Friday, May 18, 2012

பிறப்பும் இறப்பும் இணைந்த எனக்கு எத்தனை கொண்டாட்டங்கள் !

பிறப்பும் இறப்பும்  இணைந்த எனக்கு எத்தனை கொண்டாட்டங்கள் !
  பிறந்து விட்டேன். நான் பிறந்ததற்காக பல வித மிட்டாய்கள் கொடுத்து மகிழ்ந்தார்கள் பெற்றோர்கள். அவர்கள் இல்லை நான் இருக்கிறேன். அவர்கள் அறிவார்கள்  நானும்  போய் விடுவேனென்று ஆனால் அந்த சிந்தனை அவர்களுக்கு அப்பொழுது வந்திருக்காது.
வருடா வருடம் சில ஆண்டுகள் அவர்கள் ஆசைப்பட்டு என் 'பிறந்த நாள்' கொண்டாடினார்கள். அதன்பிறகு நான் வளர்ந்தபின் 'முதிர்சியடைந்தபின்'  என் 'பிறந்த நாள்' நானே கொண்டாடுகின்றேன்.


பின்பு   பல கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. தம ஆண்  உறுப்பில்  ஒட்டிக்கொண்டுள்ள   ஒருதோலை  நீக்குவதற்கு( Circumcision is the removal of the foreskin, which is the skin that covers the tip of the penis.( ' சுன்னத்' என்ற பெயரில் கொண்டாட்டம் தேவையா )ஒரு விருந்தோடு கொண்டாட்டம் ,

என் சகோதரி  பூப்பெய்தினால் ஒரு அழைப்பு பத்திரிகை அடித்து ஒரு  விருந்து
பயணம் வந்தால் ,பயணம் போனால் இப்படியே கொண்டாட்டங்கள்... தொடரும் கொண்டாட்டங்கள் ...
இறைவா என்ன  செய்வேன்! பணத்திற்கு எங்கு போவேன்!
உயிர் போனபின் மூன்று , ஏழு ,நாற்பது பின்பு வருடா வருடம் நினைவு நாள் கொண்டாட்டம்.
மற்றவருக்கு கொண்டாட்டம் எனக்கு அல்லது என்   குடும்பத்திற்கு திண்டாட்டம் .

"பிறந்த நாள் கொண்டாட்டம்" "காதலர் தினம் "    "ஹேப்பி ஆசீர்வதிக்கப்பட்டவர் பிறந்த நாள்" அல்லது இந்த வகையான மற்ற பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அனைத்தும்  மேற்கு நாடுகளால் திணிக்கப்பட்டவை

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருடைய இறப்புக்காகவும், பிறப்புக்காகவும் சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் ஏற்படுவதில்லை. ஆயினும், அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் ஒரு சான்றாகும். அவ்விரண்டையும் நீங்கள் காண நேர்ந்தால் (இறைவனைத்) தொழுங்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும். எவருடைய இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் அவற்றிற்கு கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் காணும்போது அல்லாஹ்வை நினைவு கூருங்கள்.
என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

1 comment:

VANJOOR said...

THANKS FOR A REMARKABLE ARTICLE .

LinkWithin

Related Posts with Thumbnails