Tuesday, April 20, 2010

இறையறியாமல் இணைவைத்தலிருந்து தப்பமுடியாது…


கேள்வி: இணைவைத்தல் (ஷிர்க்)என்றால் என்ன…?

பதில்: இணைவைத்தல் என்றால் அல்லாஹ்வை ஒன்று இரண்டு மூன்று நான்கு எனப் பிரிக்கப்படுவது. அடுத்து அல்லாஹ் அதுபோலத்தான் இதுமாதிரித்தான் என்று சொல்வதும் இணைதான் ஷிர்க்தான். விளங்குவதற்க்காக சில உதாரணங்களை சொல்லவேண்டிய சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் அது அதுவல்ல. அதை தெரிந்துக் கொண்டு சொல்லவேண்டியது. அப்படிச் சொல்வது ஷிர்க்.
படிப்பிப்பதற்காக சில உதாரணங்களை காட்டினால்தான் அது தெரியும். இல்லாவிட்டால் தெரியாது.
பூரணமாக இருக்கிறான் அல்லாஹ் என்பதை விட்டுவிட்டு தனித்தனியாக இருக்கிறான் என்று சொல்லிவிட்டால் அது ஷிர்க்.
அல்லாஹ் எங்கும் இருக்கிறான்(என்று) இதை எல்லோரும் சொல்வதுதான். எல்லோரும் (இறைவன் எங்கும் இருக்கிறான் என்பதை)ஒப்புக் கொள்கிறார்கள்.
எங்கும் இருக்கிறான் என்றால் எப்படி இருக்கிறான்…?
எங்கும் பரிப்பூரணமாய் பின்னிப் பிணைந்து மாற்றமில்லாமல் பிரிக்க முடியாது இருக்கிறதுதான் ஹக் (இறைவன்).
தனியாக ஒரு மனிதனைப் பார்த்து கடவுளென இறைவனெனச் சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் அது ஷிர்க். அதை முஷ்ரிக்கீன்கள் என்று சொல்வது.
‘இன்ன ஷிர்கானில் அலீம்’ -ஷிர்க்காவது மிகப்பெரியப் பாவம்.அதுக்கு எந்த வகையான தவ்பாவும் இல்லை. அல்லாஹ் இரண்டு என்று சொல்லிவிட்டால் ஷிர்க்காயிற்று.
அல்லாஹ் ஒருவன்தான் என்றால் ஷிர்க் போய்விட்டது.
அதற்கு மேலாக சென்று அது எப்படியென பேசுவது தவ்ஹிதுடைய இல்மு (ஞானம்) அதைப்பேசும் நேரத்தில் மித்தம் கவனமாக பேசவேண்டும்…!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails