Saturday, April 28, 2012

முஸ்லிம் சகோதரர்கள் பெரிய பணிகளில் அதிக அளவில் இல்லை !

 முஸ்லிம் சகோதரர்கள் பெரிய பணிகளில் அதிக அளவில் இல்லை என்பதை பல ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். என் முஸ்லிம் நண்பர்களிடம் வெதும்பி இருக்கிறேன். அவர்களிடம் உரையாடியதில் இரண்டு/மூன்று காரணங்கள் முக்கியமானதாகத் தெரிகிறது: ஒன்று, பதிவில் சொல்லியபடி, கல்வி என்றால் மதரசாவுக்கு அனுப்பினால், மேல் படிப்புக்கு எவ்வணம் பதிய முடியும்? இரண்டு: குடும்பத்தின் அளவு பெரியதாக இருப்பதால், அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பாமல், ஒன்றிரண்டு பேரை மட்டும் அனுப்புவது; அவர்களையும் ஐந்து, எட்டு, அதிகப்படி பத்தாவதுடன் நிறுத்திவிடுவது; பெண்களை பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பது. வேறு பிரிவுகளில் அதிகம் பேர் மேல்படிப்[பு படிக்கிறார்கள் என்றால் அதில் பெண்கள் இருபது-முப்பது சதவீதம் உள்ளனர்; முஸ்லீம்களில் பெண்கள் கல்வி மீது ஏற்பு இல்லை. (ஆந்திர பிரதேசத்தில், ஒவ்வொரு பொறி இயல் பிரிவு வகுப்பிலும் மூன்றில் ஒன்று பெண்களுக்கு ஒதுக்கீடு உண்டு; என் புதல்வி படித்த வகுப்பில் பதினைந்து பெண்களில் ஒருவரே முஸ்லீம்.) முஸ்லீம்கள் பெரும் அளவில் மேல் படிப்பில், உயர் பதவிகளில் வர வேண்டும் என்றால் அடிப்படை கண்ணோட்டம் மாற வேண்டும்.

இன்னொன்று: சவுதி, காதர் போன்ற செல்வம் மிக்க நாடுகள் இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லீம்கள், வக்ப் நிறுவன் நடத்தும் கல்வி நிலையங்களுக்கு, கல்லூரிகளுக்கு நிதி உதவி செய்யலாம். புனித சேவியர், புனித ஜோசப் முதலிய கல்வி நிறுவங்கள் வெளி நாடு நிதிகளிலேயே வளர முடிந்தது.

கடைசியாக ஒரு விண்ணப்பம்: முஸ்லீம் மாணவர்கள் அதிக அளவில் இல்லாததற்கு அடிப்படை காரணங்கள் இவை என்று கவனித்து சீர் செய்ய சமுதாயத்தின் பெரியவர்கள் முன்னிட வேண்டும். இரட்டை கோபுரம், செப்டம்பர் இருபத்தாறு மும்பை தாக்குதல் என்று திசை திருப்பக் கூடாது.

thumbi
 தம்பி அவர்கள் எழுதிய கருத்துரை
அறிவுப் பெட்டகம் குரானை பெற்ற நாம்

1 comment:

Anonymous said...

To be frank, I very much appreciated this article. Muslim brothers need to educate and need to part a good developments in our country.

LinkWithin

Related Posts with Thumbnails