Showing posts with label ஓரிறையைத் தொழு. Show all posts
Showing posts with label ஓரிறையைத் தொழு. Show all posts

Sunday, November 7, 2010

ஓர்நிலைப்படுத்தி ஓரிறையைத் தொழுவது எப்படி?



"எண்ணங்களேச் செயல்களைத் தீர்மானிக்கும்"-என்பதை முதன்முதலாக எண்ணத்தில்திண்ணமாகஇறுத்திக்கொண்டு,இக்கட்டுரையைப்படிக்கவும்;
இப்பயிற்சியும் அக்கருத்தின் அடிப்படையிலேதான் சொல்லப்படுவதாலும், இக்கட்டுரைக் கூறும் செயல்முறை பயிற்சியின் துவக்கம் முதல் இறுதி வரை உங்களின் உள்ளத்தை ஓர்மைப் படுத்திக் கொண்டு தொழ வாருங்கள்:
ஓளு: எல்லா முஸ்லிம்கட்கும் அறிமுகமான ஒன்று தான். இருப்பினும்.
இப்பயிற்சியிலும் கூட துவக்கம் முதல் இறுதி வரைக் கீழ்க்காணும் முறையில்
எண்ணத்தில் பயிற்சி கொடுக்கவும்:
ஒளு செய்யப்போவதாக உள்ளத்தாலும்- உதட்டாலும் உறுதிபட இறுத்திக் கொள்க.
(உடல் முழுவதும் மழையில் நின்று நனைந்தாலும் கூட உள்ளத்தில் "ஒளு" என்ற எண்ணம் இல்லாத வரை, அவ்வாறு மழையில் நனைந்து விட்டதனால் ஒளு ஆகிவிடாது)
பிஸ்மி சொல்லி துவங்கும்போழ்தே, மணிக்கட்டு வரை செய்த பாவங்கள் களைவதாக எண்ணிக் கொள்க;அவ்வாறே, வாய்க்கொப்பளித்தல்-முகம் கழுவுதல்-முழங்கை வரை
கழுவுதல்-தலைக்கு தண்ணீரால் தடவுதல்-  செவிகட்கு தடவுதல் மற்றும் இரு
கால்களைக் கழுவுதல் வரை முறையெ வாயால் பேசிய பாவம்;முகத்தில் உள்ள புலன்களால் புரிந்த பாவம்; கைகளால் செய்த பாவம்; தலையால் செய்த பாவம்; செவியால் கேட்ட பாவம் மற்றும் கால்களால் பாவமான செயல்கட்கு நடந்து சென்றவைகள் யாவற்றயும் நினைவுக்குக் கொண்டு வருக; அப்பாவங்கள் இதோ களைவதாக அகத்தில் உறுதிபட இறுத்திக் கொள்க.(ஓர் அதிசயம்; ஆனால் உண்மை: தண்ணீர் பட்டால் இரும்பிலும் துரும்பு ஏறும்; ஆனால், ஒளுவின் தண்ணீரால் உள்ளத்தின் துருவும் அகலும்!!!!!)
பாங்கு: முதல் அழைப்பான "சூர்" ஊதப்படுவதாகவும்; அதனால் யாவரும் "மௌத்" ஆகிவிட்டதால் உலகமே அமைதியாகி விட்டதாகவும் உள்ளதில் எண்ணிக் கொள்க.
(அதனாற்றான், பாங்கோசைக் கேட்கும் பொழுது, நமது துன்யாவின் நினைவுகள் யாவும் நிறுத்திவிட வேண்டப்படுகின்றது)

LinkWithin

Related Posts with Thumbnails