Wednesday, February 1, 2017

⁠⁠⁠மந்திரம் சொல்வேன் மகனே...!

ஏக்கம் உன்நெஞ்சில்
---- ஏறாமல் இருந்திடவே
கேட்டது எல்லாம்
---- கிடைக்கச் செய்வேன்
புரவியிலேறி புவியெங்கும்
---- சென்று வெற்றிகள்பெற்றிட
சான்றோனாய் வாழ்ந்திட
---- வழிவகைகள் வழங்கிடுவேன்

சீனம் சென்றேனும்
---- கல்வியை கசடறக்
கற்றிட தேர்ந்தெடுத்த
---- வழிகளை செயல்படுத்திடுவேன்
உழைப்பே உயர்வென்ற
---- தாரக மந்திரத்தை
தகையாய் சிரசிலேற்ற
---- போதனைகள் செய்திடுவேன்
அன்னையின் காலடியில்
---- சுவர்க்கம் இருப்பதையும்
தந்தை சொல்மிக்க
---- மந்திரமில்லை என்பதையும்
செம்மையாய் எடுத்துரைத்து
---- ஏற்கவைத்து எக்காலமும்
பார்போற்ற வாழ்ந்திட
---- உறுதி செய்திடுவேன்
ஈகையில் இருக்கும்
---- சிறப்பை உணர்த்தி
ஈட்டிய செல்வத்தை
---- வறியோர்க்கு பகிர்ந்தளிக்கவும்
படைத்தவனை பாங்காய்
---- பணிந்து வாழ்ந்திடவும்
பெற்றவனாய் மந்திரம்
---- சொல்வேன் மகனே...!

ராஜா வாவுபிள்ளை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails