Monday, June 1, 2015

நீயே .... எல்லாம் தந்தாய் ....!

நீயே .... உயிர் தந்தாய்
இவ்வுலகில் வாழ்ந்திட
நீயே .... உடல் தந்தாய்
உழைத்து உண்டிட

நீயே .... மனம் தந்தாய்
மகிழ்ச்சியாய் இருக்க
நீயே .... அறிவு தந்தாய்
தீதும் நன்றும் பிரித்தறிய

நீயே .... பார்வை தந்தாய்
பார்ப்பதை பழகிக்கொள்ள
நீயே .... கேள்வி தந்தாய்
கேட்டதை பேசிப்பழக

நீயே ... இணையை தந்தாய்
வம்சத்தை விருட்சமாக்கிட
நீயே .... குடும்பம் தந்தாய்
ஒற்றுமையை கடைபிடிக்க

நீயே .... மொழிகள் தந்தாய்
ஒருவரையொருவர் புரிந்துகொள்ள
நீயே .... நட்புகளை தந்தாய்
நாணயமாய் பாராட்டிட

நீயே .... செல்வம் தந்தாய்
செலவுபோக தர்மம்செய்ய
நீயே .... கல்வி தந்தாய்
அதற்குத்தக நிற்பதற்கு

நீயே .... உலகம் தந்தாய்
யாவரும் கேளிராய் வாழ
நீயே .... இயற்கை தந்தாய்
பார்த்துப் படித்திட

நீயே .... மரணம் தந்தாய்
உன்னிடமே திரும்புதற்கு
நீயே .... மறுமை தருவாய்
கேள்விகணக்கு கேட்பதற்கு

நீயே .... மாற்றம் தந்தாய்
மாறாதது நீயே என்றறிய
நீயே .... மார்க்கம் தந்தாய்
சகோதரத்துவம் பேணுதற்கு

நீயே .... எல்லாம் தந்தாய்
என்றென்றும் உனையே வணங்குதற்கு
நீயே .... எல்லாம் வல்லோனே
ஏகனே இறையோனே
ராஜா வாவுபிள்ளை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails