Showing posts with label உண்மை. Show all posts
Showing posts with label உண்மை. Show all posts

Sunday, May 19, 2013

அடீ

இந்தக் கவிதையின் சிறப்பு என்னவென்றால் ஒரே சொல் இரண்டு பொருளில் வரும். மடி - மடி என்ற இரண்டு சொற்களும் வேறு வேறு பொருள் உடையவை. அதே சமயம் அத்தனை வார்த்தைகளும் ஒத்த இசையுடைய வார்த்தைகள். இதை இயைபுத் தொடை என்று யாப்பிலக்கணம் கூறும்.


*

மன்னித்தால் நீயென் மடி
மறுப்பதனால் சேர்ந்தே மடி

அனுதினமும் அடிமேல் அடி
அமைதி என்றால் ஆறே அடி

உள்ளத்தின் உயர்வின் படி
உண்மையான உறவைப் படி

அன்பகலா செல்லக் கடி
அதில் மாயை ஏதுக் கடி

சண்டையிட்டால் சிதையும் குடி
சகிப்பினையே மருந்தாய்க் குடி

குயில் கூவ வேண்டாம் தடி
குடியேறும் மரணத் தடி

Friday, April 5, 2013

பொய்யை சொல்லி மக்கள் மனதில் நச்சுக் கருத்துகளை சிலர் தூவ விரும்புகின்றனர்.


இஸ்லாம் என்றால் கீழ்படிதல், அமைதியை நாடுதல், ஒப்படைத்தல், ஏற்றுக் கொள்ளுதல் இவ்விதமாக பொருள் உண்டு. இஸ்லாம் உயர்ந்த தத்துவத்தை தன்னகத்தே கொண்டுள்ளது .இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுபவன் ஒரு காலமும் வன்முறையை பின் பற்ற முடியாது .முஸ்லிம் என்றால் ஓர்  இறைவனுக்கு அடிபணிதல் என்பதையே குறிக்கும் . இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவர் ஏகத்துவ கொள்கையை பின்பற்றுபவராகத்தான் இருக்க முடியும்.அல்லாஹ் (இறைவன்)  ஒருவனே  (வணக்கத்திற்கு தகுதியுள்ளவன்) அவன் எவரையும் பெற்றெடுக்கவுமில்லை, அவன் எவருக்கும் பிறக்கவுமில்லை. அவனுக்கு எதுவும் நிகரில்லை.(குர்ஆன்; அத்தியாயம் ; 112)

 குர்ஆனைப் பாதுக்காக்கும் பொறுப்பை இறைவனே எடுத்துக் கொண்டுள்ளான் .குர்ஆன் இருக்க இஸ்லாமும் இருக்கும். இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்புமில்லை. ஒரு இயக்கமும் இல்லை. ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது. “அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். ஆனால் காஃபிர்கள்(இறை நம்ப்பிக்கை அற்றோர்) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூரணமாக்கியே வைப்பான். (61:8)

LinkWithin

Related Posts with Thumbnails