அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! ( அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! )
ஒரு மாதம் அவகாசம் இருக்கிறது அதற்குள் பணத்தை பேங்கில் திருப்பி செலுத்தி விடலாம் என்ற தைரியத்தில் தேவை - தேவையில்லை என்ற கண்ணோட்டம் இல்லாமல் பொருள்களை வாங்கி விடுவோம், ஒரு மாதத்திற்குள் பணத்தை பேங்கில் செலுத்தமுடியாமல் வேறு எதுவும் நமக்கு பிரச்சனைகள் வந்து விட்டால் (வராது என்று அடித்து நம்மால் சொல்ல முடியாது அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று சொல்லத் தெரியா விஞ்ஞான உலகின் அதிசய மனிதர்கள் நாம்) என்ன ஆகும் வட்டி பின் அதன் குட்டி அதன் பேரப்பிள்ளைகள் என்று போய்க்கொண்டே இருக்கும் எதுவரை வக்கீல் நோட்டீஸ் வரை. அரபுநாடுகளில் பரவாயில்லை வக்கீல் நோட்டீஸ் வரை போய் இதற்கு பதில் இல்லை என்றால் சிறையில் அடைத்து விடுகிறார்கள்.
ஆனால் நமது நாட்டிலோ ஒவ்வொரு நிறுவனங்களும் ரவுடிகளை தயார் செய்து வைத்திருக்கிறார்கள். வீடு புகுந்து ரகளை செய்வதற்கென்று, இவர்களின் வேலை மிரட்டல் பின் தர்ம அடிதான். சுயமரியாதை இழந்து ஒரு கடன் அட்டை தேவைதானா கால் வயிறே கஞ்சி ஆனாலும் கௌரவமாக வாழக்கூடாதா?????
அமீரகத்தில் பணிபுரியும் சகோதரர் கடன் அட்டை மூலம் கடனாளியாகி உள்ளார். நீ வாங்கிய கடன் எதற்காக என்று கேட்டேன். என் மனைவியின் தொல்லை தாங்க முடியவில்லை ஊர் வரும்பொழுது நகையோடுதான் வரவேண்டும் என்று சொன்னதால் என்னிடம் பணம் இல்லை அதனால் கடன் அட்டையில் எவ்வளவு எடுக்கலாம் என்ற அனுமதி இருக்கிறதோ அதுவரை எடுத்துவிட்டேன். (இவர் வாங்கிய கடன் அவசியத்திற்கு இல்லை) இப்பொழுது திருப்பி அடைப்பதற்கு (சரியான நேரத்தில் சம்பளம் கிடைக்காததால்) சிரமமாக உள்ளது என்று சொன்னார்.
இவர் சொன்ன அடுத்த வார்த்தைதான் ஆச்சரியத்திற்கு உரியதாய் இருந்தது. (யாரையும் ஏமாற்றக்கூடாது என்று நாம் இருப்பதால்) நான் ஊரில் போய் நிரந்தரமாக தங்கலாம் என்று இருக்கிறேன். இந்த கடனையும் அடைக்கமுடியவில்லை அப்படி போனால் போகும் வழியில் எனக்கு எதுவும் பிரச்சனை வருமா? என்று ஆலோசனை கேட்கிறார். போகும் வழியில் பிரச்சனை இல்லாமல் போய் விடுவாய் ஆனால் மஹ்ஷர் பெருவெளியில் இந்த கடனுக்கான கேள்வி உண்டு இதற்காக வல்ல அல்லாஹ் தண்டனை தருவான் என்று சொன்னேன்.
இன்னொரு சகோதரரரிடம் இதுபற்றி சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுது கடன் அட்டை பணத்தை நாம் திருப்பி செலுத்த முடியாமல் போனால் வங்கிக்கு எதுவும் நஷ்டம் கிடையாது. நாம் கடன் அட்டை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவுடன் நம் பெயரில் இன்ஷூர் செய்யப்படும். நாம் திருப்பி செலுத்தாவிட்டால் வங்கிக்கு நஷ்டம் கிடையாது. வங்கியை நடத்துபவர்கள் ஏமாளியா? என்ன? இன்ஷூரன்ஸ் கம்பெனியில் வங்கிகள் பணத்தை பெற்றுக்கொள்ளும் என்று சொன்னார். வங்கிகளும், இறை நம்பிக்கை இல்லாதவர்களும் எப்படியோ போகட்டும். ஒரு நல்ல மூமின் (இறை நம்பிக்கையாளன்) வங்கியோ, மனிதர்களோ யாரையும் ஏமாற்றலாமா?
இந்த சகோதரர் நான் கடன் அட்டை உபயோகப்படுத்துகிறேன் சரியான நேரத்தில் பணத்தை திருப்பி செலுத்திக்கொண்டு இருக்கிறேன் என்று சொன்னார் எவ்வளவு காலம் சரியாக செலுத்துவீர்கள். சம்பளம் தாமதமானால் இல்லை ஊரில் உள்ள குடும்பத்திற்கு அதிகமான பணத்தேவைகள் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்கும்பொழுது எனக்கு ஏற்படவில்லை ஆனால் எதையும் நிச்சயம் சொல்ல முடியாது என்று சொல்கிறார். சரியாக செலுத்த முடியாமலும் போகலாம் என்பது தெரிகிறது... சமாளிக்கிறார்....
02.10.2010 கல்ப் நியூஸ் முதல் பக்க செய்தி : High price of Credit card use - UAE consumers lose millions every year (கடன் அட்டை பயன்படுத்துபவர்கள் அதிக விலை கொடுக்கிறார்கள் - அமீரகத்தின் கார்டுதாரர்கள் லட்சக்கணக்கான பணத்தை இழந்து நஷ்டப்படுகிறார்கள் என்று தெரிவிக்கிறது) வங்கி உங்களுக்கு அனுப்பும் மாதந்திர பில் விவர பட்டியலை நன்கு படித்து பார்த்து உங்களுக்கு எதுவும் தண்டம் போட்டிருக்கிறார்களா? என்று மாதா மாதம் கவனமாக பார்க்கவும் என்றும் அப்படி பார்க்கத்தவறினால் உங்களின் மதிப்பு மிக்க பணத்தை இழக்க நேரிடும் என்ற செய்தியை போட்டிருக்கிறார்கள். கடன் அட்டை பயன்படுத்துபவர்களிடம் இதை தெரிவித்தால் பார்த்துக்கொள்வோம் என்ற அலட்சிய பதில்தான் வருகிறது.
கடன் அட்டை செய்திகளை இத்துடன் முடித்துக்கொண்டு இப்பொழுது தாயகத்திலிருந்து வளைகுடாவுக்கு வந்துள்ள சகோதரர்கள் வாங்கும் கடன்களை ஊரிலிருந்தே ஆரம்பிப்போம். ஊரில் தொழில் செய்ய விருப்பப்பட்டு பணம் இல்லாமல் உறவுக்காரர்களிடம் உதவி கேட்கிறார் கைவிரித்து விட்டார்கள். உள் நாட்டில் தொழில் வைக்க வழியில்லாமல் வெளிநாட்டிற்கு சென்று சம்பாரிக்கலாம் என்ற எண்ணத்தில் உதவி கேட்கும்பொழுது ஊரில் தொழில் வைக்க பணம் கொடுக்க மறுத்தவர்கள் பணமாகவோ, நகையாகவோ ( நகையை நாம் அல்லது அவர்கள் பேங்கில் அடகு வைத்து பணம் வாங்க வேண்டும் ) தருவதற்கு முன் வருகிறார்கள் - இதற்கு என்ன காரணம் வெளிநாடு சென்று விட்டால் நாம் கொடுத்த கடன் உடன் திரும்ப கிடைத்து விடும். ஊரில் தொழில வைக்க கொடுத்தால் திரும்ப கிடைப்பது கடினம் என்பதுதான்.

இன்ஷாஅல்லாஹ் வளரும்..
-- Alaudeen.S,
Source :http://adirainirubar.blogspot.
No comments:
Post a Comment