Saturday, May 28, 2016

இறைவன் ...

J Banu Haroon
...

நியாயமாக கேட்பது எதையும் ...
நிச்சயமாக தருபவன் ...
வார்த்தைக் கொட்டல்களை ..
வாங்கிக் கொள்பவன் ...
எத்தனை திட்டல்களையும் ..
ஏற்றுக் கொள்பவன் ...
கொட்டும் கண்ணீர்த்துளிகளில் ..
கருணை கொள்பவன் ...
நன்றிகளை சார்த்தினால் ..
பெற்றுக் கொள்பவன் ...

நல்ல மனித மனங்களில் ....
மகத்துவம் மிக்கவன் ...
காணிக்கைகள் எதனையும் ..
கேட்டுப் பெறாதவன் ...
நம்மின் நன்மை , தீமைகளை ..
துல்லியமாக எடை போடுபவன் ...
பிறரின் பசி ,துன்பம் ,தேவைகளை ..
நம்மையும் உணரச் செய்பவன் ...
நம்மின் உழைப்பின் கூலியிலும் ...
பிறருக்கு பகிரச் சொன்னவன் ...
நயவஞ்சகர்களின் சூழ்ச்சிகளை ..
விட்டும் நம்மை காப்பவன் ...
----- நம்பிக்கையாளர்கள் தொடருங்களேன் ....
J Banu Haroon

----- ஜே .பானு ஹாரூன்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails