Friday, June 19, 2015

எங்களுக்கு தூய ரமலானை தந்தோனே !...- ஜே .பானு ஹாருன் .

எங்கள் இறைவனே !....
>>>>>>>>>>>>>>>>>>>

எங்களுக்கு தூய ரமலானை தந்தோனே !...
பசித்து நிற்போரின் பசியறிய செய்தோனே ..
துன்பித்து நிற்போரின் வலியறிய செய்தோனே !...
காயம் பட்டோரின் ரணமரிய செய்தோனே !...

நேர்மையான வழியை காட்டியோனே !...
கடமைகளின் மேன்மையை உணர்த்தியோனே !...
கட்டுப்பாடுகளின் தரத்தை காட்டியோனே !...
காலம் தவறாமையை உணர்த்தியோனே !...

அதிகம் தொழுவதற்கு 'தராவிஹ் 'தந்தோனே !...
பகிர்ந்தளிக்கும் 'ஜக்காத் 'கடமையாக்கியோனே !...
அன்பான 'திக்ருகளை 'அழகாய் ஏற்போனே !...
எங்களின் 'துவா 'க்களை என்றும் ஏற்றுக்கொள்வோனே !...

புண்ணியம் மட்டும் சேர்க்கும் வாழ்வும் ...
கண்ணியம் மட்டும் காக்கும் நாவும் ...
கொடுக்க மட்டும் உதவும் கரமும் ...
தூய்மையான மனமும் ,உடலும் ...
நிறைவான உறவும் ,உயிர்ப்பும் ...
மறைவானவற்றை அறிதல் சுகமும் ...
எப்போதும்போல் தந்திடு என் இறைவா !....

- ஜே .பானு ஹாருன் .
J Banu Haroon

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails