Wednesday, March 31, 2010

திருமணத்திற்குப் பின் துபாயில் செட்டிலாகிறார் சானியா!

பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர் சுகைப் மாலிக்கை திருமணம் செய்தபின் தாமும் சுகைபும் துபாயில் செட்டிலாவோம் என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி தமக்கும் சுகைப் மாலிக்கிற்கும் திருமணம் நடைபெற இருப்பதை செய்தியாளர்களிடம் சானியா மிர்சா செவ்வாய்க் கிழமை (30-03-2010) ஹைதராபாத்தில் அறிவித்தார். 2012ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தான் இந்தியாவுக்காக விளையாட உள்ளதாகவும் அவர் கூறினார்.

பாக்கிஸ்தான் செல்ல விசா பெறுவதற்காக டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் சென்று விசா பெற்று ஹைதராபாத் திரும்பிய சானியா மிர்சாவிடம் செய்தியாளர்கள் சுகைப் குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்தார். சுகைபுடன் கடந்த 7 ஆண்டுகளாக நட்பு உள்ளதாக அவர் கூறினார்.

திருமணத்திற்குப் பின் தாமும் சுகைபும் துபாயில் தங்க இருப்பதாகக் கூறிய சானியா, துபாயில் இருப்பது இந்தியாவில் இருப்பதைப் போன்ற மகிழ்ச்சியைத் தமக்குத் தரும் என்றும் அவர் கூறினார்.
 
நன்றி : http://www.inneram.com 
திருமணத்திற்குப் பின் துபாயில் செட்டிலாகிறார் சானியா!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails