Friday, August 29, 2014

திறமை

நான் ...
எனது....
என்னால் மட்டுமே ...
என்பதெல்லாம்
கருவினை மனமுடையோரின்
கழிச்சொல் வேதாந்தம்

தலைக்கொருத்தனித்திறனை
தன்னுள்ளே கொண்டாலும்
வரைக்குள் வந்ததெல்லாம்
வாழ்க்கைத் தந்த வரமென்று
குறைக்கின்ற ஈனர்க்கு
உறைக்காமல் போனதேனோ .

உயிர்ப்புள்ளத் தலைக்கூடதின்
ஒவ்வொரு மாடத்திலும்
திறனென்னும் தீபச்சுடர்
ஒளிகூட்டி வழிகாட்டுமென்பதை
உயர் ஞான மதியுடையோர்
ஒருபோதும் மறுத்ததில்லை

விறகினைக் கரித்தாலும்
விளக்கினில் மிளிர்ந்தாலும்
நெருப்பென்பது ஒன்றுதானே
நிலைதானே வேறாகும்

அடுதலுக்காய் இட்ட தீ
ஆகார நல்லமுது படைக்கும்
அகல் தீண்டி இட்ட தீ
தொழும் ஆலய நற்ஜோதியாகும்

முன்னதைத் தொட்டாலும்
முரண் கொண்டு நீ
பின்னதைத் தொட்டாலும்
உன் சதைக் கரித்திடாத
உயர் தீ ஏதுமிருப்பின்

கண்டெடுத்து நீ காட்டு
உன் கையளவே இவ்வையமென
மெய்யாக நான் ஏற்பேன் .்
. .....................................
தமிழ்பிரியன் நசீர் ...தமிழ் பிரியன் நசீர்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails