Saturday, June 7, 2014

நீயோ பாவமன்னிப்பால் எங்களை ரட்சித்தாய் !






இறைவா...
நாங்கள்
பாவங்களால்
உன்னை
அலட்சியம் செய்தோம்
நீயோ
பாவமன்னிப்பால்
எங்களை ரட்சித்தாய் !
நாங்கள் தவறுகள் செய்தோம்
நீ
மன்னித்துக் கொண்டே இருந்தாய் !

உன் மன்னிப்பும்
ரட்சிப்பும்
இல்லையென்றால்
மனிதகுலம்
பிறந்த வேகத்திலேயே
மண்மூடிப் போயிருக்கும் !

ஆனாலும் ...
பாவத்தின் தண்டனையாய்
எமக்குக் கிடைத்தது
உன் அருளேயன்றி
வேறென்ன ?

அகிலத்தின் அருட்கொடையாய்
அண்ணல் முஹம்மதை
அனுப்பி வைத்த
இறைவா ...
நீ
அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன் !
Abu Haashima Vaver

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails