Friday, June 19, 2015

'அன்பான நற்சேவை புரிவோருக்கு நல்லருள் விளையட்டும்'

சென்னையில் தி.நகர் ஜி.என்.செட்டி சாலை ரோகினிதங்கும்விடுதி எதிரில் உள்ள பிரபல அசைவ ரெஸ்டாரண்ட் விருதுநகர் உணவகத்தில் ரமலான்மாதத்தின் எல்லா நாட்களிலிலும் ஷஹர் உணவு இலவசமாக வருவோருக்கெல்லாம் விருந்தோம்பலுடன் வழங்கப்படுகிறது.
பிரபலமிக்க உஸ்மான்சாலை,ரங்கநாதன்தெருவில் பணிபுரியும் இஸ்லாமியச கோதரர்கள்மட்டுமின்றி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கே வழங்கப்படும் ஷஹர் உணவை பலரும் எந்தசங்கோஜமுமின்றி சாப்பிட்டு செல்வது குறிப்பிடத்தக்கது.இந்த உணவகத்தின் உரிமையாளர் ரமலான்மாதத்தில் செய்யும் இந்த சேவைக்கென தங்களின் லாபத்தில் கணிசமாக ஒருதொகையை தனியே பிரித்து எடுத்துவிடுவாராம்.

ஷஹர் நேரத்தில் விடிகாலை 3:00 மணியிலிருந்து இந்தகடையின்உரிமையாளரே கண்விழித்து தன் சக ஊழியர்களுடன் 'வாங்க சாப்பிடுங்கன்னு' வருவோரையெல்லாம் வாய்நிறைய அழைத்து உணவு பரிமாறியதை கடந்த வருட ரமளானில் கண்டு வியந்திருக்கிறேன்.
சென்னையில் தி,நகருக்கு வேலைநிமித்தம் வருவோர் யாவரையும் இங்கே வந்து ஷஹருக்கு சாப்பிட வர சொல்லுங்கள்ன்னு மனமுவந்து சொல்வார்,!

அல்லாஹுவின் பொருத்தம் நாடி இந்த 'அன்பான நற்சேவை புரிவோருக்கு நல்லருள் விளையட்டும்' என்று  நாமும் பிரார்த்திப்போம் ..! (ஆமீன்)
தகவல் தந்தவர்  Gajini Muhd

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails