Friday, August 28, 2015

உறவினர் .- ஜே .பானு ஹாருன் .

அடுத்தவர் குடும்பத்தில் தேவையில்லாமல் உள் நுழைந்து அட்வைஸ் கொடுத்து களப்பணி ஆற்றாமல் இருப்பவரே மிக நல்ல உறவினர் .

எத்தனை நெருக்க உறவானாலும் ,பிரிக்க முடியா நட்பானாலும் படுக்கையறைக்கு வெளியே விட்டுவிடவும் .காலணிகளை கழற்றி வைப்பதைப்போல ...

நல்ல உறவினர்களை நட்புடன் அணுகவும் .அடையாளம் காணப்பட்ட அவலட்சண உறவுகளை அச்சத்துடன் அணுகவும் .

விட்டு விடுவதும் ,விடாமல் பிடித்து வைத்துக் கொள்வதும் உறவுகளை சமாளித்துக் கொண்டு போவோரின் திறமையில் இருக்கிறது .

உறவுகள் இல்லாமல் வாழ்க்கையும் இல்லை .வாழ்க்கை இழந்தவருக்கு உறவுகளும் இல்லை .

சேர்த்து வைத்த செல்வத்துக்கு சொந்தம் கொண்டாட வருபவர்களெல்லாம் அபலைகளின் சோற்றுக்கு வழி சொல்ல வருவதில்லை .

வீசியெறியப்பட்ட பருக்கைகளுக்கு கூடிக்கொள்ளும் காக்கைகள் கூட்டம் ...
தீர்ந்தபின் திரும்பியும் பார்ப்பதில்லை ..திண்ணைகளும் காலியாகும் .
- ஜே .பானு ஹாருன் .J Banu Haroon

1 comment:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

.
உறவினர்கள் பற்றிய நல்லதொரு சிந்தனை!
.

LinkWithin

Related Posts with Thumbnails