Wednesday, August 12, 2015

அப்துல் கலாம் அவர்களின் நினைவாக கவிதாஞ்சலியின் மலர்ந்த சில கண்ணீர் பூக்கள் !Raheemullah Mohamed Vavar

துண்டு காகிதம் இருந்தால்
காகித கப்பல் செய்யலாம்
படிக்கிற செய்தித் தாளில்
வெடிக்கிற ஏவுகணை
செய்ய முடியுமா
செய்து முடித்தாரே கலாம் !

கோவில் படிகளில்
மல்லாந்து கிடந்தால்
பறக்கிற விமானம்
கண்ணுக்கு தெரியலாம்
கண்டம் தாவி
அண்டம் அழிக்கும்
ஏவுகணை தெரியுமா ?

பொக்ரான் இன்னமும் பாலைவனமா
ஆக்கம் தரும் அணுப் பூக்களின்
வாசம் தரும் மலர் சோலை அல்லவா அது !

இந்திய வரலாற்றில்
தலையில் கனமே
இல்லாத ஒருவர்
நாட்டின் தலைமகன் என்றானார் !

இருள் படர்ந்த இந்திய வானில்
ஏவப்பட்ட புதிய சூரியன் !

கலாம் என்றிருந்ததால்
காலம் என்றாகி விடுவதே
சரி என்று கருதியோ இன்று
காற்றினில் கரைந்தாரே
கண்ணீரில் நம் கண்களை நிறைத்தாரே !

அப்துல் கலாம் அவர்களின் நினைவாக, 9/8/15 அன்று தமிழ் சங்கம் உகாண்டா ஏற்பாடு செய்திருந்த ‘இந்தியக் கனவுகள்’ என்கிற கருத்தரங்கில் என் கவிதாஞ்சலியின் மலர்ந்த சில கண்ணீர் பூக்கள் ! 
Raheemullah Mohamed Vavar


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails