Monday, November 3, 2014

அரபு நாடுகளின் அரியாசனங்களில் ஜனங்களை அமர வைக்கும் வரை-அபு ஹசீமா வாவர்

மாமனிதர்களால்
மண்ணே மணக்கிறது
மண்ணே சிறக்கிறது !

பெருமானார் விட்ட
மூச்சால்
மதினா
மணக்கிறது !

அவர்களின்
பேரப்பிள்ளை
ஹுசைனார் விட்ட
மூச்சால்
கர்பலா
சிவக்கிறது !


ஜனநாயகம் மலர
நபிகள்
நாயகமே
நாயகராக
இருந்ததால்
ஜனங்கள்
மன்னர்களாக
இருந்தார்கள் !

யஜீது
மன்னராக இருந்ததால்
மக்களெல்லாம்
மண்ணாக
இருந்தார்கள் !

மக்களின்
மனங்களே
அண்ணலாரின்
மாளிகைகளாக இருந்தன
யஜீதின்
மாளிகைக்கு
மக்களின் உடல்களே
அடிக்கற்களாக விழுந்தன !

மக்களின் நலனுக்காக
நபிகள் தொழுதார்கள்
யஜீதின் கொடுமைக்காக
மக்கள் அழுதார்கள் !

நாற்பது ஆண்டுகளே
நீடித்த
நபிகளார் கற்பித்த
மக்களாட்சித் தத்துவம்
முஆவியாவின்
மன்னராட்சி
மயக்கத்தில்
மறு பேச்சில்லாமல்
மாண்டு போனது !

உமையாக்களின்
ராஜ நாகங்கள்
கக்கிய
விஷ வீச்சுகளில்
ஹுசைனாரின்
தலை
தெறித்து விழுந்தது !
ஜனநாயகத்தின்
உரிமைக் குரல்
முறிந்து விழுந்தது !

ரத்தமும் சதையுமாய்
சிதைந்து கிடந்த
ஹுசைனாரின்
உடலை
உள்வாங்கிக் கொண்ட
கர்பலாவின்
கர்ப்ப வயிறு
பிரசவித்த
ஜனநாயகப் பிள்ளைகள்
உலகம் முழுக்க
வாழுகிறார்கள் !

வாழவேண்டிய
அரபு நாடுகளில் மட்டும்
ஜனநாயகத்தை
விதவைகளாக்கி
மன்னர்களே
ஆளுகிறார்கள் !

கர்பலாக்களின்
கருக்கலன்கள்
காய்ந்து போகவுமில்லை
கலைந்து போகவுமில்லை
அவை....
அரபு நாடுகளின்
அரியாசனங்களில்
ஜனங்களை
அமர வைக்கும் வரை
அணையப்போவதுமில்லை ...
இன்ஷா அல்லாஹ் !

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails