Friday, March 27, 2015

இல்லையென்பது இல்லை....!


இன்பம் இல்லையென்றால்
இன்னல்களை நேரிட வேண்டியதில்லை
இருப்பது இல்லைஎன்றால்
இழப்பதற்கு என்று எதுவுமில்லை

உறவுகள் இல்லையென்றால்
பிரிவெனும் கடும் துயரிருபதில்லை
வாழ்க்கை இல்லையென்றால்
சுமைகளை சுமக்க வேண்டியதில்லை
இளமை இல்லையென்றால்
கனவுகள் காண்பதில் அர்த்தமில்லை
ஆற்றல் இல்லையென்றால்
ஆக்கபூர்வ செயல்கள் எதுவுமில்லை

செல்வம் இல்லையென்றால்
செலவு செய்ய தேவையில்லை
சிறப்பு இல்லையென்றால்
திறமையை நிரூபிக்க அவசியமில்லை

இயற்கை இல்லையென்றால்
உயிர்களுக்கு உறைவிடம் எங்குமில்லை
இறைவன் இல்லையென்றால்
இவ்வுலகில் உயிர்கள் எதுவுமில்லை

ராஜா வாவுபிள்ளை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails