Friday, June 27, 2014

பொருள் ஈட்ட பயணம் செல்கின்றோம்..



ஏன் இத்தனை தடவை போகிறீர்கள் என்று யாரும் கேட்பதில்லை

இறை நேசம் கொண்டு புனித இடமாம் மக்காவுக்கு ,மதினாவுக்கு ஹஜ் அல்லது உம்ரா பல் முறை செய்யும் போது ஏன் இத்தனை தடவை போகிறீர்கள் என்றுசிலர் கேட்கிறார்கள் . அவர்கள் அதன் அருமையை அறிவதில்லை .இறைவன் வசதி தந்துள்ளான் அவர்கள் நன்மையை நாடி மற்றும் ஆத்ம திருப்திக்கு செல்கின்றார்கள் .அவர்களுக்கு இறைவன் அந்த பாக்கியத்தை தந்துள்ளான்
தனிப்பட்ட நல்ல காரியங்களை நல்ல மனதோடு பாருங்கள் .
இடாதவர் இடுபவரையும் கெடுக்கும் நிலை வேண்டாம்

போகிறவர்கள் அனைத்து நல்ல செயல்களும் இங்கு செய்யத்தான் செய்கின்றனர் (தர்மம் ,தொழுகை ஜகாத்து போன்ற நல்ல காரியங்கள் )

ஒரு முறையான ஹஜ் கடமையும் நிறைவேற்றி விடுகின்றனர் .

“இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!” ( அல்குர்ஆன் 2:183)
“ரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகராகும்’ என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
(புகாரி, முஸ்லிம்)
---------------------------------------------

எனது அண்ணன் மர்ஹூம் வக்கீல் சயீது ஐந்து முறை ஹஜ் செய்தார் .
நான் இரண்டாயிரத்தில் ஒரே முறை ,ஆனால் அடுத்து செல்லவும் மிகவும் ஆசை
.---------------------------------------------------------
அந்த புனித தலத்திற்குச் செல்லும் வரை நானும் அப்படித்தான் சொலிக்கொண்டிருந்தேன்.
ஆனால் ஒருமுறை சென்று வந்த பிறகுதான் அதன் ஆத்மதிருப்தியும் அகத்தெளிவும் மீண்டும் மீண்டும் செல்லத் தூண்டுகிறது


2014-ரமலான் உம்ராவுக்காக இன்ஷா அல்லாஹ் ஞாயிறன்று கிளம்புகிறேன்.நண்பர்கள் எமது ரமலான் உம்ராவை இறைவன் பொருந்திக்கொள்ளப் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்....!!

-நிஷா மன்சூர்
( நிஷா மன்சூர் இந்த ஆண்டு ரமளானில் உம்ரா செல்கின்றார்கள் .அவர்களுக்கு நமது வாழ்த்துகள் .அவர் நமக்காக துவா செய்வார் அவருக்காக நாம் துவா செய்வோம் ,)
-----------------------------------

ஒரு குழந்தையை பிரிந்து பொருள் ஈட்ட செல்லும் தந்தை ,மனதில் ஏக்கமும், அழுகையும், சொல்லெனா துயரமும் ஒன்று கலந்த கலவையின் மன நிலையில் உள்ள தந்தையை போல் , தற்போது நான் உள்ளேன். மக்காவின் புனிதப் பள்ளிவாசல் எத்ரில் நான் வேலை செய்த ஹோட்டல் இருந்த்த தால் தினமும் காபாவை காணும் பாக்கியத்தை இறைவன் எனக்கு இரைண்டரை வருடம் தந்தான். அல்ஹம்துலில்லாஹ்..- Ashraf Ali Nidur

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails