Saturday, August 16, 2014

"எப்படி உன்னால் கவலையின்றி உறங்க முடிகிறது "


பொழுது மறைந்து
கூடுகளில் வந்து கூடும்
பறவைகளுக்கு
நாளைய கவலைகள்
ஏதுமில்லை !

"எப்படி உன்னால் கவலையின்றி
உறங்க முடிகிறது " என்று
பறவை ஒன்றிடம் கேட்டேன் !
" நாளைய உணவை
சேமித்து வைக்க
எங்களிடம்
கிட்டங்கிகள் இல்லை
அதனால் ...
கவலையும் இல்லை "
என்றது பறவை !

 " காலையில் இரை தேடிச் செல்லும் பறவைகள்
மாலை நேரத்தில் வயிறு நிறைந்து திரும்புவதை நீங்கள் காணவில்லையா ?"
இது இறைவன் கேட்கும் கேள்வி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails