Showing posts with label மலை நகரம். Show all posts
Showing posts with label மலை நகரம். Show all posts

Tuesday, May 7, 2013

தென்றல் வீசும் . சாந்தியும் சமாதானமும் அரசாளும் !



வெற்றி நிச்சயம்

இன்றில்லாவிட்டால் நாளை !

*************

தாயிப் -

மக்காவின் பக்கத்தில்

உயர்ந்து நிற்கும்

மலை நகரம் !

பச்சையும் பசுமையும்

கிளை விரித்து

மணம் பரப்பும்

மலர் நகரம் !

இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் மஹ்மூது நபிகள் பெருமானார் ( ஸல் ) அவர்கள் ஓரிறைக் கொள்கையை எடுத்துச் சொல்ல தாயிப் மலைக்கு நடந்தே சென்றார்கள் ! தாயிபின் ஆட்சியாளர்கள் அப்துல் யலீல், மஸ்வூது , ஹபீப் என்ற மூன்று சகோதரர்கள். மூவரும் மூர்க்கர்கள் ! அவர்களிடம் " அல்லாஹ் ஒருவன் ; நான் அவன் தூதர் " என்று நபிகள் சொன்னார்கள். " மலையின் மீது ஏறி வர ஒரு கோவேறு கழுதை கூட இல்லாத உம்மையா இறைவன் நபியாக அனுப்பினான் " என்று அவர்கள் சிரித்தார்கள். சிறுவர்களை ஏவி விட்டு சீதள நபி மீது கற்களை வாரி எறிந்தார்கள் !

பாதை காட்ட வந்த பண்பாளரை

பைத்தியம் என்றார்கள்

பைத்தியக்காரர்கள் !

தாயிப் வாசிகள்

நபிகளாரை

நடக்கவிட்டு நகைத்தார்கள்

ஓடவிட்டு அடித்தார்கள் !

பெருமானார் பாதம் பட்டால்

பட்ட இடம் வளம் கொழிக்கும்

LinkWithin

Related Posts with Thumbnails