Showing posts with label வணங்கி வாழ்வது.இணங்கி வாழ்வது. Show all posts
Showing posts with label வணங்கி வாழ்வது.இணங்கி வாழ்வது. Show all posts

Sunday, May 26, 2013

இஸ்லாம் எளிய தத்துவங்களையே முன் வைக்கிறது.


இஸ்லாம் எளிய தத்துவங்களையே முன் வைக்கிறது. அவை பின்பற்ற இலகுவானவை .. அவைகளில் முக்கியமாக கூறப்படுவது மூன்று... இந்த மூன்றுக்குள் மனிதனின் மூச்சே அடங்கி இருக்கிறது. அவை.....

இறையை வணங்கி வாழ்வது

எல்லோருடனும் இணங்கி வாழ்வது

இல்லாதோருக்கு வழங்கி வாழ்வது

முதலில் ...படைத்த இறைவனுக்கு அவனே இறைவன் என்று கட்டியம் கூறவும் அவன் தருகின்ற அளப்பரிய உதவிகளுக்கு நன்றி செலுத்தவும் அவன் கருணையை எதிர்பார்த்தும் இறைவனை வணங்கித்தான் வாழ வேண்டும். இறையை வணங்காத மனிதனுக்கு மனிதன் என்ற மதிப்பு இல்லை. அடுத்து .....ஜாதி மத பேதமின்றி மக்களிடம் நேசமாக பழகி வாழ வேண்டும். நிற வேறுபாடு காட்டி இன மாறுபாடு காட்டி மனிதர்களில் உயர்வு தாழ்வுக்கு இடம் கொடுக்காமல் வாழ வேண்டும் என்பதே இஸ்லாத்தின் பிரகடனம். மூன்றாவதாக வறுமை வயப்பட்டோருக்கு வழங்கி வாழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டாயக் கடமை. செல்வத்தையும் ஏழ்மையையும் இறைவனே படைத்தான். மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும் என்பதற்காகவே அவன் சிலருக்கு வளத்தையும் இன்னும் சிலருக்கு வறுமையையும் வழங்கி இருக்கின்றான். மனித சமுதாயமே உதவி ... ஒத்தசைகளின் இழைகளால்தான் நெய்யப்பட்டிருக்கிறது.முந்திய இரு விஷயங்களிலும் உடன்படும் பலர் பிறருக்கு வழங்கி இன்பம் காணுவதில் மட்டும் உடன்படுவதில்லை.

LinkWithin

Related Posts with Thumbnails