Thursday, December 29, 2016

படைத்தவன் ஒருவனுண்டு ....!

ஒன்றுண்டு ஒன்றே ஒன்றுண்டு
ஒவ்வொன்றிலும் இவ்வுலகில்
இணையாய் இணையாய்
படைத்தவன் ஒருவனுண்டு
ஒன்றுண்டு ஒன்றே ஒன்றுண்டு
ஈரேழு உலகைப் படைத்தது
பாரபட்சமின்றி பரிபாலிக்கும்
படைத்தவன் ஒருவனுண்டு
ஒன்றுண்டு ஒன்றே ஒன்றுண்டு

பாரினில் பராபரமாய்
தன்னிகரில்லா தானித்தோனாய்
படைத்தவன் ஒருவனுண்டு
ஒன்றுண்டு ஒன்றே ஒன்றுண்டு
முக்காலமும் அறிந்தவன்
பரம்பொருளாய் பரிணமித்து
படைத்தவன் ஒருவனுண்டு
ஒன்றுண்டு ஒன்றே ஒன்றுண்டு
சுழன்றுநிற்கும் அகிலமும்
அகிலத்தில் சகலமும்
படைத்தவன் ஒருவனுண்டு
ஒன்றுண்டு ஒன்றே ஒன்றுண்டு
தொடக்கம் இல்லாமல்
முடிவும் இல்லாமல்
படைத்தவன் ஒருவனுண்டு
ஒன்றுண்டு ஒன்றே ஒன்றுண்டு
துணையும் இணையுமின்றி
ஊணும் உறக்கமுமின்றி
படைத்தவன் ஒருவனுண்டு
ஒன்றுண்டு ஒன்றே ஒன்றுண்டு
மனிதனுக்காக அனைத்தையும்படைத்து
படைப்பினங்களை தனைவணங்கவே
படைத்தவன் ஒருவனுண்டு

ராஜா வாவுபிள்ளை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails