Friday, July 13, 2012

மார்க்கத்தை பிரித்தாலும் சூழ்ச்சி! (வீடியோ இணைப்புடன்)





(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.(குர்ஆன்-1:5)  It is You we worship and You we ask for help.


அல்லாஹ் அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் உயிரோடிருப்பவன். என்றென்றும் நிலைத்திருப்பவன். அவனை சிறுதுயிலோஇ உறக்கமோ பீடிக்கா. வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியது. (அல்குர்ஆன் 2:255)


  அன்பானவர்களே! தங்களை “சுன்னத் வல் ஜமாத்” என்று அறிவிப்பு செய்யும் சிலர் இஸ்லாத்தில் இல்லாத, இஸ்லாத்துக்கு விரோதமான அனாச்சரங்களை, கபுரு வணக்கத்தை, யூதர்கள் இஸ்லாத்தில் புகுத்திய மீலாது விழாக்களை, மவ்லீதுகளை இன்று இஸ்லாத்தின் பெயரால் நபி வழி என்றும், நபியை புகழ்கிறோம் என்றும் தாயத்து, தட்டு, நூல் முடிதல் என்று அனைத்து ஷிர்க்கான செயல்களையும் செய்து கொண்டு தங்களை “சுன்னத்வல்ஜமாத்” என்று கூறும் இவர்கள் இன்று தமிழகத்திலும் கால் பதித்து வருகிறார்கள்.

இவர்களை நாம் இன்று தலைவர்களாகவும் ஏற்க முயல்கின்றோம் . தனக்காக எழுந்து நிற்பதை கூட அல்லாஹ்வின் தூதர் அனுமதிக்க வில்லை. ஆனால் இவருக்காக இஸ்லாத்தில் இல்லாத மரியாதைகள் அளிக்கப்படுகிறது. வீண் ஆடம்பரம், அவர்களை  தொட்டு முத்தமிடுதல் கார், பவணி என்று அனேக அனாச்சாரங்கள் அவர்களின்  உண்மை நிலையை அடையாளம் காட்டுகிறது.

இவர்களுக்கும் நபி(ஸ்ல்)அவர்களின் சுன்னத்துக்கும் என்ன சம்மந்தம்? நபியுடையை மார்கத்திற்கு   மாற்றமாக செய்யும் இவர்களின் அனைத்து செயலும் நபியுடைய சுன்னததை சார்ந்ததாக இல்லை, இவைகள் காதியானிகள், ஷியாக்கள் இஸ்லாத்தின் பெயரால் புகுத்திய பித்அத்கள் ஆகும். இஸ்லாம் எதை ஒழிக்க வந்ததோ அதை  மார்க்கம் என்று இன்று போதித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் இவர்களை சரியாக  அடையாளம காட்டுகிறது இந்த மௌலானா ஷம்சுதீன் காசிமி ஜும்மா குத்பா உரை.(தலைப்பு :முஸ்ளி யார்? ) இதை திறந்த மனதுடன் கேட்டு நாம் நன்கு விளங்கி உண்மையான மூஃமின்களாக வாழ அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.
 Source : http://niduri.com/?p=776#comment-101

 தலைப்பு :முஸ்ளி யார்?
 மௌலானா ஷம்சுதீன் காசிமி ஜும்மா குத்பா உரை. மக்கா பள்ளியில் நடந்து என்ன? intjvideo

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails