Wednesday, May 4, 2011

பின்லேடன் கொலை குறித்த கருத்து : திக் விஜய் சிங்கிற்கு காங்கிரஸ் அழைப்பாணை?

நேற்று முன்தினம் கொல்லப்பட்ட பின்லேடனின் உடலை அமெரிக்க ராணுவம் கடலில் வீசி இருக்கக்கூடாது என்று கருத்து தெரிவித்த திக் விஜய் சிங்கிற்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளதாக வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார்.


இன்று போபாலில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த திக் வ்ஜயசிங், இச்செய்தியை தாம் முற்றிலும் மறுப்பதாக கூறினார். பின்லேடன் உடல் கடலில் வீசப்பட்டது குறித்து கருத்து தெரிவித்திருந்த திக் விஜய் சிங், எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும்,அவரது உடலை புதைக்கும்போது அவர் சார்ந்த மதச் சடங்குகளை நடத்தும் மரியாதையை அமெரிக்க ராணுவம் அளித்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : http://www.inneram.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails