Showing posts with label தொழுகையின் நிலை. Show all posts
Showing posts with label தொழுகையின் நிலை. Show all posts
Sunday, November 7, 2010
ஓர்நிலைப்படுத்தி ஓரிறையைத் தொழுவது எப்படி?
"எண்ணங்களேச் செயல்களைத் தீர்மானிக்கும்"-என்பதை முதன்முதலாக எண்ணத்தில்திண்ணமாகஇறுத்திக்கொண்டு,இக்கட்டுரையைப்படிக்கவும்;
இப்பயிற்சியும் அக்கருத்தின் அடிப்படையிலேதான் சொல்லப்படுவதாலும், இக்கட்டுரைக் கூறும் செயல்முறை பயிற்சியின் துவக்கம் முதல் இறுதி வரை உங்களின் உள்ளத்தை ஓர்மைப் படுத்திக் கொண்டு தொழ வாருங்கள்:
ஓளு: எல்லா முஸ்லிம்கட்கும் அறிமுகமான ஒன்று தான். இருப்பினும்.
இப்பயிற்சியிலும் கூட துவக்கம் முதல் இறுதி வரைக் கீழ்க்காணும் முறையில்
எண்ணத்தில் பயிற்சி கொடுக்கவும்:
ஒளு செய்யப்போவதாக உள்ளத்தாலும்- உதட்டாலும் உறுதிபட இறுத்திக் கொள்க.
(உடல் முழுவதும் மழையில் நின்று நனைந்தாலும் கூட உள்ளத்தில் "ஒளு" என்ற எண்ணம் இல்லாத வரை, அவ்வாறு மழையில் நனைந்து விட்டதனால் ஒளு ஆகிவிடாது)
பிஸ்மி சொல்லி துவங்கும்போழ்தே, மணிக்கட்டு வரை செய்த பாவங்கள் களைவதாக எண்ணிக் கொள்க;அவ்வாறே, வாய்க்கொப்பளித்தல்-முகம் கழுவுதல்-முழங்கை வரை
கழுவுதல்-தலைக்கு தண்ணீரால் தடவுதல்- செவிகட்கு தடவுதல் மற்றும் இரு
கால்களைக் கழுவுதல் வரை முறையெ வாயால் பேசிய பாவம்;முகத்தில் உள்ள புலன்களால் புரிந்த பாவம்; கைகளால் செய்த பாவம்; தலையால் செய்த பாவம்; செவியால் கேட்ட பாவம் மற்றும் கால்களால் பாவமான செயல்கட்கு நடந்து சென்றவைகள் யாவற்றயும் நினைவுக்குக் கொண்டு வருக; அப்பாவங்கள் இதோ களைவதாக அகத்தில் உறுதிபட இறுத்திக் கொள்க.(ஓர் அதிசயம்; ஆனால் உண்மை: தண்ணீர் பட்டால் இரும்பிலும் துரும்பு ஏறும்; ஆனால், ஒளுவின் தண்ணீரால் உள்ளத்தின் துருவும் அகலும்!!!!!)
பாங்கு: முதல் அழைப்பான "சூர்" ஊதப்படுவதாகவும்; அதனால் யாவரும் "மௌத்" ஆகிவிட்டதால் உலகமே அமைதியாகி விட்டதாகவும் உள்ளதில் எண்ணிக் கொள்க.
(அதனாற்றான், பாங்கோசைக் கேட்கும் பொழுது, நமது துன்யாவின் நினைவுகள் யாவும் நிறுத்திவிட வேண்டப்படுகின்றது)
அறிவாளியின் தூக்கமும் அறிவில்லாதவன் இரவெல்லாம் நின்று வணங்குவதும் ...
அல்லாஹ் யாருக்கேனும் நன்மையை செய்ய நாடி விட்டால் அவரை மார்கத்தில் அறிவாளியாக்கிவிடுகிறான் என்றார்கள் நபி (ஸல்)
அறிவாளியின் தூக்கமும் அறிவில்லாதவன் இரவெல்லாம் நின்று வணங்குவதும் சம மாகாது என்றார்கள் அவர்கள்
பள்ளியில் படிக்கும் காலத்து பார்த்திருப்போம்...........
சில பிள்ளைகள் பாஸ் செய்தால் போதும் அதாவது 35 – 40 மார்க் வாங்கினால் போதும் என்றிருப்பார்கள்
சில பிள்ளைகள் சுமாராக வாங்கினால் போதும் அதாவது 50-60 மார்க் வாங்கினால் போதும் என்றிருப்பார்கள்
சிலர் 100க்கு 100 வாங்க விழைவார்கள். இந்தப் பிள்ளைகள் நன்றாக படிப்பதோடு மட்டுமல்லாமல் கலர் பென்சில் அழிப்பான் போன்றவற்றோடு சென்று விடைத்தாளை அழகுற எழுதி வண்ணங்களால் கோடிட்டு 100க்கு 100 வாங்குவார்கள்.
தொழுகையின் நிலைகளும் அவ்வாறு தான் தொழுகையில் 100க்கு 100 வாங்க வேண்டும் என்றால் அதன் நிலைகளை முழுவதுமாக நிறைவேற்ற வேண்டும்.
நான் நமது நாட்டில் பணி செய்து கொண்டிருந்த போது என்னுடன் பணியாற்றிய இரணடு மூத்த முஸ்லிம் அதிகாரிகளுடன் தொழச் செல்வேன். ஒருவர் பருமனாக இருப்பார்
நான்கு ரக் அத் தொழும்போது (ஃபர்ல்) ஒவ்வொரு ரக் அத்திலும் இரண்டாம் ஸ்ஜ்தா முடிந்து பின் உட்கார்ந்து பின் கைகளை தரையில் ஊன்றி எழுந்திருப்பது என்பது நபி பெருமானாரின் வழி முறை இது ஷாஃபி மத்ஹபிலும் உள்ளது.
ஆனால் அவர் ஹனஃபி ஆகவே அவ்வாறு செய்ய மாட்டார் கையை ஊன்றாமல் எழும் போது கனமான அவர் தடுமாறுவார். மேலே விழுந்திடுவாறோ என நான் பயப்படுவேன்.
நான் அவரிடம் “ஒவ்வொரு ரக் அத்திலும் இரண்டாம் ஸ்ஜ்தா முடிந்து பின் சில நொடிகள் உட்கார்ந்து பின் கைகளை தரையில் ஊன்றி எழுந்திருப்பது என்பது நபி பெருமானாரின் வழி முறை இது ஷாஃபி மத்ஹபிலும் உள்ளது” அதை நீங்கள் ஃபாலோ செய்யலாமே ஏன் டைரக்டாக ஸஜ்தா முடிந்த வுடன் நேரடியாக எழுந்து நிலைக்கு வர முயலுகிறீர்கள் இதனால் உங்கள் பாலன்ஸ் தவறி தடுமாறுகிறீர்களே என்றேன். அதை ஃபாலோ செய்தீர்கள் என்றால் பாலன்ஸ் தவறாது அதல்லாமல் எத்தனையாவது ரக் அத் என்பது கூட ஞாபகம வருமே என்றேன்.......
With best regards
Kamal
by mail from Kamal
Labels:
தூக்கமும்,
தொழுகையின் நிலை,
முஸ்லிம்,
வணங்குவதும்
Subscribe to:
Posts (Atom)

