Wednesday, November 26, 2014

இறைத்தூதரைக் கடவுளாகவிடக் கூடாது.

சமீபத்தில் மறைந்த நவீன இலக்கிய மேதை
யு.ஆர்.அனந்தமூர்த்தி பேசுகிறார்:

-------------------------------------------
முஸ்லிம்கள்
தங்கள் இறைத்தூதரைக் கடவுள் எனப்
புரிந்துகொள்ளக் கூடாது என்னும் காரணத்துக்காக
இறைத்தூதரின் பெயரைச் சொன்னவுடன்
கடவுளின்
கருணை சொன்னவர்மேல் இருக்கட்டும் என்கிறார்கள்.
அது அற்புதம்.
ஏனென்றால், இறைத்தூதரைக்
கடவுளாகவிடக் கூடாது.
தங்கள் குருவைக் கடவுளாகவிடக் கூடாது என்னும்
இந்தப் பிடிவாதம் உள்ள வேறொரு மதம்
உலகத்தில் இல்லை.

காந்தியைப் பொறுத்த அளவிலும் இது உண்மை.
தான் வெறுமனே ஒரு மனிதன்
என்னும் புரிதலோடு இறுதிவரை அவர் வாழ்ந்தார்.
வெறும் மனிதனாக இருந்துகொண்டே
அவர் மகாத்மாவானார்.
மகாத்மா என்றவுடனே
அவர் வெறும் மனிதர்தான் என்பதை
மறந்துவிடக் கூடாது.

*
குறிப்பு:
பிரபல கண்ணட எழுத்தாளர் யு. ஆர். அனந்தமூர்த்தி,
2007ஆம் ஆண்டு ஜூலை மாதம்
கர்நாடகாவின் உடுப்பியிலுள்ள MGM கல்லூரியில்
காந்தி ஆய்வு மையத்தைத் தொடங்கிவைத்து
ஆற்றிய உரையின் தமிழாக்கம் இது.
மொழிபெயர்ப்பு- திரு நஞ்சுண்டான்.

*
நன்றி: காலச்சுவடு

தகவல் தந்த  Taj Deen அவர்களுக்கு நன்றி 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails