Friday, April 30, 2010

இஸ்லாமிய நிறுவனம் நடத்தும் புத்தகக் கண்காட்சி!

முதுவை ஹிதாயத் 


கொடைக்கான‌ல் சிறுவ‌ர் பூங்கா அருகில் உள்ள‌ க‌லைய‌ர‌ங்க‌ம் ப‌குதியில் வருகின்ற மே மாதம் 1 ஆம் தேதி முத‌ல், சென்னை இஸ்லாமிய‌ நிறுவ‌ன‌ம் டிர‌ஸ்ட் ( ஐ.எஃப்.டி.) நிறுவ‌ன‌ம் புத்த‌க‌க் க‌ண்காட்சி ஒன்றினை நட‌த்துகிற‌து என அத‌ன் இணைச்செய‌லாள‌ர் கே. ஜ‌லாலுத்தீன் தெரிவித்துள்ளார்.
சென்னை இஸ்லாமிய‌ நிறுவ‌ன‌ம் டிர‌ஸ்ட் ( ஐ.எஃப்.டி.) க‌ட‌ந்த‌ முப்ப‌து ஆண்டுகளாக‌ ப‌திப்புத்துறையில் த‌ட‌ம் ப‌தித்து வ‌ரும் நிறுவ‌ன‌ம். திருக்குர்ஆன், ந‌பிமொழி, ந‌பிவ‌ழிக‌ள் என‌ இருநூறுக்கும் மேற்ப‌ட்ட இஸ்லாமிய நூல்க‌ளைப் ப‌திப்பித்துள்ள‌ இந்நிறுவ‌ன‌ம் ப‌ல்வேறு வித‌ ஆக்க‌ங்க‌ளைத் த‌ந்து முத்திரை ப‌தித்து வ‌ருவ‌தை த‌மிழுல‌க‌ம் ந‌ன்க‌றியும்.
த‌மிழ் நூல்க‌ளோடு ஆங்கில‌ம், ஹிந்தி, ம‌லையாள‌ம், உர்தூ ஆகிய‌ மொழிகளிலும் நூல்க‌ள் இந்தப் புத்தக கண்காட்சியில் கிடைக்கும். டாக்ட‌ர் கே.வி.எஸ். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து, ஷேக் அகார் முஹ‌ம்ம‌து உள்ளிட்ட‌ அறிஞ‌ர்க‌ளின் உரைக‌ளது டிவிடி, விசிடி, திருக்குர்ஆன் மொழிபெய‌ர்ப்புக‌ள் அத‌ன் டிவிடிக்க‌ள், விசிடி உள்ளிட்ட‌வையும் க‌ண்காட்சியில் கிடைக்கும்.
மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு 94435 72654 / 99437 50015 ஆகிய‌ எண்க‌ளில் தொட‌ர்பு கொள்ள‌லாம். இக்க‌ண்காட்சி காலை ப‌த்து ம‌ணி முத‌ல் இர‌வு ஒன்ப‌து ம‌ணி வ‌ரை ந‌ட‌க்கும்.
Source : http://www.inneram.com/201004298129/book-fair-in-kodaikanal

Please  visit my new ISLAMIC BLOG

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails