Wednesday, February 8, 2017

யார் தடுப்பார் ?..எவர் தடுப்பார் ?...

J Banu Haroon
இங்கே தாலியும் புர்காவும் பற்றிப்பேச ...
யாருக்கும் தகுதியில்லை .நகர்ந்து நில் !...
அவளின் உரிமை ...அவளின் கலாச்சாரம் ...
அன்னியனுக்கிங்கே என்ன வேலை?...
வடக்கே ஒருவர் பேச ...
தெற்கே ஒருவர் கூவ ...
கிழக்கே ஒருவர் கேவ ...
மேற்கே ஒருவர் மாய ...
என்ன கேலிக்கூத்திது ?...
யார்தந்த உரிமையிது ?..
எந்தமத உரிமையை ...
எந்தமதம் தட்டிப்பறிப்பது ?...
எந்த மனிதனின் உரிமையை ..
எந்த மனிதன் எட்டித்தடுப்பது ?.
யாரது ராஜா ?..எட்டுத்திக்கும் கொடிபறக்க ....
யாருக்கேணும் தூக்கட்டும் கூஜா !...

முழு உடை தரித்தல் இஸ்லாமியப் பண்பாடு !...
அதுவே எங்கள் வாழ்வியல் கோட்பாடு ....
யார் தடுப்பார் ?..எவர் தடுப்பார் ?...
எவரெங்கள் அதிகாரம் கையிலெடுப்பார் ?...
கல்வி கற்போம் முக்காடும் இழக்கமாட்டோம் ...
முழு நிலவாய் ...பெட்டகமாய் ..மூடின மொட்டாய் ....
முழுமூச்சோடு கல்வி கற்போம் !...கல்வி கற்போம் !...
கள்ளத்தனம் ஏதுமில்லை எங்களிடம் காழ்ப்புணர்வு கொள்ளாதீர் !...
.J Banu Haroon

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails