Sunday, August 18, 2013

என் அன்புக்குரிய சகோதரனே அப்துல்லா வாகவே மரணித்தவனே

என் அன்புக்குரிய சகோதரனே
அப்துல்லா வாகவே மரணித்தவனே

அப்துல்லாவிர்க்கு முன் பெரியார்தாசன்
ஒரு போதம் இல்லை பெரியவன்
அப்துல்லாவே பெரியவன்

அல்ஹம்திரில்லாஹ் .......

என்று மேடை தோறும் முழங்கி
இறைவனுக்கு இணங்கி
இணைந்தாய் இஸ்லாத்தில் மனம் விரும்பி

எப்படியேனும் TV ல் முகம் காட்ட முடியாத
பேசுவதற்கு ஒரு மேடை கிடைக்காதா

என்று அலைபவர்களுக்கு மத்தியில்
அதையெல்லாம் துறந்து விட்டு வந்தாய் ஒத்தையில்

காச்சி ஊடகங்களில் நீ கலக்கிய காலம்
மேடைகளில் நீ ஆற்றிய இலக்கிய சாரம்

இஸ்லாத்திர்க்காய் அத்தனையும் துறந்தாய்
இஸ்லாம்தான் சரியான மார்க்கம் என வாய் திறந்தாய்

என் அண்ணனே என் அன்புக்குரியவனே
அதிகம் நா வாற்றல் பெற்றவனே

இழந்தோமடா உன்னை நாங்கள்
உனக்காக துவா கேட்க ஏந்துகிறது எங்கள் கரங்கள்

பொருந்தி கொள்வான்
உன்னை இறைவன்

காரணம் அல்லா தான் என் இறைவன்
என்று நீ ஏற்று கொண்டவன்

இறைவா பாவங்கள் செய்தால் மன்னித்துவிடு
நல்லோர் இடத்தில் ஒரு இடத்தை ஒதுக்கி கொடு

எங்கள் அபுதுல்லா வே
உன் மரணம் அமைந்து இருக்கு நல்லாவே

கிடைக்காத பாக்கியம் அப்துல் முத்தலிபுக்கு
கிடைத்து இருக்கு அந்த பாக்கியம் உனக்கு

அந்த வகையில் நீ பாக்கிய சாலி
அல்லாஹ்வை உச்சரித்தே பிரிந்து இருக்கு உன் ஆவி

நீ சென்று இருகிறாய் எங்களுக்கு முன்னாள்
நாங்கள் வர இருக்கிறோம் உனக்கு பின்னால்

வாய்ப்பு தந்தாள் சந்திப்போம் மறுமையில்
விடைபெறுகிறேன் அதுவரையில்

இன்னா லில்லாகி வ இன்னா இலைகி ராஜவூன்
இதை என் நா உச்சரிக்கும் போது அழுகிறது என் கண்

பஷீர்
Bassheer Ahamed

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails