Tuesday, January 18, 2011

உறங்கியது போதுமினி!‏

ஆராரோ ஆரீராரோ, தூங்காதே என் மகனே!.

தூங்கியதோ போதுமினி, கண்விழிப்பாய் என் மகனே!.
குழந்தையாய் நீ இருக்கும் போது, பாடிய என் தாலாட்டுதனில்,
இன்னுமா நீ தூங்குகின்றாய், கன் விழிப்பாய் கண்மணியே!.
கல்லாத காரணத்தால், கடல்கடந்தும் நம்மக்கள், பல்தியாவில்படும்பாட்டை!

என்னவென்று நான்சொல்வேன்!. கற்றிருந்தால் சுற்றத்தோடு,
மற்றவர்போல் சென்றிருப்பான், செல்வத்தையும் கண்டிருப்பான்!.
கல்வியை நீ கற்றிடனும், எல்லாத்தையும் வென்றிடனும்!.
தூங்காதே என்னுயிரே! தூங்கியதோ போதுமினி.....


பீடி சுற்றும் தொழில்செய்து, நாடி தளர்ந்த நம் சமூகம்,
ஓடியோடி உழைத்திட்டும், காசுபணம் கையிலில்லே!.
கோடி பணம் காணனுமே, காணும் அந்த நாளுமெப்போ?.
ஏழைக்கும் நாம் கொடுத்திடனும், நீ சீதக்காதி ஆவதெப்போ!.

ஆராரோ ஆரீராரோ, தூங்காதே என் மகனே.....

இளைஞன் நீ தூங்கி விட்டால், சமுதாயம் சேர்ந்துறங்கும்,
உன் இருவிழிகள் உறங்கிருந்தால், உதைத்தே நான் எழுப்பிடுவேன்!.
உறங்கியதோ உன் உள்ளம், உன்னை எப்படி நான் எழுப்பிடுவேன்?.
தூங்காதே என் மகனே தூங்கியதோ போதுமினி!.

கேடிப்பயல் மோடிக்கூட்டம், கருவருக்குது கண்மணியை,
ஓடிப்போய் நீ தடுத்தால், கோடிப் புன்னிய முனக்குண்டு!.
உறங்கிநீயும் தான்கழித்தால், பாதுகாப்பு தானுமேது?.
காவல் காக்கும் நாளுமெப்போ!. நீ கண்முழித்தால் தானுமப்போ!.

அகக்கண் விழிப்பாய் கண்மணியே, ஆராரோ ஆரிராரோ.......

அரசியலில் நீ இல்லாததை, அமைச்சராகி நீ வெல்லாததை,
சச்சாரும் தானுரைத்தார், சமுதாயம் படும்பாட்டை!.
சூழ்ச்சிசெய்யும் அதிகாரப்பயலுமவன், சண்டாளப் பாவியவன்,
சளைக்காமல் தர மறுக்கின்றான், உன்னுரிமை தானுமதை!.

ஆராரோ ஆரீராரோ, தூங்காதே என் மகனே!.

அல்லாஹ்வின் பள்ளியினை, இல்லாத பொய்யைச்சொல்லி,
அநியாயமாய் தானிடித்தான்!. அல்லாஹு அக்பரெனும், அழகான பாங்கோசை, அநியாயமாய்தான் அங்கு நின்றதே!.
அதையறிந்த பின்னுமாய் நீ, அறிவிழந்து உறங்குகின்றாய்!.

நீதிமன்ற தீர்ப்புதனை இன்னுமா நீ நம்புகின்றாய்?..
விழிக்காமல் நீயுறங்கி, வீணாய்தான் போனாய் என்றால்,
உரங்காமல், நான் கொடுத்த தாய்பாலதனை,
வீனாய்தான் போனதென்று, வீறுகொண்டு நானெழுவேன்!

இனி வீரப் பால் தானூட்ட, வீரத்தாயவள் இல்லையென்றும்,
தாலாட்டு பாடிடவே, தாயவள் இல்லையென்றும்,
வீரத்தாலாட்டுப் பாடிடவே, உன்னைப்போல் வீரத்தாயில்லை என்றும்,
வீனாய்தான் நீ பேசி, பின் வீதிக்கு வந்தென்னபயன்!.
உறங்கியது போதுமினி!‏ அகக்கண் விழிப்பாய் கண்மணியே,

-- அதிரைமுஜீப்

Thanks: http://adiraimujeeb.blogspot.com/2011/01/blog-post_18.html
நன்றி :http://adirainirubar.blogspot.com/2011/01/blog-post_19.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails