Wednesday, December 10, 2014

காதெலென்பது யாதெனில்…- யாசர் அரபாத்

என் பக்கம்'s photo.
சண்டையெனும் போது
மல்லுக்கு நிற்பாய்;
சமாதானத்திற்கு நீயேதான்
முன்னுக்கு நிற்பாய்;

கோபமாக இருந்தாலும்
தோசை சுடுவாய்;
இன்னொன்று வேண்டுமாயென
பேச்சைத் துவங்குவாய்;

பொறையேறும் போது
தண்ணீயோடு ஓடி வருவாய்;
கோபத்தோடு தலையில் நாலுபோட்டு
நானிருக்கும்போது எவர்
நினைக்கிறாரென வம்பிழுப்பாய்;

உண்மையைச் சொன்னா கோபம்
வருதாயென குத்திகாட்டுவாய்;
பதிலுக்கு பதில் பேசினால்
நீங்க மட்டுந்தான் சரி..
போதுமாயென வாயடைப்பாய்;

புரியாத காதலில் வகுத்தெடுப்பாய்;
புன்னகையால் அன்பை பெருக்கெடுப்பாய்;
புண்பட்டத் தருணத்தைக் கழித்தெடுப்பாய்;
புத்தி வேண்டுமென நக்கலோடு கூட்டி முடிப்பாய்!!

Yasar Arafat

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails