Thursday, December 1, 2016

ஏகனே இறையோனே ....!

பெருமையுடன் தலைக்கனம் பிடித்தவருக்கு
===== சிறுமையே வருமென்பதை கிஞ்சித்தும்
அறியாமல் தனக்கெல்லாம் தெரியுமென
===== தற்பெருமையுடன் இப்புவிதனை மிதித்தே
நடந்திடும் மாந்தர்க்கு புத்திபுகட்டிடுவாயே
===== எல்லாமிருந்தும் தேவைகளின்றி நிறைவாய்
நித்தமும் அடியார்க்கெல்லாம் அருள்பொழியும்
===== பெருமைக்குரியவனே ஏகனே இறையோனே
படைப்பினங்கள் பலவற்றையும் மாண்புடனே
===== படைத்து இவ்வுலகினில் படைத்தோனை
தப்பாது வணங்கிடவே பணிப்பித்தோனே
===== படைப்பினில் சிறப்பாய் மாந்தரை
படைத்து தீதும்நன்றும் பகுத்தறிந்தே
===== இம்மைதனில் இயல்பாய் வாழ்ந்துகாட்டி

மறுமையினில் உன்னிழலெனும் சுவர்கம்சேர்ந்திட
===== படைதருழ்ந்தோனே ஏகனே இறையோனே
ஓரொழுங்கினில் அண்டசராசரம் அனைத்தையும்
==== ஆரவாரமின்றி ஆண்டவனுந்தன் கட்டளைப்படி
தத்தமது பாதைதனில் அண்டப்பால்வெளிதனிலே
==== சுழன்றுசுற்றியே உன்மைகிமை உணர்த்திடுதே
எல்லாம்வல்ல ஆற்றலுடனே யுகமிகமாய்
===== ஈருலகையும் உன்னருளாலே ஆட்டிபடைப்போனே
அடியார்நடந்திடும் பாதைகள்யாவும் உன்னடிசேர்ந்திட
===== ஒழுங்குபடுத்திடுவாயே ஏகனே இறையோனே
ராஜா வாவுபிள்ளை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails