வெற்றி நிச்சயம்
இன்றில்லாவிட்டால் நாளை !
*************
தாயிப் -
மக்காவின் பக்கத்தில்
உயர்ந்து நிற்கும்
மலை நகரம் !
பச்சையும் பசுமையும்
கிளை விரித்து
மணம் பரப்பும்
மலர் நகரம் !
இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் மஹ்மூது நபிகள் பெருமானார் ( ஸல் ) அவர்கள் ஓரிறைக்
கொள்கையை எடுத்துச் சொல்ல தாயிப் மலைக்கு நடந்தே சென்றார்கள் ! தாயிபின் ஆட்சியாளர்கள்
அப்துல் யலீல்,
மஸ்வூது , ஹபீப் என்ற மூன்று சகோதரர்கள். மூவரும்
மூர்க்கர்கள் ! அவர்களிடம் " அல்லாஹ் ஒருவன் ; நான் அவன்
தூதர் " என்று நபிகள் சொன்னார்கள். " மலையின் மீது ஏறி வர ஒரு கோவேறு கழுதை
கூட இல்லாத உம்மையா இறைவன் நபியாக அனுப்பினான் " என்று அவர்கள் சிரித்தார்கள்.
சிறுவர்களை ஏவி விட்டு சீதள நபி மீது கற்களை வாரி எறிந்தார்கள் !
பாதை காட்ட வந்த பண்பாளரை
பைத்தியம் என்றார்கள்
பைத்தியக்காரர்கள் !
தாயிப் வாசிகள்
நபிகளாரை
நடக்கவிட்டு நகைத்தார்கள்
ஓடவிட்டு அடித்தார்கள் !
பெருமானார் பாதம் பட்டால்
பட்ட இடம் வளம் கொழிக்கும்
