Wednesday, April 7, 2010

அன்னையே அமுதம் தா


அவசர உலகமென்றபோதும்
அன்னை என்றென்றும் அன்னையே!

அழகு குறைந்து விடும் என்று
அழுகிற குழந்தைக்கு அமுதூட்ட
மறுக்கலாமா

ஆபீஸ்போகும் அவசரமானாலும்
அன்னம் ஊட்டிவிட நேரமில்லாமல்
போகலாமா

பெற்றபிள்ளைகளிடம் மனம்விட்டு பேச
பெற்றவளுக்கு நேரமில்லை
பணப்பிடியில் சிக்கிக்கொண்டு
பாசத்தை ஒதுக்கி   பறந்து திரிகிறாள்

பணம்வந்து சேர்ந்தபின்
பந்தபாசம் வந்து கிட்டுமா
தள்ளி தள்ளிபோனப்பின்
சேயின் மனம் ஒட்டுமா

அவசர உலகில் எல்லாம் அத்தியாவசியம்
ஆனால்
அதைவிட பிள்ளைகளின் பாசம் முக்கியம்

மெழுகாய் உருகியபோதும்
சற்றுசாந்தாமாய் பிஞ்சுமனங்களையும்
நுகர்ந்து பாருங்கள்

அவர்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள்
அவர்கள்சொல்வதையும் காதுகொடுத்துகேளுங்கள்
அவர்களுடன் ஒன்றிவிளையாடுங்கள்

சேர்ந்து உண்ணுங்கள்
அணைத்து உறங்குங்கள்
சிரித்து மகிழுங்கள் சிறப்பாய் வாழுங்கள்............

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
நன்றி  :http://niroodai.blogspot.com

அன்னையே அமுதம் தா

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails