Thursday, February 8, 2018

பேராசிரியர்_நசீமாபானு



பேராசிரியர்_நசீமாபானு ...
எனது அருமை நண்பர் 
பேராசிரியர்_சாயிபு_மரைக்காயர் அவர்களின் துணைவியார்.
இவருக்கும் குமரி மாவட்டத்திற்கும்
நெருக்கமான உறவிருக்கிறது .
இவர் ...
#கவிமணி_தேசிக_விநாயகம்_பிள்ளை
அவர்களின் உறவுமுறை பேத்தி.
காரைக்கால் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார்.
இஸ்லாத்தால் ஈர்க்கப்பட்டு
#முஸ்லிமானார்.
சாயிபு மரைக்காயர்
காதல் மணமும் செய்து கொண்டார்.
இஸ்லாத்தின் மாண்புகளை
செவி இனிக்கப் பேசும்
ஆற்றல் பெற்றவர்.

ஆணும்
பெண்ணுமாய்
குழந்தைகள் பெற்று
அவர்களையும் உயர் நிலைக்கு கொண்டு வந்து பேரன் பேத்திகளோடு
மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இறைருளால் ...
வாழ்வில் எல்லா நன்மைகளையும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ
வாழ்த்துக்கள் !
பேராசிரியர்கள்
சாயிபு மரைக்காயர்
நசீமாபானு
நத்தர்சா
அகமது மரைக்காயர்
பேபிஜான்
ஆகியோரை
கோட்டாறு பாவாகாசீம் ( வலி ) அவர்களின் விழாவுக்கு அழைத்து வந்து பட்டி மன்றம்
நடத்தி இருக்கிறோம்.
நசீமா அவர்கள்
தனியாக ஒரு நாள் உரையாற்றினார்கள்.
காரைக்காலில் உள்ள அவர்களின் இல்லத்தில்
எனக்கு விருந்து தந்து உபசரித்த
உத்தமர்கள்.
சாயிபு மரைக்காயர் பொதுச் செயலாளராக இருக்கும்
இஸ்லாமிய இலக்கியக் கழகம் எனக்கு
#தமிழ்மாமணி விருது தந்து கவுரவப் படுத்தியது.
#சாதனையாளர்
#சாயிபுமரைக்காயர்.
நூற்றுக் கணக்கான நூல்களை எழுதியவர்.
நூற்றுக்கணக்கான
விருதுகளையும் வாங்கியவர்.
அவரது துணைவியாரும்
#சாதனையாளரே.
பன்னூல் ஆசிரியர்.
இருவரும் துபாய் சென்று வந்து
#நமது_முற்றத்தில்
துபாய் பயணக் கட்டுரை
எழுதினார்கள்.
" உத்தம நபிகளின் உண்மைத் தோழர்கள் " என்ற
எனது நூலுக்கு அணிந்துரை தந்தவர்
சாயிபு மரைக்காயர்.
நதிகள் இணைப்பே நடைபெறாத போது
தமிழ் நதிகள் இல்லறத்தில்
இணைந்தது
இறைக் கருணை.
தமிழ் தம்பதிகளைப் பற்றி
ஏராளம் எழுத வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் ...
எழுதுவேன்.
* தம்பி Colachel Azheem
இட்ட ஒரு பதிவுக்கான(  அறிய வேண்டிய அரிய மனிதர்கள்...(5). பேராசிரியை நசீமா பானு )என்னுடைய
பின்னூட்டத்தை சற்று விரிவாக
இங்கே தந்திருக்கிறேன்.


Abu Haashima
அறிய வேண்டிய அரிய மனிதர்கள்...(5). பேராசிரியை நசீமா பானு

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails