Monday, April 13, 2015

திரு ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்கள்.

என் உயர் மதிற்பிற்குரிய திரு வாலறிவன் குமார் ஐயா
கைகோர்த்து வைத்த உயர்நெறி சிந்தனையாளர் அன்பிற்கினிய ஐயா..

.திரு ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்கள்.

சென்னை சீதக்காதி அறக்கட்டளை, இஸ்லாமிய இலக்கியக் கழகம், புதுக்கோட்டை கலைமான் அறக்கட்டளை, திருச்சி இனாம்குளத்தூர் Islamic Research Centre of Scripture & Culture முதலிய மதிப்பு வாய்ந்த நிறுவனங்களின் விருதுகளைப் பெற்றவர். கவிஞர்,எழுத்தாளர்,நூலாசிரியர்,ஆய்வாளர்,பதிப்பாசிரியர்,சொற்பொழிவளர் எனத் தனித்தன்மையோடு இயங்கிவருபவர்.
இவருடைய முதல் நூலான ”வீரம் செறிந்த இஸ்லாம்”, இஸ்லாம் மார்க்கத்தின் பார்வையில் ஒரு தத்துவத்தை வரலாற்றின் அடிப்படையில் இலக்கியத் தரத்தோடு தமிழ் மக்கள் அனைவருக்குமான ஒரு நூலாக வழங்கியமைக்காக சென்னை சீதக்காதி அறக்கட்டளையின் விருது பெற்றதாகும்(1987).

உலக இலக்கிய வரிசையில் இடம்பெற்றுள்ள- வரலாற்று விற்பன்னர் தாமஸ் கார்லைலின் புகழ்பெற்ற “On Heroes and Hero-Worship and the Heroic in History” என்ற நூல் 1840-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஆற்றப்பட்ட சொற்பொழிவாகும்.இந்த நூலின் “The Hero as Prophet-Mahomet : Islam" என்ற தலைப்பிலான இரண்டாவது அத்தியாயத்தை “தூது வந்த வீரர்” என்ற தலைப்பில் மூல மொழியான ஆங்கிலப் பதிப்புகளில் கூட இடம் பெறாத நூற்றுக்கும் மேற்பட்ட விளக்கக் குறிப்புகளுடன் தமிழ் மொழிபெயர்ப்பு நூலாக முதன்முதலாக 1994-இல் வெளியிட்ட பதிப்பாசிரியர் ஏம்பல் தஜம்முல் முகம்மது, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் இளவரசர் சார்லஸ் 1993-இல் “Islam and the west” என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவையும் “இஸ்லாமும் மேற்கு நாடுகளும்” என்ற தலைப்பில் நூலாக வெளிக் கொணர்ந்தார். இவ்விரண்டு நூல்களுடன் இவருடைய கவிதைகள்-பாடல்களின் தொகுப்பான “நிழலில்லாத சூரியன்” என்ற நூலையும் 1994-இல் வெளியிட்டார்.

இந்தியத் திருநாட்டின் பொன்விழா ஆண்டு நினைவாக ஆகஸ்ட்,1998-இல் ”இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம்” என்ற ஆய்வு நூலை ஏம்பல் தஜம்முல் முகம்மது எழுதினார்.இந்த நூலை `திருவருட்பேரவை’எனும் சமய நல்லிணக்க அமைப்பின் தலைமையில் புதுக்கோட்டை நகரைச் சேர்ந்த பதினெட்டுக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்று சேர்ந்து வெளியிட்டதன் மூலம் இந்த நூல் பெரிதும் சிறப்பிக்கப்பட்டது.(இந்த நூற்பணிக்காக `சிறந்த சமய நல்லிணக்க நூலாசிரியர்’ என்ற விருதினை இஸ்லாமிய இலக்கியக் கழகம் தன்னுடைய திருச்சி மாநாட்டில் வழங்கிச் சிறப்பித்தது.) இந்த நூல் சர்வ சமயச் சான்றோர்களின் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு “Religious Harmony – an Islamic Doctrine” என்ற தலைப்பில் ஒரு தனிச்சிறந்த பதிப்பாக வெளியானது. பின்னர் இந்த நூலுக்கு திருச்சி இனாம்குளத்தூர் Islamic Research Centre of Scripture & Culture என்ற நிறுவனம் விருது கொடுத்துச் சிறப்பித்தது.[` Religious Harmony-An Islamic Doctrine’ is included in UNESCO’s index translationum.(S.No. 41/48) and used in American editions as a reference book.]. ”திருக் குர்-ஆனில் பிற சமய மதிப்பீடுகள்-Quranic View of Other Religions”-என்ற ஆய்வேடு அலில இந்திய அளவிலான ஒரு மாநாட்டில்(The All India Seminar on Interpreting the Scriptures, Hermeneutics of Sacred writings organized by The School of Religions, Philosophy & Humanist Thought, Madurai Kamaraj University, under the auspices of DRS – SAP – UCG.) சமர்ப்பிக்கப்பட்டுப் பின்னர் நூலாகவும் வெளிவந்தது.ஏம்பல் தஜம்முல் முகம்மது சமய நல்லிணக்கம் என்ற கொள்கையை விளக்கும் விதத்தில் மூன்று நூல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

இவை தவிர நான்கு பாட நூல்கள், வரலாற்று நூல்கள் உட்பட மொத்தம் பதினாறு நூல்களும் `நடுநிலையான மொழிக் கொள்கை’,`தமிழுள்ள தமிழ்’ முதலான பல ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

தமிழ் பிரியன் நசீர்
----------------------------
 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails