்டாய்
மருதாணி காயுமுன்னே மறு தேசம் சென்று விட்டாய்

விழித்து பார்கிறேன் நீ போன திக்கு
பலியாகி போனது உன் வீட்டார் அவசரத்திற்கு

விரல்களை விலங்கிட்டு
நிற்கிறேன் இறைவனிடம் துவா கேட்டு

விரைவில் வந்திடுவாய் என்று நம்புகிறேன்
வரும் வரை அமானித பொருளாய் காத்து இருப்பேன்


பஷீர்


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails