Sunday, January 23, 2011

என்னை எழுத்தாளர் ஆக்கினார். by மருத்துவர் ஹிமானா சையத் .

இஸ்லாமியத்  தமிழ் எழுத்தாளர்களில் இன்று முன் வரிசையில் இருப்பவர் ஹிமானா சையத் அவர்  சொல்கிறார் ...
 என் இளமைக்கால வாசகப்  பசிக்கு  இரை போட்ட வித்தகர் நீடூர் சயீத் ஹாஜியார் .சமுதாய இதழ்களில் பூக்கோத்தாற் போல் அவர்கள் தொகுத்து வழங்கிய `சிந்தனைச் சிதறல்`  என்னுல் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்மதிகம்
நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தது .
 1987இல் நான் சுறுசுறுப்பாக எழுதத் தொடங்கியபோது  உடனே என்னை வாரி அணைத்து உச்சிமோந்து , ஊக்கம் தந்து தொடர்ந்து எழுத  வேண்டும் என்ற ஆர்வத்தினை என்னுள் உண்டாக்கினார் .
 1989இல் பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்ட மயிலாடுதுறைப் பள்ளிவாசல் திறப்பு விழாவில் எண்ணைப் பேச வைத்து ,பின்னாளில்  நான் ஒரு சமுதாயப் பேச்சாளனாகக்   கூர்மை பெற உதவினார் .
 1990இல் எனது முதல் நாள் விருந்து சிறுகதை  தொகுதி வெளிவந்த போது , அந்நூலில் என்னைப்பற்றி அருமையான ஓர் அறிமுகம் செய்வித்து என்னை ஆசீர்வதித்தார் .
1990இல் தாடி வைக்க வேண்டும் என்ற விதையை  என்னுள் தூவியவர் . அதன் மூலம்   ஒரு முக்கிய சுன்னத்தை நிறைவேற்ற ஆன்மீக   ரீதியாக   எனக்கு   உதவினார் .

மருத்துவர் ஹிமானா சையத்
About    Himana Syed : medical doctor, author, publisher(40 BOOKS TODATE), orator, educational field worker, community based social activities, counseling, photography,etc

Hony. editor, NARGIS Tamil monthly for women




----------------------------------------------------------------------------------------

சயீது ஒரு கடிதம்

 நீண்டகால நண்பரான மருத்துவர் அமானுல்லாவுக்கு(M.B.,B.S., Dch) (ஈரோடு)

10.12.2007 அன்று, அதாவது தனது மரணத்துக்கு இரண்டு நாள் முன் சயீது ஒரு கடிதம் எழுதினார்.  அதில்...

“முதுமை வந்து கூன் விழுமோ
    
மூன்றுகால் நடை வாய்த்திடுமோ
    
புதுமை உலகம் கேலி செய்யுமொ
   
என்று வரும் எனக்கு அழைப்பு – அங்கு
   
சென்று விடத்தான் நினைப்பு”

என்ற கவிதை வரிகளை எழுதியிருக்கிறார், சயீது!
---------------------------------------------------------------------------------------------------
 

1 comment:

Unknown said...

asssalamu alaikum..
I am very glad to say everyone, he is my grand dad..

LinkWithin

Related Posts with Thumbnails